districts

img

செயற்கை சூரியனை உருவாக்கி எரிசக்தி உற்பத்தி

திருப்பூர், நவ.11- செயற்கை சூரியனை உருவாக்க வும், அதன் மூலம் எரிசக்தி உற்பத்தி  செய்ய முடியுமா என்று இந்தியா உள்ளிட்ட நாடுகள் கூட்டாக சேர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றன என விஞ்ஞானி த.வி. வெங்கடேஸ் வரன் தெரிவித்தார். திருப்பூர் ஏவிபி சி.பி.எஸ்.இ. பள் ளியில் வெள்ளியன்று ஒன்றிய அர சின் விஞ்ஞான் பிரசார் விஞ்ஞானி முனைவர் த.வி.வெங்கடேசுவரன் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தி யில் உரையாற்றினார். அப்போது  அவர் பேசுகையில், இந்திய சுதந்திரத் தின் போது இந்தியர்களின் சராசரி  வயது 30 ஆக இருந்தது. தற்போது  70 ஆக உயர்ந்துள்ளது. இது மாபெ ரும் அறிவியல் முன்னேற்றத்தினால் உண்டானது. வயது அதிகமாக ஆகும் போது அல்ஜைமர் என்ற மறதி நோய்  உண்டாகிறது. இது மூளை சம்பந்தப் பட்டிருப்பதால் இதற்கென பிரத்தி யேகமான முறையில் சரி செய்வதற் கென ஆய்வு இந்தியாவில் பெங்களூ ருவில் நடைபெற்று வருகிறது.  

கால நிலை மாற்றத்தால் வளி மண்டலத்தில் கார்பன் டை ஆக் சைடு கூடிவருகிறது. தொழிற்புரட் சிக்கு முன்பு காற்றில் 280 ஆக இருந்த பி.பி.எம். தற்போது 400க்கும் அதி கமாகிவிட்டது. இது இன்னும் உய ரும். அப்படி கார்பன் டை ஆக்ஸைடு காற்றில் உயரும் போது விவசாயத் தில் நெல் கோதுமை விளைச்சலில், உணவு  உற்பத்தியில் பாதிப்பை ஏற் படுத்துமா என பஞ்சாப்பில் ஆய்வு நடைபெற்று வருகிறது.  தற்போது புதை வடிவ எரிபொரு ளுக்கு மாற்றாக காற்றாலை, சூரிய சக்தி ஆற்றலை நாம் பயன்படுத்தி வருகிறோம். இது போதுமானதல்ல.  எதிர்காலத்தில் நாம் பயன்படுத்தும் படியாக ஐ.டி.ஈ.ஆர் என்ற செயற்கை  சூரியனை உருவாக்கி அதன் மூலம் எரிசக்தியை உருவாக்கும் ஆய்வு பிரான்சில், இந்தியா, சீனா, ஐரோப் பிய யுனியன், ஜப்பான், ரஷ்யா, அமெரிக்கா போன்ற நாடுகள் கூட்டு  முயற்சியாக செய்து வருகின்றன. இந்த ஆய்வு 2035 ஆம் ஆண்டு முடி வடையும் என எதிர்பார்க்கப்படுகி றது. இந்த ஆய்வு வெற்றிபெற்றால் கிரீன் எனர்ஜி சாத்தியம் என மாண வர்களுக்கு விளக்கினார். இதைத் தொடர்ந்து மாணவர்களின் கேள்வி களுக்கு பதில் கூறினார்.  முன்னதாக ஏவிபி பள்ளிக் குழு மங்களின் சேர்மன் ஏவிபி கார்த்தி கேயன் இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். மாணவர்கள் திரளான வர்கள் பங்கேற்றனர்.