districts

img

ஊதிய உயர்வு கேட்டு சிஐடியு தலைமையில் தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

தருமபுரி, ஜூன் 21- ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி, சிஐடியு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை தொழிலாளர்கள் சங்கத்தி னர் தருமபுரி நகராட்சி அலுவலகம் முன்பு காத்திருப்பு  போராட்டத்தில் ஈடுபட்டனர். தூய்மை பணியில் விடப்பட்ட ஒப்பந் தத்தை ரத்து செய்து, நகராட்சி நிர்வாகமே நேரடியாக பணியை வழங்க வேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களையும் நிரந்தரப்படுத்தப்பட வேண்டும். 137 காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பப்பட வேண்டும். குறைந்தபட்ச ஊதிய அரசாணை 2D என் 62 நாள்: 11.10.2017படி அனைத்து தூய்மை தொழிலாளர்களுக்கும் ரூ.596 ஊதி யம் வழங்கப்பட வேண்டும். மாதத்தின் முதல் தேதியில் ஊதியம் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி காத்தி ருப்பு போராட்டம் நடைபெற்றது. புதனன்று காலை 7 மணிக்கு துவங்கிய போராட்டம் மதியமும் தொடர்ந்ததால், அங் கேயே மதிய உணவு சமைத்து சாப்பிட்ட னர். இதனையடுத்து நகராட்சி நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. பேச்சு வார்த்தையில், நகராட்சி ஆணையர் புவ னேஸ்வரன் (எ)  அண்ணாமலை, நகர்மன்ற தலைவர் லட்சுமி நாட்டான்மாது, மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் செந்தில் குமார், வட்டாட்சியர் ஜெயவர்தன், தூய்மை  ஒப்பந்த பணி மேலாளர் ராஜா, சிஐடியு மாவட்ட தலைவர்  சி.நாகராசன், மாவட்ட செயலாளர் பி.ஜீவா, சிஐடியு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை தொழிலாளர்கள் சங் கத்தின் மாவட்ட தலைவர் சி.குட்டியப்பன், பொருளாளர் வெங்கட்ராமன் இணைச்செய லாளர் செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்ற னர்.  இதனையடுத்து, தூய்மை பணியாளர்க ளுக்கு, மே மாத சம்பளம் உடனடியாக வழங் கப்பட்டது. மேலும், மாதசம்பளத்தை 10 ஆம் தேதிக்குள் தொழிலாளர்களுக்கு வழங்கப் படும், என பேச்சுவார்த்தையில் நகராட்சி நிர் வாகம் உறுதியளித்தது. மேலும், ஊதிய உயர்வு உள்ளிட்ட இதர கோரிக்கைகளை ஜூலை 12 ஆம் தேதியன்று தொழிலாளர் துறை அலுவ லர்கள்  அடங்கிய முத்தரப்பு கூட்டத்தில் கோரிக்கைகளை பேசி முடிவுக்கு கொண்டு வருவது என நகராட்சி  நிர்வாகம் ஒப்புக் கொண்ட அடிப்படையில், காத்திருப்பு போராட் டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.