வடமாநிலத்தை சேர்ந்த இருவர் கைது
கோவை. நவ.15– கோவை சரவணம்பட்டியில் நடை பெற்ற வாகன சோதனையின் போது ரூ.72 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட பான்மசாலா புகையிலை பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். வடமாநிலத்தை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். கோவை சரவணம்பட்டி காவல்துறை யினர் சக்தி சாலையில் உள்ள சோதனை சாவடியில் வெள்ளியன்று சோதனை செய்துகொண்டிருந்தனர். அப்பொழுது அதன் வழியாக மினி லோடு லாரி ஒன்று பொருள்கள் ஏற்றிக் கொண்டு வந்து கொண் டிருந்தது. அதை நிறுத்தி காவல்துறையினர் சோதனை செய்தனர். அப்போது அதில் வட மாநிலத்தில் இருந்து கோவைக்கு பான் மசாலா பொருட்கள் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. உடனே காவலர்கள் அதை பறிமுதல் செய்து லாரியை ஓட்டி வந்த வட மாநில வாலிபர் மோதிலால் (30),சேஷ்த ராம் (32). ஆகியோரிடம் விசாரணை செய்தனர். அப்பொழுது அவர்கள் கோவை கரு மத்தம்பட்டி செல்லும் வழியில் உள்ள ஒரு குடோனுக்கு கொண்டு செல்வதாகவும் அங்கிருந்து கோவையில் உள்ள அனைத்து கடைகளுக்கும் விநியோகம் செய்யப்படு வதாகவும் தெரிவித்தார். இதன் அடிப்படை யில் அங்கு சென்று குடோனை ஆய்வு செய்து பார்த்தனர் அப்பொழுது அங்கு ரூ.72 லட்சம் மதிப்பிலான புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து வாகனத்தை பறிமுதல் செய்த காவல்துறையினர் குடோனுக்கு பூட்டு போட்டனர். இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றன. கோவையில் தடை செய்யப்பட்ட பான் மசாலா பறிமுதல் செய்யப்பட்டது பரப ரப்பை ஏற்படுத்தி உள்ளது.