districts

மதக்கலவரத்தை தூண்ட முயற்சிக்கும் சங்பரிவார் அமைப்பு: பிப்.9ல் ஆர்ப்பாட்டம்

தருமபுரி, பிப்.6- தமிழகத்தில் மக்கள் ஒற்றுமையை பிரித்து, மதக்கலவரத்தை தூண்டும் முயற்சி யில் ஈடுபடும் சங்பரிவார் அமைப்பைக் கண் டித்து தருமபுரியில் சமூக நல்லிணக்க மேடையின் சார்பில் பிப்.9ல் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. சமூக நல்லிணக்க மேடையின் ஒருங் கிணைப்புக் குழு கூட்டம்  தருமபுரி மார்க் சிஸ்ட் கட்சி மாவட்டக்குழு அலுவலகத்தில் அருட்தந்தை ஆர்.ஜேசுதாஸ் தலைமையில் நடைபெற்றது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஏ.குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம். மாரிமுத்து, இரா.சிசுபாலன், மனிதநேய மக்கள் கட்சியின் மாநில நிர்வாகிகள் ஒய். சாதிக் பாஷா, அப்துல் ரஷீத், நவ்ஷத், அருட்தந்தை மரிய ஜோசப், மக்கள் கண் காணிப்பகத்தின் மாவட்ட  ஒருங்கிணைப்பா ளர் கே.பி.செந்தில் ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு: தஞ்சை தனி யார் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தைப் பயன்படுத்தி, தமி ழகத்தில் மதக்கலவரத்தைத் தூண்ட சங்பரி வார் அமைப்புகள் முயற்சித்து வருகின்றன. இதனைக் கண்டித்து வரும் பிப்.9 ஆம் தேதி யன்று தருமபுரி சமூக சேவை மையம் முன்பு  ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. கடந்த ஜன.30 ஆம் தேதி கோவையில் மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் நடைபெற்ற உறுதி மொழி ஏற்பு நிகழ்வில், மகாத்மாவைப் படு கொலை செய்த கோட்சே பெயரை உச் சரிக்கக் கூடாது எனக் காவல்துறையினர் தக ராறு செய்த சம்பவம், தமிழக சட்டமன்றத் தில் நிறைவேற்றப்பட்ட நீட் எதிர்ப்பு மசோ தாவை குடியரசு தலைவருக்கு அனுப்பா மல் மீண்டும் சட்டப்பேரவைக்கு ஆளுநர் திருப்பி அனுப்பி சம்பவங்களை இக்கூட் டம் வன்மையாகக் கண்டிக்கிறது. மேலும், தமிழகத்தில் அதிகரித்து வரும் வகுப்புவாத செயல்பாடுகளைக் கண்டித்து உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு தருமபுரி யில் சமூக நல்லிணக்க மேடை சார்பில்  அனைத்துக் கட்சிகளுடன் இணைந்து வகுப்பு வாத எதிர்ப்பு இயக்கம் நடத்துவது என வும் முடிவெடுக்கப்பட்டது.