districts

img

சிபிஎம் திருப்பூர் தெற்கு ஒன்றிய செயலாளராக செ.மணிகண்டன் தேர்வு

திருப்பூர், அக்.21 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் திருப்பூர் தெற்கு ஒன்றி யச் செயலாளராக செ.மணி கண்டன் தேர்வு செய்யப்பட் டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் திருப்பூர் தெற்கு ஒன்றிய  7 ஆவது மாநாடு ஞாயிறன்று பலவஞ்சிபாளையம் தோழர் ஜி. ராஜன் நினை வரங்கில் நடைபெற்றது. இடுவம்பாளையம் பத்மநாபன் கொடியை ஏற்றி வைத்தார். வர வேற்பு குழுத் தலைவர் பா.லட்சுமி வரவேற் றார். வரவேற்புக் குழுச் செயலாளர் எஸ். சண் முகம் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். கட்சி யின் மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.சுகுமா றன் துவக்க உரையாற்றினார். ஒன்றியச் செய லாளர் சி.மூர்த்தி மாநாட்டு அறிக்கை சமர்ப்பித்தார். இம்மாநாட்டில், திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் கடுமையாக உயர்த்தி உள்ள சொத்து வரி, குப்பை வரி, பாதாள சாக்கடை  கட்டணம் ஆகியவற்றை ரத்து செய்யக்கோரி  நவ.11 ஆம் தேதியன்று மாநகராட்சி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது. இடுவாய், மங்க லம், முதலிபாளையம் ஊராட்சிகளை திருப்பூர் மாநகராட்சியுடன் இணைக்கும் முடிவை கைவிட வேண்டும்.  அரசு மருத்துவக் கல்லூரி  மருத்துவமனையில் கூடுதல்  சிறப்பு மருத்துவர்கள் மற்றும்  செவிலியர்களை கூடுதலாக நியமிக்க வேண்டும். திருப்பூர் மாநகராட்சியில் விடுபட்ட அனைத்து பகுதிகளுக்கும் தெரு விளக்கு, சாலை, சாக் கடை, பாதாள சாக்கடை திட்டம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தர வேண்டும். இ.எஸ்.ஐ மருத்துவமனையை முழுமையான செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.  இதனை தொடர்ந்து, திருப்பூர் தெற்கு ஒன்றியச் செயலாளராக செ. மணிகண்டன் மற்றும் 14 ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் கே.காமராஜ்  மாநாட்டை நிறைவு செய்து உரையாற்றினார். வர வேற்புக்குழு பொருளாளர் எஸ்.ரவிச்சந்தி ரன் நன்றி கூறினார். முன்னதாக, சீரானம் பாளையம் தியாகி பழனிச்சாமி நினைவு ஜோதி, இடுவாய் தியாகி இரத்தினசாமி நினைவு ஜோதி ஆகியவை மாநாட்டிற்கு எடுத்துவரப்பட்டன.