சேலம், ஜன.9- எடப்பாடி அருகே கட்டுப்பாட்டை இழந்த தனியார் பள்ளி வாகனம் ஏரிக்குள் பாய்ந்து விபத்துள்ளானது. ஈரோடு மாவட்டம், அந்தியூரில் உள்ள தனியார் பள்ளி யில் சேலம் மாவட்டம், அரசிராமணி, தேவூர், கல்வடங் கம், கோனேரிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்கள் தினமும் பள்ளி வாகனத்தில் பள்ளிக்கு சென்று வருகின்றனர். அதன்படி, திங்களன்று காலை வழக்கம் போல் பள்ளி வாகனம் மாணவ, மாணவிகளை ஏற்றிச்செல்ல வந்தது. எடப்பாடி அருகே உள்ள குள்ளம்பட்டி ஏரி பகுதி யில் வாகனம் வந்து கொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் ஏரியின் தண்ணீர் இல் லாத பகுதிக்குள் பாய்ந்தது. பள்ளி வாகனத்தில் மாணவ, மாணவிகள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. ஓட்டுநர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதுகுறித்து தகவலறிந்த தேவூர் காவல் துறை யினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண் டனர். தொடர்ந்து பொக்லைன் மூலம் பள்ளி வாகனம் மீட்கப் பட்டது.