நாமக்கல், நவ.21- குமாரபாளையம் நகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர் கள், ஊதியம் கேட்டு பணிகளை புறக் கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், குமாரபாளை யம் 33 வார்டுகள் பகுதிகளை கொண்ட நகராட்சியாக செயல்பட்டு வருகிறது. சுமார் ஏழு கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட இந்த நகராட்சியில், 30 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. குடியிருப்புகளில் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என தரம் பிரித்து குப்பைகளை பெறுவ தற்கு குமாரபாளையம் நகராட்சியில் 86 நிரந்தரப் பணியாளர்கள், 100 தற்காலி கப் பணியாளர்கள் பணியாற்றி வருகின் றனர். இவர்களுக்கு குமாரபாளையம் நகராட்சியில் இருந்து கடந்த இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்கப்பட வில்லை. இதனால் தங்கள் அன்றாட வாழ்க்கையை நடத்த மிக சிரமமாக உள்ளதாகக்கூறி, 150க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் வியாழ னன்று, தங்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். குமார பாளையம் நகராட்சி அலுவலகம் முன்பு அனைவரும் திரண்டதால் பெரும் பர பரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல றிந்து சம்பவ இடத்திற்கு வந்த நகர் மன்றத் தலைவர் விஜயகண்ணன், துப் புரவு அலுவலர் ராமமூர்த்தி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அனைவருக்கும் உடனடியாக சம்பளம் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. அதன்பே ரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பணிக்கு திரும்பிச் சென்றனர்.