தூத்துக்குடி,டிச.24- தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள நிவாரணப்பணியில் அறிவியல் இயக் கத்தினர் ஈடுபட்டனர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தூத்துக்குடி மாவட்டக்குழு சார்பில் பேரிடர் கால நண்பன் திட்டத்தில் பயிற்சி பெற்ற இராமநாதபுரம் இளை ஞர்கள், நிவாரணப் பொருட்களை தூத் துக்குடி அறிவியல் இயக்கத்தில் நேரில் வழங்கினர். அறிவியல் இயக்க தூத்துக்குடி மாவட்டச்செயலாளர் பேராசிரியர் செ.சுரேஷ்பாண்டி தலைமையில் வெள்ள நிவாரணப்பணிகள் நடை பெற்று வருகின்றன. மழைக்கால பேரி டர் உதவிக்காக மழைத்தோழி எனும் நிவாரண உதவிமையம் துவங்கப்பட்டு, தன்னார்வ குழுக்களிடம் நிவாரண உதவிகோரப்பட்டது. அதன்படி காயல்பட்டினம் பகுதி யில் துணைத்தலைவர் ஆசிரியர் மணிகண்டன் தலைமையில் காயல் பட்டினம், இரத்தினகிரி, சல்லிதிரடு, வடக்கு நல்லூர் கிராமங்களிலும், சாத்தான்குளம் பகுதியில் உமாமகேஷ் வரி தலைமையில் ஆர்.சி தெரு, அண்ணா நகர், காந்திநகர் பகுதியிலும், அடைக்கலாபுரம் பள்ளி தலைமையா சிரியை சகோதரி விக்டோரியா தலை மையில் அடைக்கலாபுரம், சுற்றிய கிராமங்களிலும், ஆழ்வார் திருநகரி பகுதியில் வானவில் மன்ற கருத்தா ளர் ஜெயா தலைமையிலும், ஆத்தூர் முகாம் பகுதியில் செயலாளர் வீரசுதா கர் தலைமையிலும், புதூர் பகுதி யில் மாவட்டப் பொருளாளர் கார்த்திகா குழுவினரும், விளாத்திகுளம் பகுதி யில் தனலட்சுமி குழுவினரும் நிவார ணப்பணியில் ஈடுபட்டனர். தூத்துக்குடியில் சுடலைமணி குழு வினரும் திருவைகுண்டம், கருங்கு ளம் பகுதியில் துளசி கல்லூரி இயக் குநர் கௌரவத்தலைவர் பேராசிரியர் சாந்தகுமாரி, மோகன் தலைமையில், மாணவியர்கள் மற்றும் இராமநாதபு ரம் பேரிடர் கால நண்பன் குழுவினர் புளியங்குளம், அகரம், முறப்ப நாடு, வல்லநாடு, அருந்ததியர் காலனி, வசவப்புரம், அனவரதநல்லூர், மணக் கரை, செய்துங்கநல்லூர், நாட்டார் குளம், கருங்குளம் கிராமங்களில் 1 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நிவார ணங்களை நள்ளிரவு 12.15 மணிவரை வழங்கினர். மேலும் புளியங்குளம் பகுதியில் வெள்ளநிவாரணப் பணிகளில் சிறப் பாக செயல்பட்டு வரும் திரைப்பட இயக்குநர் மாரிசெல்வராஜை நேரில் சந்தித்து மாவட்டக்குழு சார்பில் புத்த கங்கள் வழங்கி பாராட்டி சால்வை அணிவிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட வெள்ளப் பாதிப்புகளுக்கான காரணம் மற்றும் தடுப்பு முறைகள் குறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில வளர்ச்சிக்குழு சார்பில் ஆய்வுக்குழு அமைக்கப்பட்டு, மாவட்ட நிர்வாகம் மற்றும் முதலமைச்சரிடம் ஆய்வ றிக்கைகள் விரைவில் சமர்ப்பிக்கப்பட வுள்ளது குறிப்பிடத்தக்கது.