அவிநாசி, ஜன.16- அவிநாசியில், பல்வேறு இடங்களில் அனைத்திந் திய ஜனநாயக மாதர் சங்கத்தி னர் சமத்துவ பொங்கல் விழாவை திங்கட்கிழமை கொண்டாடினர். தை பொங்கல் தமிழர் திருநாளில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர், அவிநாசி ஒன்றியத்தில் கவுண்டம்பாளையம், அவி நாசி நகரம், ஆட்டையாம்பாளையம், வடுக பாளையம் உள்ளிட்ட இடங்களில் காலை யில் சமத்துவ பொங்கல் வைத்து பொதுமக் கள் அனைவருக்கும் வழங்கினர். இதில் மாதர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் செல்வி, ஒன்றிய தலைவர் சித்ரா, ஒன்றிய துணைத் தலைவர் தேவி, ஒன்றிய பொரு ளாளர் தங்கமணி, ஒன்றிய குழு உறுப்பினர் லதா,ஆட்டையாம்பாளையம் கிளை நிர்வா கிகள் சண்முகவேணி, ஜோதிமணி, விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் சண்முகம் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.