சாலையோரம் கொட்டப்படும் மருத்துவ கழிவுகளால் சுகாதார சீர்கேடு
பொள்ளாச்சி, மே 11- கோவை மாவட்டம், பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றி யத்திற்கு உட்பட்டது புளியம்பட்டி கிராமம். இக்கிராமத்தில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இக்கிராமத்தின் வழியாக செல்லும் நெடுஞ்சாலையோரத்தில் உபயோகப்படுத்தப் பட்ட ஊசிகள், சிரஞ்சுகள் உள்ளிட்ட மருத்துவ கழிவுகளை மர்மநபர்கள் இரவு நேரங்களில் கொட்டி செல்கின்றனர். இத னால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே, குப்பைகளை கொட்டும் நபர்களை அடையாளம் கண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
பொதுக்கழிப்பிடம் கேட்டு சார் ஆட்சியரிடம் மனு
பொள்ளாச்சி, மே 11- பொள்ளாச்சியை அடுத்த செடிமுத்தூர் கிராமத்தில் உள்ள அரிசன காலனியில் பொதுக்கழிப்பிடம் கட்டித்தர வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்துள்ள செடி முத்தூர் கிராமத்திலுள்ள அரிசன காலனியில் 70க்கும் மேற் பட்ட அருந்ததியர் சமூகத்தை சார்ந்த குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் பல வருடங்களாக பொதுக் கழிப்பிடம் கட்டிதரக்கோரியும், தனிநபர் கழிப்பிடம் கட்டித் தரக்கோரியும் பலமுறை மனு அளித்தும், கிராம சபை கூட் டங்களில் தீர்மானம் நிறைவேற்றியும் எவ்வித நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் திறந்த வெளியையே இயற்கை உபாதைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு ஊராட்சி மூலமாக தனிநபர் கழிப்பிடங்களும், இல வச பொதுகழிப்பிடமும் கட்டித்தர வேண்டுமென பொள் ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ்-விடம் அப்பகுதி பொதுமக்கள் மனு அளித்தனர். அம்மனுவை பெற்றுக்கொண்ட சார் ஆட்சியர், இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பேசி கழிப்பிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படுமென உறுதியளித்தார்.
தமுஎகச புதிய நிர்வாகிகள் தேர்வு
ஈரோடு, மே 11- தமுஎகச சத்தியமங்கலம் கிளை புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங் கத்தின் சத்தியமங்கலம் கிளையின் 2 ஆவது மாநாடு அண் மையில் நடைபெற்றது. இதில், மாவட்ட செயலாளர் மு.சங்க ரன், மாவட்ட துணைச்செயலாளர்கள் கி.கணேசன், இ. கலைக்கோவன், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநில உதவித்தலைவர் ப.மாரிமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து சங்கத்தின் கிளைத்தலைவராக ராஜ லட்சுமி, துணைத்தலைவராக சடையலிங்கம், செயலாள ராக முத்துரத்தினம், துணைச் செயலாளராக கௌரி காமாட்சி, பொருளாளராக யாழினி ஆறுமுகம் உட்பட செயற் குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். முன்னதாக, இந்நிகழ்ச்சியில் எழுத்தாளர் கௌரி காமாட் சியின் “மூன்றாம் தலைமுறை” நூலை, எழுத்தாளர் முத்து ரத்தினம் வெளியிட, தமுஎகச மாவட்ட செயலாளர் மு.சங்க ரன் பெற்றுக் கொண்டார். நிறைவாக சடையலிங்கம் நன்றி கூறினார்.'
மதுபோதையில் பள்ளத்தில் விழுந்தவர் உயிரிழப்பு
கோவை, மே 11- கோவை அருகே மதுபோதையில் பள்ளத்தில் விழுந்த கூலித்தொழிலாளி உயிரிழந்தார். கோவை நெகமத்தை அடுத்துள்ள வெள்ளாளபாளை யம் பகுதியை சேர்ந்தவர் காளிமுத்து (65). கூலி தொழிலாளி யான இவருக்கு மதுப்பழக்கம் இருந்துள்ளது. இந்நிலை யில், தனது மனைவியிடம் கடைக்கு சென்று வருவதாக கூறி வெளியே சென்ற காளிமுத்து, வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதைத்தொடர்ந்து காளிமுத்துவின் மனைவி அவரை தேடி சென்றுள்ளார். அப்போது அனுப்பர் பாளையம் பிரிவில் தோண்டப்பட்டிருந்த குழியில் காளி முத்து மதுபோதையில் தவறி விழுந்து இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத் திற்கு வந்த நெகமம் காவல் துறையினர், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
அவிநாசி: வண்டிப் பாதை குறித்து ஆலோசனைக் கூட்டம்
பிறகு வண்டிப் பாதை குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என வருவாய்த்துறையினர் தெரிவித்துள்ள னர். அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் அருகே கோவை பிர தான சாலையில், புறம் போக்கு அரசு வண்டிப்பாதை உள் ளது. இதில் இருந்த ஆக்கிமிரப்புகள் அகற்றப்பட்ட நிலை யில், மீதமுள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்ற னர். மேலும் இது குறித்து நீதி மன்றத்திலும் வழக்கு தொட ரப்பட்டுள்ளது. இந்நிலையில், இதுகுறித்த ஆலோசனைக் கூட்டம் புதனன்று வட்டாட்சியர் அலுவலகத்தில், வட்டாட்சி யர் ராகவி தலைமையில் நடைபெற்றது. இதில், 2 ஆண்டுக ளுக்கு பிறகு நடைபெறும் தேர்த்திருவிழா சிறப்பாக நடை பெறும் வகையில் அனைத்துத் தரப்பினரும் முழு ஒத்து ழைப்பு வழங்க வேண்டும். மேலும் வண்டிப்பாதை குறித் தும், தேர்த்திருவிழா குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆலோசனைக்கூட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப் பட்டது.
மின் தடை அறிவிப்பு
அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தேர்த்திருவிழா மே 12, 13, 14 ஆகிய தேதிகளில் நடைபெறுவதால், தேர் வலம் வரும் போது மட்டும் மேற்கு, கிழக்கு, வடக்கு, தெற்கு ரத வீதிகள், காந்திபுரம், பாரதி வீதி, நாராசா வீதி, செல்லாண்டி அம்மன் கோயில் வீதி, கங்கவர் வீதி, செட்டி தோட்டம் அகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின் வாரி யத்தினர் தெரிவித்துள்ளனர்.
கொரியர் நிறுவன மேலாளர் மீது தாக்குதல்
கோவை, மே 11- கோவையில் கொரியர் நிறுவன மேலாளர் மீது தாக்கு தல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை கணபதி நல்லாம்பாளையத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (47). இவர் சாய்பாபா காலனியில் செயல் பட்டு வரும் கொரியர் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், திங்களன்று அவர் பணி யிலிருந்தபோது வங்கி ஊழியர் ஒருவர் வங்கி தபால்களை அனுப்புவதற்காக வந்தார். அப்போது செந்தில்குமார், ஏற் கனவே 2 மாதமாக அனுப்பப்பட்ட தபால்களுக்கு பணம் செலுத்தவில்லை. எனவே, பழைய பாக்கியை எப்போது தருவீர்கள் என கேட்டுள்ளார். இதில், அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. இதில், ஆத்திர மடைந்த வங்கி ஊழியர் தகாத வார்த்தைகளால் பேசி கொரி யர் நிறுவன மேலாளர் செந்தில்குமாரை தாக்கிவிட்டு தப்பி சென்றார். இதில் காயமடைந்த அவர் கோவை அரசு மருத்து வமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுதொடர் பான புகாரின் பேரில், சாய்பாபா காலனி காவல் துறையி னர் வழக்குப்பதிவு செய்து தாக்குதல் நடத்திய வங்கி ஊழியர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கட்டுமான சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு
ஈரோடு, மே 11- கட்டுமான தொழிலாளர் சங்க அந்தியூர் தாலுகாவின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். கட்டுமான தொழிலாளர் சங்கம் (சிஐடியு) அந்தியூர் தாலுகா பேரவை கூட்டம் புதனன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.நடேசன் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலாளர் எஸ்.மாதவன் சிறப்புரையாற்றினார். அந்தி யூர் தாலுகா பொதுத்தொழி லாளர் சங்க தலைவர் ஏ.கே. பழனிச்சாமி வாழ்த்துரை வழங்கினார். இதைத்தொ டர்ந்து அந்தியூர் தாலுகா தலைவராக ஆர்.நடேசன், செயலாளராக ஆர்.மணி கண்டன், பொருளாளராக ஏ.ராமன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
கரும்பு வெட்டும் தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க கோரிக்கை
தருமபுரி, மே 11- கரும்பு வெட்டும் தொழிலாளர் களுக்கு நல வாரியம் அமைக்க வேண் டும் என தமிழ்நாடு கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக, தியாகி சுப்பிரம ணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை யின் மேலாண்மை இயக்குநர் ரஹமத் துல்லாகானிடம், தமிழ்நாடு கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் இ.கே.முருகன் தலைமையில் வழங்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது: தருமபுரி மாவட் டம், கோபாலபுரம் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையின் எல் லைக்குட்பட்ட பகுதியில் நூற்றுக் கணக்கான கரும்பு வெட்டும் தொழி லாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த தொழிலாளர்கள் கரும்பு வெட் டும் பணியில் ஈடுபடும்போது பாம்பு உள்ளிட்ட விஷ சந்துகளின் தாக்குத லில் பாதிக்கப்பட்டு உயிரிழக்கின்ற னர். எனவே, கரும்பு வெட்டும் தொழி லாளர்கள் பணியின்போது உயிரிழந் தால் அந்த தொழிலாளியின் குடும்பத் துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும். கரும்பு வெட்டும் தொழிலா ளர்களுக்கு என தனியாக நலவாரியம் அமைக்க வேண்டும். கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை, சீருடைகள், ரப்பர் ஷூ உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங் களை வழங்க வேண்டும். கரும்பு வெட் டும் தொழிலாளர்களுக்கு விபத்து மற் றும் மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்
தருமபுரி, மே 11- ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதி யிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அப் பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், கொங்கவேம்பு கிராம ஊராட்சிக்குட்பட்டது பாரதிபுரம் கிராமம். இங்குள்ள ஆதி திராவிடர் மக்களுக்கு கடந்த 1991 ஆம் ஆண்டு, ஆதிதிராவி டர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 140 பயனாளி களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டது. இதைத்தவிர இந்த கிராமத்தில் எதிர்கால தேவைக்காக பொது இடம் ஒதுக்கப்பட்டது. தற்போது இந்த பொது இடத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்ட தொடங்கி யுள்ளனர். எனவே, கிராம மக்களின் எதிர்கால தேவைக் காக ஒதுக்கப்பட்ட இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். அதேபோல், பாரதிபுரம் குடியிருப்பு பகு தியிலுள்ள வீடுகளின் நில ஆவணங்கள் வருவாய்த் துறையில் கணினி வழியாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படவில்லை. எனவே, வீட்டு மனைப்பட்டாகளை தனித் தனியாக கணினியில் பதிவேற்றம் செய்ய வேண் டும் என வலியுறுத்தி பாரதிபுரம் கிராம மக்கள், அரூர் தனி வட்டாட்சியர் சின்னானிடம் மனு அளித்தனர்.