திருப்பூர், ஜன.30- ஓய்வு பெறும் மேல்நிலைத் தொட்டி ஆப்ரேட்டர் மற்றும் தூய்மை பணியாளர்க ளுக்கு ரூ. 3 லட்சம் பணிக்கொடையும், மாத ஓய்வூதியம் ரூ.3 ஆயிரமும் வழங்க வேண் டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திங்களன்று ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. மேல்நிலைத் தொட்டி ஆப்ரேட்டர்கள், தூய்மை பணியாளர் மற்றும் தூய்மை காவ லர் மாநில ஒருங்கிணைப்புக் குழு சார்பில் மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டத் திற்கு அறைகூவல் விடுக்கப்பட்டிருந்தது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத் தின் சிஐடியு மாவட்ட தலைவர் பி.பழனிசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, ஊரக உள் ளாட்சிதுறை துணை இயக்கு நரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. சிஐடியு மாவட்ட செயலா ளர் கே.ரங்கராஜ் வழங்கிய இம்மனுவில் கூறியிருப்ப தாவது, மேல்நிலைத் தொட்டி ஆப்ரேட்டர்களுக்கு மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான ஊதியம் வழங்க வேண்டும், 2013 ஆம் ஆண்டிற்கு முன் வேலைக்கு சேர்ந்த தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், தூய்மை காவலர்களுக்கு ஊராட்சிகளின் மூலம் நேரடியாக ஊதியம் வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. முன்னதாக இந்த ஆர்ப்பாட்டத்தில், சிஐ டியு மாவட்ட செயலாளர் கே. ரங்கராஜ், மாவட்ட துணை தலைவர் கே.உன்னிகிருஷ் ணன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில் திரளானோர் பங்கேற்றனர். முடிவில் இந்த அமைப்பின் மாநில ஒருங் கிணைப்பு குழு உறுப்பினர் பி ஈஸ்வரன் நன்றி தெரிவித்தார்.