ஈரோடு, ஜூன் 30- ஈரோடு மாநகராட்சியில் தனியார் மயத்தை எதிர்த்து தூய்மை பணியாளர் கள் 8 ஆவது நாளாக வேலை நிறுத்தத் தில் ஈடுபட்டுள்ளனர். ஈரோடு மாநகராட்சியில் தூய்மை பணிகளை ஒப்பந்த அடிப்படையில் தனி யாரிடம் விடக்கூடாது. தொழிற்சங்கங் கள் ஆட்சேபணை தெரிவித்துள்ள நிலையில், ஒப்பந்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். 480 நாட்கள் பணி புரிந்த தினக்கூலி தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். குறைந்தபட்ச கூலி சட்டப்படி ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கடந்த ஜூன் 23 ஆம் தேதி முதல் தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், 8ஆவது நாளான வெள்ளியன்று மாநகராட்சி அலுவலக வளாகத்தில் கோரிக்கைகளுடன் தொழி லாளர்கள் திரண்டிருந்தனர். இவர்களி டையே சிஐடியு மாவட்ட தலைவர் எஸ்.சுப்ரமணியன், செயலாளர் எச். ஸ்ரீராம், உதவித்தலைவர் பி.கனகராஜ், சங்க செயலாளர் எஸ்.மாணிக்கம் மற் றும் பொருளாளர் ஏ.ஜெகநாதன், எல்பிஎப், ஏஐடியுசி மற்றும் தொழிற் சங்க தலைவர்கள் பேசினர்.
மாமன்ற கூட்டம்
இதற்கிடையே, மாமன்ற சாதாரண கூட்டம் முற்பகல் 12 மணியளவில் நடை பெற்றது. மேயர் சு.நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ், ஆணையாளர் ஜானகி உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண் டனர். 33 பொருள்கள் மன்றத்தில் வைக் கப்பட்டு விவாதம் நடத்தப்பட்டது. அப்போது, சில கவுன்சிலர்கள் தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத் தம் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக நடை பெற்று வருகிறது. அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட வில்லை. ஏன் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை எனக்கூறி 6 கவுன் சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். இதனைத்தொடர்ந்து பதிலளித்துப் பேசிய ஆணையாளர், தமிழ்நாட்டின் அனைத்து மாநகராட்சி மற்றும் நக ராட்சிகளில் தூய்மை பணி ஒப்பந்த அடிப்படையில் தனியாருக்கு விடப்பட் டுள்ளது. இடைத்தேர்தல் நடைபெற்ற தன் காரணமாக அரசாணையை நிறை வேற்றுவதில் காலதாமதம் ஏற்பட்டது. தூய்மை பணியாளர்களின் கோரிக்கை என்பது அரசாணை 152ஐ ரத்து செய்ய வேண்டும். இது அரசின் கொள்கை முடிவு. இதில் ஒன்றும் செய்ய முடியாது. இதுதவிர மேலும் வேலை, சம்பளம் உள்ளிட்ட கோரிக்கைகளை தெரிவித் துள்ளனர். அரசுக்கு இதனை அனுப்பி யுள்ளோம். இதுவரை இரண்டு ஒப்பந்தம் வரப் பெற்றுள்ளது. இதில் முடிவாகும் நிறு வனத்திடம் ஏற்கனவே வேலை செய்ப வர்களை வேலைக்கு எடுத்துக் கொள் ளுமாறு கூறுவோம். அதன்பிறகு பணி கள் தொடங்கும், என்றார்.