சேலம், டிச.10- சேலம் நீதிமன்றத்தில் உள்ள வழக் கறிஞர் சேம்பரை உடனடியாக திறக்க வேண்டும் என அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் கோவை மாவட்ட மாநாடு வலியு றுத்தியுள்ளது. அகில இந்திய வழக்கறிஞர் சங்க சேலம் மாவட்ட மாநாடு சனியன்று சேலம் ஜான்சன் பேட்டையில் உள்ள சுனில் மைத்ரா நினை வகத்தில் நடைபெற்றது. மாநாட்டை அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் தேசியக்குழு உறுப்பினர் எஸ். பொன்ராம் துவக்கிவைத்து உரையாற்றி னார். இதில், சேலம் நீதிமன்றத்தில் வழக் கறிஞர் சேம்பர் உடனடியாக திறக்க வேண்டும். சேலம் சட்டக் கல்லூரி மாணவர் களுக்கு ஹாஸ்டல் வசதி ஏற்பாடு செய்ய வேண்டும். பல கோடி செலவில் கட்டப்பட்ட சட்டக்கல்லூரி இன்னும் திறக்கப்படாமல் உள்ளது, இதனை உடனடியாக திறக்க வேண்டும். சேலம் நீதிமன்றத்தில் வழக் கறிஞர் கூட்டுறவு சொசைட்டி மீண்டும் செயல் பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப் பட்டது. இதில், மாவட்ட தலைவராக கே.ஆர். மாசிலாமணி, செயலாளராக எம்.வெற்றி வேல், பொருளாளராக ஆர்.ராமசாமி உள் ளிட்ட 21 பேர் கொண்ட மாவட்ட குழு தேர்வு செய்யப்பட்டது.