districts

img

காலமானார்

சேலம், ஏப்.15- நூற்றாண்டை கண்ட சேலம் மூத்த தோழர் கே.ஆர். கண்ணன் காலமானார்.  மார்க்சிஸ்ட் கட்சியின், சேலம் மாவட்ட மூத்த தோழர் கே.ஆர்.கண்ணன் (வயது101) உடல் நலக்குறைவு காரண மாக வெள்ளாளப்பட்டி பகுதியில் உள்ள தனது இல்லத்தில்  காலமானார். அவரது உடலுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் தலை வர்கள் மற்றும் இதர அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி  செலுத்தினர். தோழர் கே.ஆர்.கண்ணன் (எ) வெங்கடாசலம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களுக்கு உதவியாகவும், அடக்குமுறை காலத்தில், தலைமறைவாக இருந்த தலைவர்களை பாதுகாப்பதற்கு உதவியாகவும் இருந்தவர். தனது பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வளர்த்தெடுப்பதில் முக்கிய பங்காற்றியவர்.  இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக வெள்ளியன்று காலமானார். அவரது உடலுக்கு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.செல்வசிங், மாவட்ட செயலாளர் மேவை. சண்முகராஜா மற்றும் மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள், சிஐடியு மாவட்ட செயலாளர் ஏ. கோவிந்தன், ஓமலூர் வட்ட குழு செயலாளர் ஈஸ்வரன், மேச் சேரி ஒன்றிய செயலாளர் ஜி.மணிமுத்து உள்ளிட்ட சிபிஎம்,  சிஐடியு மாவட்ட குழு உறுப்பினர்கள் நேரில் அஞ்சலி செலுத் தினர். மறைந்த தோழர் ஆர்.கே.கண்ணன் இறுதி நிகழ்ச்சி  சனியன்று மாலை நடைபெற்றது.