திருப்பூர் மாவட்டம், வள்ளிபுரம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன் றிய பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவிகள் ம.ஸ்ரீமதி மற்றும் ச.பவிஷ்கா ஆகியோரின் ஆய்வுக்கட் டுரை குஜராத்தில் நடைபெறும் 30 ஆவது தேசிய குழந்தைகள் அறிவி யல் மாநாட்டிற்கு தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது. குழந்தைகள் மற்றும் பள்ளி மாண வர்களின் மத்தியில் அறிவியல் மனப் பான்மையை மேம்படுத்த, ஆய்வு கண் ணோட்டத்தை வளர்க்கவும் 1993 ஆம் ஆண்டு முதல் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடைபெறுகிறது. மாவட்ட அளவில் போட்டிகள் நடத் தப்பட்டு அதிலிருந்து தேர்ந்தெடுக்கப் படும் ஆய்வுகள் மாநில அளவிற்கும், மாநில அளவில் வெற்றி பெற்று தேர்ந் தெடுக்கப்படும் ஆய்வுகள் தேசிய மாநாட்டிற்கும் தேர்ந்தெடுக்கப்படும். தேசிய அளவில் வெற்றி பெறும் மாண வர்களுக்கு குடியரசு தலைவரின் மூலம் இளம் விஞ்ஞானி பட்டம் வழங்கப் படும். இதில் அரசு பள்ளி, சிபிஎஸ்இ, மெட்ரிக் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது ஆய்வை சமர்ப் பிப்பார்கள்.
தமிழ்நாட்டில் 28 ஆண்டுகளாக தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தேசி யக் குழந்தைகள் அறிவியல் மாநாட்டை ஒருங்கிணைத்து நடத்தி வருகிறது. இந்த ஆண்டு மாநில அளவிலான 30 ஆவது தேசிய குழந்தைகள் அறிவி யல் மாநாடு டிசம்பர் 13, 14, 15 தேதி களில் தூத்துக்குடியில் நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட் டங்களில் இருந்தும் தேர்ந்தெடுக்கப் பட்ட 550 ஆய்வுகளில் 10 மாணவர்க ளின் ஆய்வுகள் தேசிய அளவில் குஜ ராத்தில் நடைபெறும் தேசிய குழந்தை கள் அறிவியல் மாநாட்டுக்கு தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளது. இதில், திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற மாவட்ட மாநாட்டில் 40 பள்ளிகளைச் சேர்ந்த 300 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். அதிலி ருந்து மாநில மாநாட்டுக்கு 15 ஆய்வு கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டது. அதில் திருப்பூர் மாவட்டம், வள்ளிபுரம் கிராமம், ஊராட்சி ஒன்றிய பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவிகள் ம.ஸ்ரீமதி, ச.பவிஷ்கா ஆகியோரின் ஆய்வும் ஒன்று. இவர்களது ஆய்வு கட்டுரை தேசிய அளவிலான மாநாட் டிற்கு தேர்வு செய்யப்பட்டது. ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக் கான சுற்றுச்சூழல் அமைப்பை புரிந்து கொள்ளல் என்ற தலைப்பில் ஆய்வு செய்தனர். உடல் மற்றும் மனநலம் ஆரோக்கியமாக இருப்பதற்கு நல்ல உணவு முறையும், நமது சுற்றுச்சூழ லும் மிக முக்கிய பங்காற்றுகிறது. எனவே சுற்றுச்சூழலை பற்றி தெரிந்து கொண்டு, அதில் உள்ள பிரச்சனை களை தீர்வு காண ஆய்வு செய்யப்பட் டது.
வள்ளிபுரம் கிராமத்தை சுற்றி யுள்ள விவசாய நிலங்கள் குறைந்து வருவதும், விவசாய நிலங்கள் வீடு களாய் விற்பனை செய்வதற்கான நிலங் களாக மாறி வருவதையும், மேலும் காற்று மாசுபாடு, நோய் தொற்று அதி கரிப்பதற்கான காரணம் என்ன? கொசுக்கள் பெருக காரணம் என்ன? விவசாய நிலங்கள் குறைவதால் காற்று மாசுபாடு ஏற்படுகிறதா? தும்பி கள் குறைவதற்கான காரணம் என்ன? இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் ஆரோக்கியம் மற்றும் நல் வாழ்வுக்கான சுற்றுச்சூழல் அமைப்பை புரிந்து கொள்ளல் என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அருகாமையில் உள்ள விவசாய நிலங்களுக்கு சென்று பயிர்கள் வளர் வதை கவனித்து, தொடர்ந்து பயிர் களை தாக்கும் பூச்சிகள் குறித்தும், அவற்றைய அழிக்க பயன்படுத்தும் பூச்சிக்கொல்லிகள் குறித்தும் விவசா யிகளிடம் கேட்கப்பட்டது. கிடைத்த தகவலின், செயற்கை உரங்கள், பூச் சிக்கொல்லிகள் ஆகியவற்றினால் எவ் வாறு வயல் நிலங்கள் பாதிக்கப்படு கின்றன என்பதை குறித்து புத்தகத்தின் வாயிலாகவும், இணையதளம் வாயி லாகவும் தகவல்கள் திரட்டப்பட்டது.
இதைத்தொடர்ந்து, விவசாய நிலங் கள் குறைந்து வருவதால் அதிக விளைச்சல் செய்வதற்காக விவசாயி கள் செயற்கை உரங்கள் பயன்படுத் துவதும். இயற்கை உரங்கள் மற்றும் இயற்கை பூச்சிக்கொல்லிகள் குறித்த தகவல்கள் கிடைக்காமல் விவசாய நிலங்களில் கெமிக்கல் பூச்சிக்கொல் லிகள் பயன்படுத்துவதால், கொசுக் களின் லாவாக்களை உண்ணும் தும்பி கள் குறைந்து கொசுக்கள் பெருகி நோய் தொற்று ஏற்படுவது தெரிய வந் தது. மேலும் விவசாய நிலங்கள் குறை வதால் தாவரங்கள் எடுத்துக்கொள் ளும் கார்பன் டை ஆக்சைடு அளவு அதிகரித்து காற்று மாசுபாடு ஏற்படு வது தெரிந்தது. இதைதொடர்ந்து முதல் கட்டமாக வாழை தோப்பு மற்றும் நிலக்கடலை தோட்டத்தில், நிலங்களை பாதிக்கும் கெமிக்கல் உரங்கள் பயன்படுத்தா மல், இயற்கையாக கிடைக்கக்கூடிய தாவரங்கள் மற்றும் கழிவுகளின் மூலம் உருவாக்கப்பட்ட (தொழு உரம், மக் கிய உரம், பசுந்தழை உரம், மண்புழு உரம்) இயற்கை உரங்கள் பயன்படுத் தப்பட்டது. மேலும் நச்சுத்தன்மை வாய்ந்த பூச்சிக்கொல்லிக்கு பதிலாக (வேம்பு, துளசி, ஆடாதொடை, நொச்சி, அகத்தி, புகையிலை, பூண்டு, மிளகாய்) போன்ற பூச்சி கொல்லிகள் பயன்படுத்தப்பட்டது. மேலும், சிலந்தி, ஊசிதட்டான், தரைவண்டு உள்ளிட்ட நல்ல பூச்சிகளை ஈர்க்க தட்டப்பயிர் வரப்புகளில் நடப்பட்டது. இதைய டுத்து தொடர்ந்து ஆய்வு தொடங்கப் பட்ட நாள் முதல் விளைநிலங்களுக்கு சென்று கண்காணித்ததில் தும்பி போன்ற நல்ல பூச்சிகளின் எண்ணிக்கை கூடியிருந்தது தெரியவந்தது.
திருப்பூர் மாவட்டத்தின் குக்கிரா மத்தில் உள்ள வள்ளிபுரம் கிராமத் தைச் சேர்ந்த ஓட்டுநர் சரவணகுமாரின் மகள் பவிஷ்கா மற்றும் இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் கடை வைத் துள்ள மணிகண்டனின் மகள் ம. ஸ்ரீமதி ஆகிய ஊராட்சி ஒன்றிய பள்ளி மாண விகள், சிபிஎஸ்இ மற்றும் மெட்ரிக் பள்ளி மாணவர்களோடு போட்டியிட்டு வெற்றி பெற்று தேசிய அளவில் நடை பெறும் மாநாட்டிற்கு தேர்வு செய்யப் பட்டுள்ளது அரசு பள்ளியின் தேவை யையும் முக்கியத்துவத்தையும் காட் டுகிறது. மேலும் அரசு பள்ளிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கி பள்ளிகளின் எண் ணிக்கையை அதிகரித்து, தரம் உயர்த் துவதன் மூலம் குழந்தை தொழில் முறை ஒழித்து, ஏழை, எளிய மாண வர்களின் கல்வி கனவுகளை நன வாக்க முடியும் என்றும் உணர்த்து கிறது. இந்த ஆய்வுக்கு உறுதுணையாக இருந்த பெற்றோர்களுக்கும், பள்ளி தலைமை ஆசிரியை ஜோதிமணி, வழிகாட்டி ஆசிரியர் சேவியர் மேகலா மற்றும் அனைத்து வகுப்பு ஆசிரியர் கள் வ.ரோஸ்லின் மேரி, தர்மராஜ், ஜெயந்தி, சரண்யா, தேவி, தீபா ரமேஷ், ஊராட்சிமன்ற தலைவர் முருகேசன் மற்றும் வட்டார கல்வி அலுவலர்க ளுக்கு மாணவிகள் நன்றி தெரிவித்த னர்.
திருப்பூர் அருகே ஒரு சிறு கிராமத் திலிருந்து இந்தியாவின் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற் காக குஜராத் மாநிலம் அகமதாபாத் செல்லும் இந்த இளம் விஞ்ஞான மாணவிகளுக்கு பாராட்டு குவிந்து வருகிறது. பூமி வெப்பமடையும் சூழ்நிலை யில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் இயற்கை சார்ந்த வாழ்க்கையை அறி வியல் பூர்வமாக ஆய்வு செய்துள்ளது சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் வரவேற் பையும், பாராட்டையும் பெற்றுள்ளது.
- ஆண்டனி லிவிங்ஸ்டன்