districts

img

நேருவின் பெயரைக் கேட்டாலே அலறும் ஆர்எஸ்எஸ்

நாகர்கோவில், நவ.16- மக்களுக்கு மத உரிமை உண்டு.  ஆனால் அரசு அதிலிருந்து விலகி  இருக்க வேண்டும். இந்த அருமை யான கோட்பாட்டை மக்களுக்கு எடுத்துச் சொன்னதோடு அதை நடை முறைப்படுத்தியவர் நேரு. அதை அர சமைப்பு சாசன மாண்பாக கொண்டு வந்த நேருவின் பெயரைக் கேட் டாலே ஆர்எஸ்எஸ் அலறுகிறது என்று பேராசிரியர் அருணன் கூறி னார். நாகர்கோவிலில் திங்களன்று மக்கள் ஒற்றுமை இயக்கம் நடத்திய குழந்தைகள் தின விழாவில் அவர்  மேலும் பேசியதாவது: நமது நாட்டின்  முதல் பிரதமர் நேரு 9 ஆண்டுகள் சிறை வாசம் இருந்தார். 1921 இல்  அவர் முதன்முதலாக சிறைக்கு  சென்று 88 நாட்களை கழித்தார். 1942 இல் அவர் கடைசியாக சிறைக்கு சென் றார். அப்போது தொடர்ந்து 1945 வரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்கள் தொடர்ந்து அவர் சிறையில் இருந் தார். 1946 இல் பிரதமரானார். 1947 இல் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர். இப்படிப்பட்ட நேருவின் பெயரைக் கேட்டால் ஆர்எஸ்எஸ் காரர்களுக்கு காதில் ஈயத்தை காய்ச்சு ஊற்றியது  போலாகிவிடும். ஏனென்றால் அவர் கள் ஆங்கிலேயரின் காலை நக்கிய வர்கள். அவர்களது காலணியை துடைத்துக் கொண்டிருந்தார்கள் என்பதுதான் உண்மை. ஒன்பது ஆண் டுகள் சிறையில் இருந்தார் நேரு. ஒரு மன்னிப்பு கடிதம் எழுதியதில்லை. ஆனால் ஆர்எஸ்எஸ் போற்றும் சாவர்க்கர் 9 மன்னிப்பு கடிதம் எழுதி னார்.

எட்டு ஆண்டுகளாக மோடி பிரத மர். அவர் மீது குற்றச்சாட்டுகள் வைத் தால், எல்லாவற்றுக்கும் காரணம் நேரு என்கிறார். 58 ஆண்டுகளுக்கு  முன்பு மறைந்த நேருவா இன்றைக்கு இருக்கும் பிரச்சனைகளுக்கெல் லாம் காரணம்? நேரு மீது இவர்க ளுக்கு இவ்வளவு ஆத்திரம் எழ கார ணம் ஆர்எஸ்எஸ் முகத்திரையை  கிழித்தவர் நேரு. இஸ்லாமியர்களும், கிறித்தவர்களும் இந்தியாவின் பூர்வ குடி மக்கள். அவர்கள் அன்னிய தேசத் தவர்கள் அல்ல. உங்கள் சாதிக் கொடுமை கண்டு மதம் மாறியவர் கள். இந்த நாட்டிற்கு வெளிநாட்டிலி ருந்து மதத்துடன் வந்தவர்கள் ஆரி யர்கள். இதை சொன்னவர் ஜவஹர் லால் நேரு. இந்திய தரிசனம் என்கிற  அற்புதமான படைப்பை தந்தவர் நேரு. அதில் அவர், சிந்து வெளி நாக ரீகத்துக்கு பிறகு ஆரியர்கள் இந்த  பூமிக்கு வந்தார்கள் என்று குறிப்பிடு கிறார். அவர்கள் இடைவெளி இல்லா மல் அடுத்தடுத்து வந்தார்கள் என்றும் கூறுகிறார். இந்த உண்மையை நேரு  சொன்னதால்தான் அவர் மீது இவ்வ ளவு கோபம்.

விடுதலையின்போது பாகிஸ் தான் முஸ்லீம் நாடு என பிரகடனம் செய்தது தவறு என கூறிய ஆர்எஸ்எஸ் இந்தியாவை இந்துநாடு என அறி விக்குமாறு வலியுறுத்தியது. பாகிஸ் தானின் பிரகடனம் தப்பு என்றால்  அந்த தப்பை இந்தியா ஏன் செய்ய  வேண்டும் என்று அப்போது நேரு கேட்டார். மகாத்மா காந்தியை சுட்டுக்  கொன்றான் கோட்சே. அடுத்த ஐந்தா வது நாள் ஆர்எஸ்எஸ்ஸை தடை  செய்தார் பிரதமர் நேரு. அப்போது  பிரதமர் என்கிற முறையில் அனைத்து முதலமைச்சர்களுக்கும் நேரு எழு திய கடிதத்தில், இந்த நாட்டை இந்து  ராஸ்ட்டிரமாக மாற்ற வேண்டும் என  நினைக்கிறவன்தான் இந்த நாட்டின்  மகத்தான இந்துவை கொலை செய்தி ருக்கிறான் என்று சுட்டிக்காட்டினார். 1948-49 களில் அவர் தொடர்ந்து முதல் வர்களுக்கு கடிதம் எழுதுகிறார். அந்த கடிதங்களில் எல்லாம் ஆர்எஸ் எஸ்ஸை அவர் தோலுரித்து காட்டு கிறார். ஆர்எஸ்எஸ் ஒரு பலாத்கார அமைப்பு. நாஜிகளை பின்பற்றுகி றது. ஆகவே, ஆர்எஸ்எஸ்ஸை ஒடுக்க வேண்டியது ஒரு ஜனநாயக நாட்டின் கடமை என்று முதல்வர்க ளுக்கு கடிதம் எழுதியவர் பிரதமர்  நேரு. இந்த நாடு மதச்சார்பற்றதாக இருக்க வேண்டும் என்பதில் துணி வும் உறுதியும் கொண்டிருந்தார்  நேரு. மக்களுக்கு மத உரிமை உண்டு, ஆனால் அரசு அதிலிருந்து  விலகி இருக்க வேண்டும். இந்த அரு மையான கோட்பாட்டை மக்களுக்கு  எடுத்துச் சொன்னவர்கள், அதை நடை முறைப் படுத்தியவர்கள், அதை அரச மைப்பு சாசன மாண்பாக கொண்டு  வந்தவர்கள் நேருவும், அண்ணல் அம் பேத்கரும். அதனால்தான் இவர்க ளது பெயர்களைக் கேட்டாலே சங்பரி வாரத்தின ருக்கு கோபம் வருகிறது என்று கூறினார். மக்கள் ஒற்றுமை இயக்க ஒருங்கி ணைப்பாளர் பேராசிரியர் தா.நாகரா ஜன் விழாவுக்கு தலைமை வகித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு, அருட்பணி மரிய வின் சென்ட், மனிதநேய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் ப.அப்துல் சமது  உள்ளிட்டோர் பேசினர். பாலர் சங்கத் தைச் சேர்ந்த சிறார் கலை நிகழ்ச்சி யும் நடைபெற்றது.