districts

புகையிலை பொருட்கள் விற்பனை - கைது

ஈரோடு, டிச.11-  ஈரோடு ஓடாநிலை கந்த சாமிபாளையம் பகுதியில் வெள்ளியன்று அறச்சலூர் காவல்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது அங் குள்ள மளிகை கடையில் தடை செய்யப்பட்ட புகை யிலை பொருட்கள் விற் பனை செய்வதாக வந்த தக வலின் பேரில் காவல்துறை யினர் கடையினுள் அதிரடி சோதனை மேற்கொண்ட னர். இதில் கடையின் விற்ப னைக்கு வைக்கப்பட்டு இருந்த 4.67 கிலோ புகை யிலை பொருட்களை பறி முதல் செய்து கடையின் உரி மையாளரான அறச்சலூர் கஸ்தூரிபா கிராமத்தை சேர்ந்த மேகநாதன் (40) என் பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.  இதேபோல், கடம்பூர் கிட் டாம்பாளையம் பிரிவில் உள்ள பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்றதாக கடை உரிமை யாளர் சின்னராஜ் (45) என்ப வரை காவல்துறையினர் கைது செய்து, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். தாளவாடி ஓசூர் ரோட்டில் பெட்டிக் கடையில் புகையிலை விற்றதாக கடை  உரிமையாளர் மாரிமுத்து  (50), என்பவரை கைது  செய்து, அவரிடமிருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.