districts

15 ஆண்டுகளுக்கு முந்தைய வரி கேட்பு நோட்டீஸ்களை ரத்து செய்ய சைமா கோரிக்கை

திருப்பூர், ஆக.25- கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு, வரி  நிலுவை உள்ளதாக அனுப்பப்பட்ட அனைத்து அறிக்கைகளையும் ரத்து செய்ய வேண்டும் என்று மாநில வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தியிடம், தென்னிந்திய பனி யன் உற்பத்தியாளர் சங்க (சைமா) பொதுச் செயலாளர் கீதாஞ்சலி கோவிந்தப்பன் கோரிக்கை மனு அளித்துள்ளார். தமிழ்நாடு வணிகத்துறை சார்பில் அனைத்து வணிகர் சங்க பிரதிநிதிகளின் கருத்து கேட்பு கூட்டம் சென்னையில் நடை பெற்றது. இதில் திருப்பூர் சைமா சங்கம் சார் பில் பொதுச்செயலாளர் கீதாஞ்சலி கோவிந் தப்பன் கலந்து கொண்டு 2 மனுக்களை தமி ழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச் சர் மூர்த்தியிடம் வழங்கினார். அந்த மனுக் களில் கூறப்பட்டுள்ளதாவது: தொழில்துறை யினர் சாயமிடுதலுக்காக துணிகளை ஜாப் ஒர்க் அடிப்படையில் சாய ஆலைகளுக்கு அனுப்புவதும், அதன் அடிப்படையில் வரவு, செலவு செய்வதும் பல ஆண்டுகளாக நடை பெற்று வருகிறது. இந்த நடைமுறையின் போது சாய ஆலைகள் செலுத்த வேண்டிய வாட் வரிக்கு, ஏன் டி.டி.எஸ். பிடித்தம் செய்து  கட்டவில்லை என்று கூறி அபராதத்துடன் கட் டுமாறு பின்னலாடை நிறுவனங்களுக்கு அறிக்கை அனுப்பப்படுகிறது. வாட் சட்டப் படி பதிவு செய்யப்பட்ட சாய ஆலைகளிடம் இருந்து வரி வசூலிக்க வாய்ப்பு இருக்கும் போது பின்னலாடை நிறுவனங்களிடம் கேட் பது நியாயமான ஒன்றல்ல.  

மேலும் வணிக வரித்துறை உத்தரவின் படி டி.டி.எஸ். பிடித்தம் செய்ய வேண்டிய தில்லை என்று ஈரோடு ஜவுளி வியாபாரிகள் சங்கத்திற்கு கடிதம் வழங்கப்பட்டுள்ளது. எங்களது சில நிறுவனங்கள் உயர்நீதிமன்றத் தில் வழக்கு தொடுத்து வணிக வரித்துறை அதிகாரிகள் அனுப்பிய அறிக்கைகளை மறு பரிசீலனை செய்யவும் உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. எனவே, கடந்த 10, 15 ஆண்டுக ளுக்கு முன்பு நடைபெற்ற வியாபார பரிவர்த் தனைகளில் வரி நிலுவை உள்ளதாக அனுப் பப்படும் அனைத்து அறிக்கைகளையும் ரத்து செய்ய உத்தரவிட வேண்டும். மேலும் பாரம் பரியமிக்க தொழிலை இதுபோன்ற சிரமங் களில் இருந்து மீட்டு தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.  அத்துடன் பனியன் தொழிலில் வெளி  மாநில விற்பனைக்கான சி படிவம் சமர்ப் பித்து 1 சதவீத வரி செலுத்தும் ஆணை நீண்ட காலமாக நடைமுறையில் இருந்து வந்தது. இந்நிலையில் 2017 ஆம் ஆண்டு ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டபோது சி படிவம் சமர்ப் பிக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போய் விட்டது. இந்த சூழலில் 1 சதவீத வரி செலுத்தி கணக்கு முடித்த உறுப்பினர்களுக்கு கூட 2002-2003ஆம் ஆண்டு அதாவது 10, 20 ஆண்டு களுக்கு முன்பு உள்ள கணக்குகள் குறித்து கேட்பு அறிக்கைகள் வருகின்றன. வரி செலுத்த தவறியவர்களுக்கு வங்கி கடனை  முடக்குவதாக அச்சுறுத்தல்கள் வருகின்றன. எனவே 1 சதவீத வரி கட்டிய எங்களது சங்க  உறுப்பினர்களின் கணக்கை ஏற்றுக் கொள்ள வும், 10 ஆண்டுகளுக்கு மேலான கணக்குக ளுக்கு கேட்பு அறிக்கை அனுப்புவதை ரத்து  செய்து உத்தரவிட வேண்டும் என தெரி விக்கப்பட்டுள்ளது.