பள்ளிபாளையம், ஜுன் 2- பெண்களுக்கான கட்டண மில்லா இலவச பேருந்து இயக்கு மாறு வாலிபர் சங்கத்தினர் பள்ளி பாளையத்தில் வியாழனன்று ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் கோட்டம், சங்ககிரி பணி மனையிலிருந்து வெப்படை வழி யாக ஈரோடு வரை அரசு பேருந்துகள் இயக்கப்பட்டது. இப்பேருந்துகள் கொரோனா காலகட்டத்தில் நிறுத் தப்பட்டது. தற்போது ஒரே ஒரு எஸ்1 நகர பேருந்து மட்டுமே இவ்வழித் தடத்தில் இயக்கப்படுகிறது. இத னால், மாணவ, மாணவிகள், பெண் களும் நகர பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ள முடியாமல் உள்ளனர். மேலும், அதிக கட்டணம் செலுத்தி ஆட்டோவில் பயணிக் கின்றனர். குறிப்பாக படைவீடு பேரூ ராட்சி, சன்னியாசிபட்டி, வெப்படை எலந்தகுட்டை, வெடியரசம்பாளை யம் ஆகிய கிராம பகுதிகளிலிருந்து பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களும், வேலைக்கு செல் லும் பெண்களும் நகர இயக்கப்படா ததால் தனியார் பேருந்து, ஆட்டோக் களுக்கும் கட்டணம் செலுத்தி பய ணிக்க வேண்டிய நிலையில் உள்ள னர்.
எனவே சங்ககிரியில் இருந்து ஈரோடு வரை எஸ்1 வழித்தடத்தில் இயக்கப்பட்ட அனைத்து பேருந்து களையும் மீண்டும் இயக்கிட வேண் டும். மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசு போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வெப்படை நான்கு ரோட்டில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க பள்ளிபாளையம் வடக்கு ஒன்றிய செயலாளர் ஆர்.ராஜதேவ் தலைமை ஏற்றார். அகில இந்திய வழக்கறி ஞர் சங்கத்தில் நாமக்கல் மாவட்ட செயலாளர் சேகரன் ஆர்ப்பாட் டத்தை துவக்கி வைத்து பேசினார். இதில், வாலிபர் சங்க மாவட்டச் செய லாளர் மு.மணிகண்டன், இந்திய மாணவர் சங்க முன்னாள் மாநிலத் தலைவர் ஏ.டி.கண்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செய லாளர் சந்திரமதி, மாணவர் சங்க சேலம் மாவட்ட செயலாளர் பவித்ரன் ஆகியோர் கலந்து கொண்டனர். முடி வில், வாலிபர் சங்க மாவட்டக் குழு உறுப்பினர் கவின் நன்றி கூறினார். வாலிபர் சங்கத்தின் போராட்டத் தையடுத்து, சங்ககிரி பணிமனை கிளை மேலாளரை சந்தித்து வாலிபர் சங்கத்தினர் கோரிக்கை மனு அளித் தனர். மனுவை பெற்றுக்கொண்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் கூடுதலாக எஸ்1 பேருந்து இயக்கு வது குறித்து சேலம் கோட்ட மேலா ளர், வர்த்தக பிரிவு மேலாளர் ஆகி யோரிடம் ஆலோசனை மேற் கொண்டு, பேருந்துகளை இயக்க நட வடிக்கை எடுக்கப்படும் என்றார்.