districts

img

அரசு கல்லூரி மரங்கள் விற்பனை : வருவாய்த் துறையினர் விசாரணை

நாமக்கல், நவ.1- ராசிபுரம், ஆண்டகளூர்கேட்டில் உள்ள திருவள்ளுவர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் 30க்கும் மேற்பட்ட  மரங்கள் அனுமதியின்றி வெட்டி விற்பனை செய்யப் பட்டதாக எழுந்த புகாரையடுத்து வருவாய்த் துறை யினர் விசாரணை மேற்கொண்டனர். ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலை அறிவியல் கல்லூரி  வளாகத்தில் உள்ள வேம்பு, புங்கை போன்ற பலவகை மரங்களை கல்லூரி முதல்வர் தன்னிச்சையாக வெட்டி விற் பனை செய்ததாக புகார் எழுந்தது.  இதன்பேரில், கல்லூரி முதல்வரிடம் குருக்கப்புரம் கிராம  நிர்வாக அலுவலர், ராசிபுரம் வருவாய் ஆய்வாளர் ஆகி யோர் நேரில் விசாரணை மேற்கொண்டனர். இது தொடர் பான அறிக்கை வட்டாட்சியர், மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப் பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  இது குறித்து கல்லூரி நிர்வாகத்தின் தரப்பில் கூறுகையில்,  கல்லூரியைச் சுற்றிலும் அதிக மரங்கள் உள்ளதால் கட்டிடங் களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. வகுப்பறைகள், கழிவறை களில் பாம்புகள் அதிகம் உள்ளதால், மாணவர்களின்  பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு மரங்கள் வெட்டப் பட்டன. மேலும் இந்தக் கட்டடங்களை பராமரிக்க  வேண்டிய பொதுப்பணித் துறை நிதி ஒதுக்கீடு இருந்தும்  கடந்த 6 ஆண்டுகளாக எந்தவித பராமரிப்பும் செய்ய வில்லை. நவம்பர் மாதம் நாக் கமிட்டி கல்லூரிக்கு  வரவுள்ளது. இதனால் மரங்கள் வெட்டப்பட்டு, அப்புறப் படுத்தப்பட்டுள்ளன, என்றனர்.