உடுமலை, டிச.14- தமிழ்நாடு அறிவியல் இயக்கம் உடுமலை கிளை சார்பாக துளிர் அறிவியல் வினாடி வினா போட்டியானது உடுமலை பார்க் எக்ஸ்டேன்ஷன் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடை பெற்றது. அறிவியல் இயக்க உடுமலை கிளை தலைவர் செல்லத் துரை இந்நிகழ்விற்கு தலைமை தாங்கினார். துணை தலைவர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். சிவசக்தி காலனி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பாலசுப்பிரமணி நிகழ்வினை துவக்கி வைத்து உரையாற்றினார். வினாடி வினா போட்டிகளை குப்பம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சிவானந்தம், ஆசிரி யர்கள் மாரிமுத்து , ராஜசேகர், மற்றும் லீலா கண்ணன் ஆகி யோர் நடத்தி கொடுத்தனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு லயன்ஸ் கிளப் ஆப் உடுமலை ராயல்ஸ் சார்பாக பரிசுகள் வழங்கப் பட்டன. இந்நிகழ்வில் நிர்வாகிகள் யோகானந்த், சுந்தரராஜ் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். திருப்பூர் மாவட்ட அறிவியல் இயக்க செயலாளர் கௌரிசங்கர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். கிளை பொருளாளர் மணி நன்றியுரை வழங்கினார். இதில், உடுமலை பகுதியில் உள்ள 10க்கும் என்ற மேற் பட்ட பள்ளிகளில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் திரளாக பங்கேற்றனர். வினாடி வினா போட்டியில் பங்கேற்ற மாண வர்களுக்கு வட்டார கல்வி அலுவலர்கள், தலைமையாசி ரியர்கள், ஆசிரியர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர்.