கோவை, பிப்.25- பண்டைய காலங்களில் தமிழ் நாகரீகத்தில் பெண்கள் மிகப் பெரிய எழுத்தாளர்களாக, சிந்த னையாளர்களாக இருந்துள்ளனர் என கோவையில் நடைபெற்ற சிறு வாணி இலக்கிய திருவிழாவில் திரைக் கலைஞர் சிவகுமார் உரையாற்றி னார். தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை மற்றும் பொது நூலக இயக் ககம் சார்பில், கோவை பிஎஸ்ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி யில் சிறுவாணி இலக்கியத் திரு விழா சனியன்று துவங்கியது. கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார்பாடி தலைமை ஏற்றார். பொது நூலக இயக்குநர் க.இளம்பகவத், எழுத்தாளர் பவா.செல்லதுரை முன் னிலை வகித்தனர். இவ்விழாவில் பங்கேற்று திரைக் கலைஞர் சிவகுமார் உரையாற்று கையில், கொங்கு மண்ணில் சிறு வாணி இலக்கிய விழா நடத்த முடிவு செய்த தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரி வித்துக்கொள்கிறேன். உலகம் தோன் றிய காலத்தில் பூமி, தண்ணீர் அனை வருக்கும் பொதுவானதாக இருந் தது. அதன் பிறகு, அமெரிக்கா, ஆப் ரிக்கா, ஆசியா என பூமியை கூறு போட்டனர். அதேபோல், அட்லாண் டிக், பசிபிக், இந்து மகா சமுத்திரம் என தண்ணீரும் பிரிக்கப்பட்டன. அதையும் தொடர்ந்து, உலகில் யார் பெரியவர்கள் என்ற போட்டி யில் பிரிட்டிசாரின் காலனி ஆதிக்கத் தின் கீழ் பல நாடுகள் அடிமைப்பட்டு கிடந்தன. இதற்கெல்லாம் முன் பாக, நாட்டில் உள்ள அனைத்து ஊர்களும், என் ஊர் தான். நாட்டில் உள்ள அனைவரும் என் சொந்தங் கள் தான் என்று யாதும் ஊரே, யாவ ரும் கேளீர் என பரந்த மனதுடன் பாடிச் சென்றுள்ளார்
தமிழ்க்கவி ஞர் கனியண் பூங்குன்றனார். திருக் குறளின் விளக்கங்கள் மக்களிடம் சென்று சேரவில்லை. தமிழாசிரியர் விளக்கம் கூறி, தெளிவாகக் சொல்லிக் கொடுத்து, முன்பே படித்திருந்தால் மட்டுமே திருக்குறள் விளக்கங்கள் தெரிந் திருக்க முடியும். இதனால் தான், காமராஜர், அப்துல்கலாம், எம்.ஜி. ஆர், சிவாஜி போன்ற ஆளுமை களின் வாழ்வில் நடைபெற்ற உருக் கமான சம்பவங்களைச் சொல்லி, அதற்கு பொருத்தமான திருக்குற ளைத் தேர்வு செய்யும் பணியில் ஈடு பட்டேன். மூன்றரை ஆண்டுகள் இப் பணிகளில் ஈடுபட்டு, கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்டில் பல்லாயி ரம் பேர் நிறைந்த ஒரு அரங்கத்தில் திருக்குறளுக்கு, சம்பவங்களை கூறி விளக்கிப் பேசினேன், என் றார். இதைத்தொடர்ந்து, மார்க்சிய ஆய்வாளர் எஸ்.வி.ராஜதுரை, எழுத் தாளர் பவா.செல்லதுரை, ஸ்டா லின் குணசேகரன், எழுத்தாளர் நாஞ் சில் நாடன், ச.பாலமுருகன், விஜயா பதிப்பகத்தின் நிறுவனர் மு.வேலா யுதம் ஆகியோர் சிறப்புரையாற்றி னர். இந்த விழாவில், கோவை மாநக ராட்சி ஆணையர் மு.பிரதாப், பொது நூலக இணை இயக்குநர் அமுத வல்லி, பி.எஸ்.ஜி.கல்லூரி முதல் வர் பிருந்தா, கல்லூரி கல்வி இணை இயக்குநர் கலைச்செல்வி மற் றும் தமிழ் ஆர்வலர்கள், இலக்கிய வாதிகள், மாணவ, மாணவிகள் பல ரும் கலந்து கொண்டனர். ஆகி யோர் சிறப்புரையாற்றினர். முதல் நாள் நிறைவாக, செ.அமுதவல்லி நன்றி கூறினார்.