தருமபுரி, மார்ச் 3- பேருந்து படியில் பயணிக்கும் அரசுப்பள்ளி மாணவர்களின் நலன் கருதி தண்டுகாரம்பட்டியில் இருந்து ஏலகிரிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம், தண்டுகாரம்பட்டியிலி ருந்து சுமார் 50க்கும் மேற்பட்ட மாண வர்கள் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை ஏலகிரி அரசு மேல் நிலைப் பள்ளியில் கல்வி பயின்று வரு கின்றனர். தண்டுகாரம்பட்டியிலிருந்து ஏலகிரி 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. எனவே, ஏலகிரிக்கு செல்ல நாகாவதி அனைகட்டிலிருந்து தண்டு காரம்பட்டி , ஏலகிரி வழியாக தரும புரிக்கு அரசு பேருந்து இயக்கப்படு கிறது. இந்த பேருந்தில் ஏராளமான வர்கள் செல்வதால், நிற்ககூட முடி யாது, மாணவர்கள் பேருந்தினுள் ஏற முடியாமல் படியில் தொங்கியபடி பய ணிக்கின்றனர். மேலும், காலை நேரங் களில் தருமபுரிக்கு வேலைக்கு செல் லும் தொழிலாளர்கள், அரசு ஊழியர் கள், விவசாயிகள் என ஏராளமானோர் பேருந்தில் பயணம் செய்ய வேண்டி யுள்ளது. எனவே, காலை நேரத்தில் தண்டு காரம்பட்டி கிராமத்தின் வழியாக பள்ளி மணவர்கள் பள்ளிக்கு செல்ல ஏதுவாக கூடுதல் பேருந்துகள் இயக்க வேண் டும் என அப்பகுதி பொதுமக்களும், மாணவர்களின் பெற்றோர்களும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.