திருப்பூர், ஜூன் 27 - தாராபுரம் நகர்மன்றக் கூட்டத் தில் ஆளுங்கட்சியை சேர்ந்த 17 நகர்மன்ற உறுப்பினர்கள் வெளி நடப்பு செய்தனர். தாராபுரம் நகராட்சி நகர்மன்றக் கூட்டம் வியாழனன்று நடைபெற் றது. இந்தக் கூட்டத்திற்கு நகராட்சி ஆணையாளர் சித்திரைச் செல்வன் முன்னிலையில், நகர்மன்றத் தலை வர் கு.பாப்பு கண்ணன் தலைமை வகித்தார். நகராட்சி துணைத்தலை வர் ரவிச்சந்திரன் உள்பட 30 நகர் மன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இந்நிலையில் 17 நகர்மன்ற உறுப்பினர்கள், தங்க ளுக்கு கூட்டம் தொடங்குவதற்கு முன் அமர்வதற்கு இருக்கை மற் றும் அமரும் அறை கொடுக்க வில்லை, தங்களது குறைகளை நகராட்சியில் பணியாற்றும் அதிகா ரிகளிடம் தெரிவித்தால், கவுன்சிலர் களின் குறைகளை ஊழியர்கள் ஏற் றுக் கொள்வதில்லை, கவுன்சிலர் களை ஊழியர்கள் கொச்சை வார்த் தையில் பேசுவதாக தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். இதற்கு துணை போகும் நகராட்சி ஆணை யாளர் மற்றும் நகர் மன்றத் தலைவர் ஆகியோருக்கு எங்களது கடும் கண் டனத்தை தெரிவிக்கிறோம் என்று கூறி நகராட்சி அலுவலக நுழை வாயில் முன்பு நின்று எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும் கவுன்சிலர்களுக்கு உரிய மரியாதை கொடுக்காத அதி காரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நகர்மன்ற கூட்டத்தை வருங்காலங்களில் தொடர்ந்து புறக்கணிப்போம் என பாதிக்கப்பட்ட 17, நகர்மன்ற உறுப் பினர்களும் தெரிவித்தனர். வெளி நடப்பு செய்த நகர் மன்ற உறுப்பி னர்கள் ஆளுங்கட்சியான திமுக வைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப் பிடத்தக்கது. இதனால் தாராபுரம் நகராட்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.