districts

img

பட்டியலின மக்களின் கோரிக்கை கையெழுத்து இயக்கம்

ஈரோடு, அக்.30- பட்டியலின மக்களின் கோரிக்கை சாச னத்தாள் கையெழுத்து பெறும் இயக்கத்தின் தொடக்க விழா ஈரோடு, கல்யாணசுந்தரம் இல்லத்தில் நடைபெற்றது. தலித் மக்களின் மீதான தாக்குதல்களை தடுத்து நிறுத்தவும், அவர்களின் உரிமை களை நிலைநாட்டவும் வலியுறுத்தி நடை பெறும் இயக்க நிகழ்விற்கு தமிழ்நாடு மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட அமைப் பாளர் சி.இராசன் தலைமை வகித்தார். பொது  சொத்துகளில் பட்டியலின மக்கள் உரிய பங் கினைப் பெற சட்டம் இயற்ற வேண்டும். நில மற்றவர்களுக்கு 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும். பட்டியலினத்தவருக்கு வழங்கப் பட்ட நிலங்கள் அவர்களிடமே இருப்பதை உறுதி செய்திட வேண்டும். தனியார் துறை யில் இட ஒதுக்கீட்டை கட்டாயமாக்கிட வேண் டும். பட்டியலின, பழங்குடியின வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீர்த்து போகாத வகையில் அமலாக்க வேண்டும். சாதிவாரி கணக்கெ டுப்பு மற்றும் சாதி ஆணவ படுகொலை களைத் தடுத்திட தனி சட்டம் இயற்ற வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த கையெ ழுத்து இயக்கத்தில் பிரதானமாக முன்வைக் கப்பட்டுள்ளது. முன்னதாக இந்நிகழ்வில், மார்க்சிஸ்ட்  கட்சியின் மூத்த தலைவர் கே.துரைராஜ் கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத் தார். இதில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஆர். ரகுராமன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணைத்தலைவர் பி.பி.பழனிசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் எம்.சாதிக், சமூக நீதி கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கண.குறிஞ்சி, தமிழ் மாநில விவசாய தொழி லாளர் சங்க மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் ஜி.வெங்கடாசலம், சமூக நீதி மக்கள் கட்சி  தலைவர் இரா.வடிவேல்ராமன், அருந்ததிய முன்னேற்ற பேரவை தலைவர் ஆ.சாமிநா தன், தலித் விடுதலை இயக்கம் பொன்.சுந்த ரம், கொங்கு விடுதலை புலிகள் விஸ்வநா தன் மற்றும் ஆதித் தமிழர் பேரவை மாநில தலைமை நிலைய செயலாளர் இரா. வீர வேந் தன் ஆகியோர் உரையாற்றினர். முடிவில்,  தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் எம்.அண்ணாதுரை நன்றி கூறினார்.