districts

img

தூய்மை பணியாளர்கள் போராட்டம்: நவ.5க்குள் உரிய தகவல்

தீபாவளி பண்டிகையின் போது பொதுமக்கள் பட்டாசு கள் வெடித்த நிலையில், அந்த  குப்பைகள் பல்வேறு பகுதி களில் அகற்றப்படாமல் உள் ளன. மாநகராட்சி தூய்மை பணி யாளர்களின் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தால் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் ஆயிரம் டன் குப்பைகள் தேக் கம் அடைந்ததுள்ளது. இதனால் குப்பைத்தொட்டிகள் பல இடங் களில் நிரம்பி, அப்பகுதிகளில் துர்நாற்றம் வீசி வருகிறது.

கோவை, அக்.26- ஒப்பந்த தூய்மை பணியாளர் களின் ஊதிய உயர்வு குறித்து மாநக ராட்சி நிர்வாகத்தின் சார்பில் இறுதி முன்மொழிவுகள் நவ.5 ஆம் தேதிக் குள் அனுப்பி வைத்து உரிய தகவல் தொழிலாளர்களுக்கு தெரிவிக்கப் படும் என கோவை மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப் அறிவித்துள் ளார். கோவை மாநகராட்சியில் பணி யாற்றி வரும் ஒப்பந்த தூய்மை பணி யாளர்கள் குறைந்தபட்ச ஊதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி கடந்த அக்.2 ஆம்  தேதியன்று போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதையடுத்து நடைபெற்ற பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட் டதையடுத்து மீண்டும் பணிக்கு சென் றனர். ஆனால், பேச்சுவார்த்தையில் கூறியது தொடர்பாக எந்த அறிவிப் பும் வெளியாகவில்லை எனக்கூறி மீண்டும் செவ்வாயன்று தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடு பட்டனர். இதைத்தொடர்ந்து புத னன்று கோவை மாநகராட்சி பிரதான  அலுவலகக் கூட்டரங்கில் தூய்மை பணியாளர்கள் கோரிக்கைகள் குறித்து தொழிற்சங்கங்களுடன் மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்த குமார் ஆணையாளர் மு.பிரதாப் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடு பட்டனர். இதில், மாநகராட்சியில் பணி யாற்றும் தூய்மை பணியாளர்கள் வருகை பதிவேட்டில் காலை 7 மணி வரை வருகை பதிவு செய்து கையொப்பமிட அனுமதிக்கப்படும். குப்பை எடுப்பதற்கு முதற்கட்டமாக 100 பேட்டரி வாகனங்கள் வாங்கப் படும். வார விடுமுறை ஒருநாள் சுழற்சி முறையில் விடுமுறை வழங்கப்படும். ஒப்பந்த தூய்மை பணியாளர்களின் ஊதிய உயர்வு குறித்து மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் இறுதி முன் மொழிவுகள் வரும் நவ.5 ஆம் தேதிக் குள் அனுப்பி வைத்து, உரிய தகவல் தெரிவிக்கப்படும் என மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் தெரிவித் தார். முன்னதாக இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையாளர் ஷர்மிளா, பொது சுகாதாரக்குழு தலைவர் மாரிச்செல்வன், தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பு பிரதிநிதி கள் பலர் பங்கேற்றனர்.