திருப்பூர், டிச.9- நஞ்சப்பா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி யில் தேசிய அளவிலான அறிவியல் மனப் பான்மை பிரச்சாரம் துவக்க விழா சனியன்று நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் 31 ஆவது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்குபெற்ற குழந்தைகளுக்கான பரிசளிப்பு விழா, விஞ்ஞானியுடன் சந்திப்பு மற்றும் தேசிய அளவிலான அறிவியல் மனப்பான்மை பிரச்சாரம் துவக்க விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. இந்நிகழ்விற்கு, அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர், கிருஷ்ணமூர்த்தி தலைமை ஏற்றார். மாவட்டச் செயலாளர் கெளரிசங்கர் வர வேற்று பேசினார். திருப்பூர் மாநகராட்சி துணை மேயர் ரா.பாலசுப்பிரமணியம், 36 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் பெ.திவாகரன், அறிவியல் இயக்க மாநில செயலாளர் தியாகராஜன். மாநகராட்சி சுகாதாரக்குழு தலைவர் கவிதா நேதாஜி கண்ணன், முன் னாள் மாவட்டத் தலைவர் ஈஸ்வரன், அறிவி யல் இயக்கம் மாநில செயற்குழு உறுப்பினர் ராமமூர்த்தி ஆகியோர் குழந்தைகளை வாழ்த்தி, பரிசளித்தனர். இதில் 450க்கும் மேற் பட்ட குழந்தைகள் மற்றும் பள்ளி ஆசிரி யர்கள் பெற்றோர்கள் கலந்துகொண்டனர். மேலும், இம்மாநாட்டில் திருப்பூர் மாநக ராட்சி துணை மேயரிடம் மாணவர்கள் பயன் பெறும் வகையில் அறிவியல் பூங்கா அமைக்க வேண்டும் என தமிழ்நாடு அறி வியல் இயக்கம் சார்பில் கோரிக்கை வைக் கப்பட்டது. முடிவில் மாவட்டத் துணைத்த லைவர் கார்த்திக் நன்றி கூறினார்.