தருமபுரி, ஜூலை 13- அரசு ஊழியர்களைப் போன்று, மருத்துவப்படி மற்றும் மருத்து வக் காப்பீடு வழங்க வேண்டும் என சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய் வூதியர் சங்கம் வலியுறுத்தியுள் ளது. தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத் தின் தருமபுரி மாவட்ட பேரவை கூட் டம், சனியன்று தருமபுரி ஊர்தி ஓட்டு நர் சங்க அலுவலகத்தில் நடைபெற் றது. சங்கத்தின் மாவட்டத் தலை வர் பி.சுப்பிரமணி தலைமை வகித் தார். மாவட்டச் செயலாளர் ஆர்.மதலைமுத்து, சி.கண்ணையன் ஆகியோர் அறிக்கைகளை முன் வைத்தனர். தமிழ்நாடு அரசு போக் குவரத்து கழக ஓய்வூதியர் சங்க மாநில இணைச்செயலாளர் கே. குப்புசாமி பேரவையை துவக்கி வைத்து உரையாற்றினார். சத்து ணவு ஓய்வூதியர் சங்க மாநில துணைத் தலைவர் இ.கிருஷ்ணமூர்த்தி, மாநி லப் பொருளாளர் ஜி.ஆனந்த வள்ளி, முன்னாள் மாநில துணைத் தலைவர் எம்.கணேசன் ஆகியோர் சிறப்புறையாற்றினர். அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாவட் டச் செயலாளர் எம்.பெருமாள், ஜாக்டோ - ஜியோ நிதி காப்பாளர் கே.புகழேந்தி ஆகியோர் வாழ்த்தி பேசினர். இக்கூட்டத்தில், தமிழ்நாடு சத்து ணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூ தியர்களுக்கு மாதாந்திர ஓய்வூதிய மாக ரூ.6750 வழங்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல அகவிலைப்படி, மருத்துவப் படி மற்றும் மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும். சத்துணவு ஓய் வூதியர்களின் உண்ணாவிரதப் போராட்டத்தின்போது, ஏற்றுக் கொண்ட ஈமச்சடங்கு தொகையாக ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும். ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட் டத்தை தருமபுரி மாவட்டத்திலுள்ள அனைத்து மக்களுக்கும் சென்ற டைய வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.