சேலம், மே 10- சேலத்திலுள்ள அரசுப் பள்ளியில் நடைபெற்ற அறி வியல் திருவிழாவில் ஏராள மான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு அரசின் பள்ளி கல்வித்துறையின் சார்பில் கோடை விடுமுறையில், அறிவியல் மற்றும் கணித செயல்பாடுகள் குறித்து, அறிவியல் திருவிழாக்கள் தமிழ்நாடு முழுவதும் தினந்தோறும் நடை பெற்று வருகிறது. இதன்ஒருபகுதியாக சேலம் மாவட்டம், கிச்சிப்பாளையம் புதுத் தெருவில் செயல்பட்டு வரும் நகராட்சி துவக்கப்பள்ளியில் இல்லம் தேடி கல்வி மையங்களின் குழந்தைகளை ஒருங்கி ணைத்து புதனன்று “ஆயிரமாயிரம் அறி வியல் திருவிழா” நிகழ்ச்சி நடைபெற்றது. இல்லம் தேடி கல்வி மையம் தன்னார்வலர் சூர்யா வரவேற்றார். வட்டார வளமைய ஆசிரியர் விஜி, நகராட்சி துவக்கப்பள்ளி தலைமையாசிரியர் சாந்தி, ஆசிரியர் மல்லிகா ஆகியோர் வாழ்த்தி பேசினர். இதில்,தமிழ்நாடு அறிவியல் இயக்கத் தின் மாவட்ட செயலாளர் சுரேஷ் நோக்க உரையாற்றி, அறிவியல் பாடலுடன் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். சேலம் நகர்ப்புற வானவில் மன்ற கருத் தாளர் ஐடாபிரிஸில்லா, இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள், தமிழ்நாடு அறிவியல் இயக்க செயல்பாட்டாளர்கள் இணைந்து அறிவியல் பரிசோதனைகள், கணித புதிர் கள், அறிவியல் அற்புதங்களை விளக்குதல், காகித மடிப்புகலை போன்ற செயல்பாடு களை மாணவர்களுக்கு செய்து காண்பித் தனர். இந்நிகழ்ச்சியில் அறிவியல் புத்தக கண் காட்சி நடைபெற்றது. 30க்கும் மேற்பட்ட குழந்தைகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.