districts

img

ஊழல் நாற்றத்தில் சேலம் மத்திய பேருந்து நிலையம்

மூர்ச்சையாகி போகிற வரை யில் மூக்கை பிடித்தாலும், காற்று புகாத  இடத்திலும் மூத்திர நாற்றம் துளைத் தெடுக்கும். பேருந்து அசந்து தூங்குகிறவர் களையும் சேலம் மத்திய பேருந்து நிலையம் வந்து விட்டது என பயணி களை இந்த மூத்திர நாற்றமே எழுப்பி விடும் அளவிற்குத்தான் பேருந்து நிலை யத்தில் பராமரிப்பு உள்ளது. இந் நிலையே தொடரட்டும் என்று அதிகாரி களின் அலட்சியம், ஆட்சிக்கு அவப் பெயர் ஏற்படுவதை கண்டு சேலம் திமுகவினரே கலங்கித்தான் இருக்கின் றனர். சேலம் மாநகராட்சி இந்தியாவின் பழமையான மாநகராட்சியாகும். 1966ஆம் ஆண்டே நூற்றாண்டு கண்ட  நகராட்சியாக இருந்துள்ளது. தற் போது ஸ்மாட் சிட்டி அந்தஸ்தில் செயல் பட்டு வருகிறது. இவ்வளவு பெரு மைக்குரிய சேலம் மாநகராட்சி,  அதிகாரிகளின் ஊழல் நடவடிக்கை யால் நாறிப்போய்க் கிடக்கிறது என் கின்றனர் சமூக செயற்பாட்டாளர்கள். சேலம் மாநகராட்சியின் கட்டுப் பாட்டில் பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர்  மத்திய பேருந்து நிலையம் செயல் பட்டு வருகிறது. பயணிகள் பயன் படுத்த முடியாத பேருந்து நிலையம் என்றால் அது, சேலம் மத்திய பேருந்து  நிலையம் முதல் பரிசை வென்று விடும்.  சேலம் புறநகர் பேருந்து நிலையத்தில் தினமும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். பெங் களூரு, மதுரை, திருச்சி,சென்னை  என தென்னிந் தியா முழுவதும் செல்லும் முக் கிய வழித்தடமாக சேலம் மத்திய  புதிய பேருந்து நிலையம் செயல் படுகிறது. ஆனால்,  பயணிகள் துளி கூட பயன்படுத்த  முடியாத அளவிற்கு சுகாதார சீர்கேடு கள் நிறைந்த பகுதியாக இருக்கிறது.  மூத்திர நாற்றத்தால் மூழ்கியுள்ளது. 

பேருக்குத்தான் பேருந்து நிலையம்

சேலம் மாநகரத்தில் உள்ள மத்திய  பேருந்து நிலையத்திற்கு பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். மத்திய பேருந்து நிலையம் என்று பெயர். “பேரு பெத்த  பேரு, தாக நீலு லேது” என்கிற பழ மொழியை நினைவு படுத்துவதாக உள்ளது. கழிவறைகள், சைக்கிள் ஸ்டேண்ட், இருக்கைகள், மின்விசிறி,  நடைபாதை ஆக்கிரப்பு என எல்லாமே முறைகேட்டால் துர்நாற்றம் வீசுகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு பேருந் துகள், 500க்கு குறைவின்றி தனி யார் பேருந்துகள் வந்து செல்கின்ற சேலம் மத்திய பேருந்து நிலையம்,  விடுமுறை நாட்களில் தென்னிந்தி யாவில் பல நகரங்களுக்கு பேருந்து வசதி கொண்ட பேருந்து நிலையம், தற்போது மாநகராட்சி அதிகாரிகளின் கொள்ளைக் கூடமாக மாறியுள்ளது.

கழிவறை நாற்றத்திலும் காசு திருட்டு

பேருந்து நிலையத்தை ஒட்டி மாநகராட்சி மிதிவண்டி, இருசக்கர வாகன நிறுத்தம் உள்ளது. அரசு ஒப் பந்த விதிப்படி, 24 மணி நேரத்திற்கு  ரூ.5 மட்டுமே வசூலிக்க வேண்டும்.  ஆனால், கட்டணமாக வசூலிப்பது ரூ. 15. அதிலும், இரவு 9 மணிக்கு நிறுத்தி,  நள்ளிரவு 1 மணிக்கு வாகனத்தை எடுத் தால் ரூ.30 கூடுதலாக தர வேண்டிய கட்டாயம் உள்ளது. மேலும், பொது வெளியில் தாய்மார்கள் பாலூட்ட முடி யாத அவதிக்கு தீர்வாக பேருந்து நிலை யத்தில் தாய்மார்கள் பாலூட்டும் அறை  கட்டப்பட்டது. ஆனால், இரவோடு இரவாக, திருட்டுத்தனமாக பாலூட்டும்  அறையில் பாதியை கடையாக கட்டி  வாடகைக்கு விட்டு கல்லா நிரப்பி யுள்ளனர். ஏங்க... வந்துபாருங்க… பாதி அறையை காணோம். கூரை மேலே இரண்டு மின் விசிறி மட்டும் ஓடுது என கணவன்மார்களிடம் பெண் கள் புலம்புவது அன்றாடம் செவியில் விழும் வசனமாகியுள்ளது.  இதுகுறித்து சமூக செயற்பாட்டா ளர்கள் கூறுகையில், புதிய பேருந்து நிலையத்தில் 5 பொது கழிவறைகள் உள்ளன. ஒப்பந்த விதிகளின்படி சிறு நீர் கழிக்க ரூ.2ம், மலம் கழிக்க ரூ.3,  குளிக்க ரூ.5 என ஒப்பந்ததாரர்கள் கட்டணம் வசூலிக்க வேண்டும். ஆனால், ஏகபோகமாக அனைத்துக் கும் ரூ.10 ஒப்பந்ததாரர்கள் வாங்கு கிறார்கள். ஒரு பயணி மலம் கழித் தால் ரூ.7 அதிகமாக கொள்ளை யடித்து, மாநகராட்சி அதிகாரிகள் வரை  ஒப்பந்ததாரர்கள் பிரித்து கொள் கிறார்கள். தினசரி 50 ஆயிரம் பேர் கழிவறையை பயன்படுத்துகிறார்கள். நாள் ஒன்றிற்கு சுமார் ரூ.3.5 லட்சம் கொள்ளையடிக்கப்படுகிறது. மாற்றுத் திறனாளிகள் கழிவறையையும் பூட்டி  வைத்துள்ளதால், இயற்கை உபா தைகள் கழிக்க முடியாமல் மாற்றுத் திறனாளிகள் அவதிக்குள்ளாகி வரு கின்றனர்.

சிறுநீர் கழிக்க ரூ.3 கட்டணத்தை ரூ.10 என கொள்ளையடித்ததன் விளைவால், பயணிகள் அவசரத்திற்கு வெளியே நின்று சிறுநீர் கழித்து வரு கின்றனர். இதனால் பேருந்து நிலை யமே நாறி வருகிறது. நாற்றத்தை தடுக்க சுண்ணாம்பு போடப்பட்டது. அதுலேயும் கமிசன். பேருந்து நிலையத் திற்குள் பேருந்து உள்ளே போகும் பாதையில் மூக்கை பிடிக்காமல் நடக்க  முடியாது. “மூத்திர நாற்றம் பெரிசா! மாநகராட்சியின் ஊழல் நாற்றம் பெரிசா!” என்று ஒரே குழப்பமா இருக்கும்.  இதுபோக, பயணிகள் குடிக்க காவிரி குடிநீர் சுத்திகரிக்கப்பட்டு, குடிநீர் தொட்டி அமைத்து, குழாய்கள் மூலம் பிடித்துக்கொள்ள ஒரு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதையும் பேருந்து நிலையத்தில் உணவகம் வைத்துள்ளவர்கள், பேரம் பேசி பணத்தை பெற்றுக்கொண்டு சமையல் பாத்திரங்களை கழுவவும், குடிநீர் தொட்டியில் பிளாஸ்டிக் குழாயை பொருத்தி, தண்ணீரை நேரடியாக கடைக்கே கொண்டு செல்லும் திருட்டு  வேலையும் நடக்கிறது. பேருந்து நிலை யத்திலிருந்த சுமார் 54 இரும்பு இருக் கைகள் திருட்டு போய்விட்டது. பழுத டைந்த இருக்கையை, இரும்பு உதிரி பாகங்களையும் விற்று தின்று ஏப்பம் விட்டுவிட்டார்கள். 20க்கும் மேற்பட்ட  மின்விசிறிகளும் திருட்டு போய் விட்டன. இருக்கைகளின்றி பயனிகள், தங்கள் பகுதிக்கு செல்லும் பேருந்து வரும் வரை மணிக்கணக்கில் நின்று கொண்டே இருக்கும் அவலம்  தொடர்ந்து நீடிக்கிறது.

பேருந்து நிலையத்துக்குள், தேவை யான தெருவிளக்கு வெளிச்சம் இல்லை. இருட்டிலுள்ள திருடர்களை வெளிச்சத்தில் அடையாளம் காண முடியாத பேருந்து நிலையமாக எம்.ஜி.ஆர். மத்திய பேருந்து நிலையம்  மாறியுள்ளது. நடைபாதை ஆக்கிரமிப்பை அகற்ற சொன்ன நீதிமன்றத்துக்கு அதிகாரிகள் அல்வா கொடுத்துவிட்டார்கள். “நான் அடிக்கிற மாதிரி அடிப்போம். நீ அழு வனும், அப்புறம் நான் உன்னை எடுத்து  வச்சு கொஞ்சுவனாம்” இந்த கதை தான்  சேலம் மத்திய பேருந்து நிலையத்தில் ஓடிக்கொண்டு இருக்கிறது. நடை பாதை ஆக்கிரமிப்பு முழுமையாக எடுக்கப்படவில்லை. பயணிகள் நிற்க  இடமில்லை. கமிசன் வியாபாரிகளுக்கு சிவப்பு கம்பள விரிப்பு போட்டு தந்துள் ளது மாநகராட்சி நிர்வாகம்.

ஆளும் அரசுக்கு அவப்பெயரே

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சேலம் வடக்கு மாநகர  செயலாளர் என்.பிரவீன்குமார் கூறுகை யில், தமிழ்நாடு மட்டுமின்றி தென்னிந் தியா முழுவதும் முக்கிய நகரங் களுக்கு பேருந்துகள் இங்கிருந்து இயக்கப்படுகிறது. இதனால் தமிழ் நாட்டின் மிக முக்கிய பேருந்து நிலை யங்களில் சேலம் மத்திய பேருந்து  நிலையம் ஒரு தனி இடத்தை பிடித் துள்ளது. பேருந்து நிலையத்தின் முன் பகுதியை பார்த்தால் பிரம்மாண்டமாக தெரியும், உள்ளே சென்றால் சந்தைக் கடைக்குள் நுழைந்து விட்ட எண்ணம்  தோன்றும். சுகாதாரகேடும், கட்டண  கொள்ளையும், சட்டவிரோத செயல் களும், குடிநீர், இருக்கைகள், மின் விசிறிகள் திருட்டு, இட ஆக்கிரமிப்பு களும், பயணிகளுக்கு இடையூறு களும், காலாவதியான உணவு விற்ப னைகள் என பொதுமக்கள் அச்சப் படும் நிலையமாகவே சேலம் மத்திய  பேருந்து நிலையம் இன்றும் தொடர் கிறது. ஆட்சியாளர்கள், எப்படி இதனை  அனுமதிகிறார்கள்? இதனால் ஆளும் அரசுக்கு பெரும் அவப்பெயரே  ஏற்படு கிறது, என்றார். சேலம் மாம்பழத்திற்கு பெயர் பெற்றது என்பது போய், சேலம் மாநக ராட்சியின் அதிகாரிகளின் ஊழல் நடவ டிக்கையால் நாறிப்போய் உள்ளதை  வெளிப்படையாகவே மக்கள் பேசத் துவங்கியுள்ளனர். முந்தை அதிமுக ஆட்சியின் கைங்கார்யம் என்று இந்த  ஆட்சி கைகாட்டி விட்டு போக முடியாது.  ஊழல் நாற்றத்தையும், மூத்திர நாற்றத் தையும் ஒரு சேர களை எடுக்க வேண்டும் என்கிற நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர் சேலம் மாநகர மக்கள். -எழில், சேலம்