கோவை, மே 8- கோவையில் ஏலம் விடப்பட்ட சொத்தை மீட்டுத்தருவதாக கூறி, ரூ.38.50 லட்சம் மோசடி செய்த 2 பெண்களை காவல் துறையினர் கைது செய்தனர். கோவையை அடுத்த பிரஸ் காலனி சி.எஸ்.ஐ. நகரை சேர்ந்த வர் பிரின்ஸ் ராஜ் (43). இவருடைய தந்தை ஞானசிங் என்பவர் பெரிய நாயக்கன்பாளையத்தில் 13 சென்ட் நிலத்தை வாங்கியுள்ளார். பின்னர், ஞானசிங் கடந்த 2010 ஆம் ஆண்டு இறந்ததையடுத்து, அந்த நிலத்தை பிரின்ஸ் ராஜின், மூத்த சகோதரரான, இன்பராஜ் தனியார் வங்கியில் ரூ.42 லட்சத்து துக்கு அடகு வைத்தாக தெரி கிறது. ஆனால், அவரால் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. இதற்கிடையில், கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வங்கி நிர் வாகம் சொத்துக்களை பறிமுதல் செய்தது. இந்த சொத்தில் பிரின்ஸ் ராஜிக்கும் பங்கு உண்டு என்ப தால், சொத்து பறிமுதல் செய்யப் பட்ட சம்பவத்தை எதிர்த்து கடன் மீட்பு தீர்ப்பாயம் மற்றும் கூடுதல் துணை நீதிபதி நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது.
யில் உள்ள தனியார் நிறுவனத் தின் தலைமை விற்பனை அதிகா ரியான கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த சுமதி (44) மற்றும் நிர்வாக இயக்குனர் கல்பனா (42) ஆகி யோர் குட்டி என்பவர் மூலம் இந்த சொத்து பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தையறிந்து பிரின்ஸ் ராஜை தொலைபேசியில் தொடர்பு கொண்டனர். அப்போது சொத்து பிரச்சினையை தீர்க்க சாய்பாபா காலனியில் உள்ள தங்கள் அலு வலகத்திற்கு வருமாறு கேட்டு உள் ளனர். இதை நம்பிய அவர், சுமதி மற்றும் கல்பனா ஆகியோரை சந் தித்தார். அப்போது, வங்கி நிர்வா கம் பறிமுதல் செய்த உத்தரவில் தவறு உள்ளதாகவும், நீதிமன்றத் தில் தலையிட்டு வங்கி பறிமுதல் செய்த சொத்துக்களை மீட்டுத்தரு வதாகவும் கூறி உள்ளனர். மேலும், சொத்துக்களை பறிமுதல் செய்த தனியார் வங்கியில் இருந்து ரூ.3 கோடி இழப்பீட்டு தொகையும் வழங் கப்படும் என்றும் உறுதியளித்த னர். அத்துடன் தங்களுக்கு அரசி யல் தலைவர்கள் மற்றும் அமைச்சர் களிடம் நெருங்கிய தொடர்பு இருப் பதாக கூறி ஒரு சில அரசியல்வாதி கள் மற்றும் அமைச்சர்களின் புகைப்படங்களை காட்டியுள்ள னர்.
இதையடுத்து, பிரின்ஸ் ராஜ் தனது குடும்ப சொத்து திரும்ப கிடைக்கும் என்று நம்பினார். சொத் துகளை பறிமுதல் செய்ததற்கான உத்தரவை ரத்து செய்ய ரூ.60 லட் சம் தர வேண்டும் என கேட்டுள்ள னர். இதையடுத்து, பிரின்ஸ் ராஜ் 2020 ஆம் ஆண்டில் 2 பேரிடமும் ரூ.38 லட்சத்து 50 ஆயிரத்தை பல் வேறு தவணைகளில் கொடுத்து உள்ளார். இந்நிலையில், பிரின்ஸ் ராஜுக்கு ஆதரவாக நீதிமன்றத் தில் ஆணை பெற்றதாக சுமதி கூறினார். ஆனால், கடந்த 2 ஆண் டுகளாக பெற்றதாக கூறப்பட்ட நீதிமன்ற உத்தரவு நகலை பிரின்ஸ் ராஜிடம், அவர்கள் இருவரும், வழங்காமல் பல்வேறு காரணங்க ளைக்கூறி காலம் தாழ்த்தி வந்துள் ளனர். இதனால், சந்தேகமடைந்த பிரின்ஸ் ராஜ், தனது பணத்தை திரும்பக் கேட்டுள்ளார். ஆனால், அதற்கு அவர்கள் மிரட்டல் விடுத்த தாக கூறப்படுகிறது. இதுகுறித்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரின்ஸ்ராஜ் கோவை மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித் தார். இதையடுத்து மேற்கு மண் டல காவல் துறை தலைவர் உத்த ரவின்பேரில் சுமதி, கல்பனா ஆகி யோர் மீது மோசடி, மிரட்டல் உள் ளிட்ட பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.