ஈரோடு, மே 2- ஜூலை 10-ல் பள்ளிக் கல்வி ஆணையர் அலுவல கம் முற்றுகையிடப்படும் என தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் அறிவித் துள்ளது. தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் தலைவர் கு.தியாகராஜன் தலைமை யில் ஈரோட்டில் செவ்வா யன்று நடைபெற்றது. ஈரோடு மாவட்ட செயலாளர் பி.வி.ராமசாமி வர வேற்றார். மாநில அமைப்பு செயலாளர் க. வெங்கட்ராமன், தணிக்கையாளர் அ.ஜெய ராணி, மாநிலச் செயலாளர் ஹெர்பர்ட் ராஜ சிங் உள்ளிட்டோர் பங்கேற்ற பொதுக்குழு வில், மாநில பொதுச்செயலாளர் அ.சங்கர் வேலை அறிக்கையையும், நிதிநிலை அறிக்கையை மாநிலப் பொருளாளர் க.சு.பிரகாசம் ஆகியோர் முன்வைத்தனர். இதில் அரசு, மாநகராட்சி, நகராட்சி, நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து வகையான இடைநிலை ஆசிரி யர்களையும், பட்டதாரி ஆசிரியர்கள் பணி புரியும் இடத்திலேயே உட்படுத்த வேண்டும். இந்த ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி ஜூலை 10 ஆம் தேதி பள்ளிக் கல்வி ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முடிவில், மாநில இணைச்செயலாளர் பிலோமினா நன்றி கூறினார்.