திருப்பூர், டிச. 14- திருப்பூர் மாணவர்களின் அறிவி யல் ஆய்வு தேசிய அளவிலான போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள் ளது. தமிழ்நாட்டில் தேசிய குழந்தை கள் அறிவியல் மாநாடு (NCSC) ஒன் றிய அரசின் அறிவியல் தொழில்நுட் பத் துறை உடன் இணைந்து தமிழ் நாடு அறிவியல் இயக்கம் கடந்த 30 ஆண்டுகளாக ஒருங்கிணைத்து நடத்தி வருகிறது. “ஆரோக்கியம் மற் றும் நல்வாழ்வுக்கான சுற்றுச்சூழல் அமைப்புகளை புரிந்து கொள்ளு தல்” என்ற கருப்பொருளை தலைப் பாகக் கொண்டு தமிழகம் முழுவதும் உள்ள 10 வயது முதல் 17 வயது வரை உள்ள மாணவர்கள் இரண்டு பேர் ஒரு குழுவாக இருந்து வழிகாட்டி ஆசிரியர் உதவியுடன் இவ்வாண்டுக் கான ஆய்வுகளை செய்தனர். இதுகுறித்து தமிழ்நாடு அறிவி யல் இயக்க திருப்பூர் மாவட்ட செய லாளர் கெளரிசங்கர் கூறுகையில், இவ்வாண்டு செப்டம்பர் மாதத்தில் திருப்பூர் முதன்மை கல்வி அலுவ லர், திருப்பூர், பல்லடம், தாராபுரம், உடுமலை ஆகிய நான்கு கல்வி மாவட்டங்களில் பணியாற்றும் அரசு மற்றும் மெட்ரிக் பள்ளிகளைச் சேர்ந்த 285 வழிகாட்டி ஆசிரியர்க ளுக்கு ஆய்வறிக்கை வழங்குவது தொடர்பான பயிற்சிகள் வழங்கப் பட்டன.
மூன்று மாத காலம் ஆய்வு களை செய்த 285 மாணவர்கள் தங்க ளின் 143 ஆய்வு அறிக்கைகளை அவி நாசிபாளையம் ஜெய்ஸ்ரீராம் கல்லூரி யில் நடைபெற்ற திருப்பூர் மாவட்ட அளவிலான தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் சமர்ப்பித்த னர். மாணவர்களால் சமர்ப்பிக்கப் பட்ட ஆய்வறிக்கைகளில் இருந்து 15 சிறந்த ஆய்வறிக்கைகள் டிசம்பர் 10, 11 ஆகிய தேதிகளில் தூத்துக் குடி அன்னை தெரசா பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற மாநில அள விலான தேசிய குழந்தைகள் அறிவி யல் மாநாட்டுக்கு திருப்பூர் மாவட்டம் சார்பாக அனுப்பப்பட்டன. தமிழகம் முழுவதும் இருந்து வந்த 550 ஆய்வ றிக்கைகளில் இருந்து திருப்பூர் வடக்கு ஒன்றியத்தைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வள்ளிபுரம் மாணவிகளின் ஆய்வறிக்கையா னது. டிசம்பர் 28,29 ஆம் தேதிகளில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெறும் தேசிய மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட உள்ளது என்றார். முன்னதாக, துத்துக்குடி -மாநில குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் விவசாய நில மேம்பாடு என்ற தலைப் பில் ஆய்வறிக்கைகளை சமர்ப்பித்த திருப்பூர் வள்ளிபுரம் பள்ளி மாணவி கள் எம்.ஸ்ரீமதி, எஸ்.பவிஷ்கா ஆகி யோர், ஆசிரியர் சேவியர் மேகலா மற் றும் வள்ளிபுரம் பள்ளித் தலைமை ஆசிரியை ஜோதிமணி, என்சிஎஸ்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீராம் குமார், இணை ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன், தமிழ்நாடு அறிவி யல் இயக்க மாவட்ட பொருளாளர் கார்த்திக் ஆகியோருடன் சென்று திருப்பூர் முதன்மை கல்வி அலுவலர் திருவளர்ச்செல்வி ஆகியோரை சந் தித்து தங்கள் ஆய்வுகளை குறித்து கூறி வாழ்த்துப் பெற்றனர்.