districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் ரூ.1.69 கோடி அபராமாக வசூல்

சேலம், நவ.24- சேலம் ரயில்வே கோட்டத்தில் டிக்கெட் பரிசோதனை அதிகாரிகள்  நடத்திய சோதனையில், கடந்த ஒரு மாதத்தில்  ரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்த 21,120 பேரிடம்  இருந்து ரூ.1.69 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டது. ரயில்களில் டிக்கெட் இன்றி பயணம் செய்வதை தடுக்கும்  வகையில், அனைத்து ரயில் நிலையங்களில் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்  சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் கவுதம் சீனிவாஸ் உத்த ரவின்பேரில், சேலம் கோட்ட முதுநிலை வணிக மேலாளர்  ஹரிகிருஷ்ணன் தலைமையில் பயணச் சீட்டு பரிசோத கர்கள் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் அடங்கிய குழுவினர் ரயில்வே கோட்டத்தில் உள்ள அனைத்து ரயில்  நிலையங்களிலும் சோதனை மேற்கொண்டனர். இதில் எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் ரயில்களில் மேற் கொள்ளப்பட்ட சோதனையில், கடந்த அக்டோபர் மாதம் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தவர்கள், பொது பெட்டி  டிக்கெட்டை வைத்து முன்பதிவு பெட்டியில் பயணம் செய்த வர்கள் மற்றும் அதிக பார்சல் கொண்டு வந்தவர்கள் உள்பட  21ஆயிரத்து 120 பேர் மீது ரயில்வே சட்டப்படி வழக்கு  பதிவு செய்யப்பட்டு ரூ.1.69 கோடி அபராதம் வசூலிக்கப் பட்டுள்ளது முன்னதாக, ஆயுதப் பூஜை, தீபாவளி பண்டிகையை யொட்டி நடத்திய சோதனையில் சேலம் கோட்டத்தில் டிக்கெட்  இல்லாமல் பயணம் செய்தவர்களிடம் இருந்து அதிகள விலான அபராதம் வசூலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நகைகடையில் கொள்ளையடித்தவர் கைது

கோவை, நவ.24- நகை கடையை உடைத்த கொள்ளையடித்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே கார மடை அருகே நகைக்கடையை உடைத்து 13 பவுன் தங்க நகை  மற்றும் அரை கிலோ வெள்ளியை மர்ம நபர்கள் திருடி சென் றனர். இதுகுறித்து சாந்தாமணி காரமடை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் 3 தனிப்படை அமைத்து  கடை மற்றும் அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு காமி ராக்களை ஆய்வு செய்து அதில் பதிவாகி இருந்த காட்சியை  வைத்து கொள்ளையனை தேடி வந்தனர்.  இதையடுத்து தனிப்படை போலீசார் கேரளா மாநிலம், கண்ணூர் மாவட்டம், நெல்லிகுந்து பகுதியை சேர்ந்த தங்கச்சி  மாருதி (52) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து  வெள்ளி பொருட்கள் மீட்டதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வரு கின்றனர். 

பெண்ணிடம் தங்க நகை பறிப்பு

கோவை, நவ. 24 -  கோவையில் பட்டபகலில் பெண் ஒருவரிடம் தங்க நகை  பறித்து சென்ற சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை-சிங்காநல்லூரை சேர்ந்த செல்வி (50) திரு குமரன் நகர் பகுதியில் தனது இருமகள்களுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். தனியார் நிறுவனத்தில் பணி  புரிந்து வரும் இவர் செவ்வாயன்று வேலைக்கு புறப்படுவ தற்காக வீட்டுக்குள்ளே இருந்து வெளியே வருவதற்கு கதவை திறந்துள்ளார். அப்போது கதவுக்கு வெளியே ஒரு  அடையாளம் தெரியாத நபர் நின்றுள்ளார். சந்தேகமடைந்த செல்வி கதவை மூட சென்ற போது அந்த நபர் செல்வியின்  கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தாலி சங்கிலியை பறித்து  செல்வி கீழே தள்ளிவிட்டு தப்பித்து ஓடினார். இதனை யடுத்து பதறிக்கொண்டு வீட்டை வெளியே வந்த செல்வி பார்க்கும்போது  தன்னிடம் இருந்து தங்க சங்கிலியை பறித்த  நபர் வெளியே காத்திருந்த மற்றொரு நபரின் இருசக்கர வாக னத்தில் சென்றது தெரியவந்தது. இதனை தொடர்ந்து  இச்சம்பவம் தொடர்பாக சிங்காநல்லூர் காவல்நிலையத்தில் புகாரளித்தார்.  புகாரின் பேரின் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை யினர் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.  இதில் இருவர் இருசக்கர வாகனத்தில் வந்ததும் ஒருவர் வெளியே காத்திருந்தும், மற்றொரு நபர் வீட்டிற்குள் புகுந்து  செல்வியிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து விட்டு இரு  சக்கர வாகனத்தில் தப்பிச்செல்ல முயன்றதும் கண்காணிப்பு கேமரா காட்சிகளில் தெரியவந்தது. இச்சம்பவம்  தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மர்ம  நபர்களை தேடி வருகின்றனர். 

லாரி மோதி  முதியவர் பலி 

கோவை, நவ.24- கோவையில் டிப்பர் லாரி மோதி முதியவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.  கோவை-சிங்காநல்லூர் அருகே உள்ள உப்பிலி பாளையத்தை சேர்ந்தவர் நந்தகோபால் (61). தொழிலாளி. இவர் வியாழனன்று காலை இருசக்கர வாகனத்தில் திருச்சி  சாலைக்கு வந்தார். அப்போது திருச்சி சாலையில் உள்ள தனியார் பெண்கள் கல்லூரி சந்திப்பு அருகே வந்தபோது அந்த வழியாக வந்த டிப்பர் லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி நந்தகோபால் சாலையில் விழுந்தார். இதில்,   சக்கரத்தில் சிக்கி நந்தகோபால் தலை நசுங்கி சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக இறந்தார்.  இத்தகவலறிந்த கோவை கிழக்கு  போக்குவரத்து போலீ சார் சம்பவ இடத்துக்கு வந்து நந்தகோபாலின் உடலை மீட்டு  பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி  வருகின்றனர்.

வைரஸ் காய்ச்சலுக்கு சிறுவன் பலி

கோவை, நவ.24- கோவை மாவட்டம், சுந்தராபுரத்தை அடுத்த குறிச்சி ஆண்டாள் தோட்டத்தை சேர்ந்தவர் மனோவா மகன் பிரனேஷ்  (12). இவருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு காய்ச்சல் பாதிப்பு  ஏற்பட்டது. இதனையடுத்து பிரனேசை அவரது பெற்றோர் அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று, சிகிச்சை அளித்தனர். ஆனால், காய்ச்சல்  குணமாகவில்லை. இந்நிலையில், வீட்டிலிருந்த சிறுவனின் உடல் நிலை மிகவும் மோசமடைந்தது. அப்போது திடீரென  அவருக்கு வலிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் கோவை  அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு  அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், பிரனேஷ் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போத்தனூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இருசக்கர வாகன பந்தயத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது

உதகை, நவ.24- உதகையில் இருசக்கர வாகன பந்தயத் தில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது செய்யப் பட்டனர்.  தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இளைஞர்கள் மோட்டார் சைக்கிள் பந்த யத்தில் ஈடுபட்டு அதனை வீடியோ எடுத்து  சமூக வலைதளங்களில் பதிவேற்றுகின் றனர்.  இதனை சகாசம் என கருதி மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபடுவது பல  இடங்களிலும் நடைபெறுகிறது. இதே போன்று நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து கோத்தகிரி செல்லும் சாலையில் 2 மோட்டார் சைக்கிளில் வாலிபர்கள் பந்த யத்தில் ஈடுபட்டனர். மோட்டார் சைக் கிளில் ஒவ்வொன்றும் பயங்கர சத்தத்துடன்  வேகமாக சாலைகளில் அலறியவாறு சென்றது. அப்போது மோட்டார் சைக்கிளில் வீலிங் செய்தவாறு வாலிபர்கள் சென் றதைப் பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதைத் தொடர்ந்து பொதுமக்கள் அந்த வாலிபர்கள் மோட்டார் சைக்கிள் திரும்பி வரும் போது தடுத்து நிறுத்தினர். அப்போது பொதுமக்களுக்கும் வாலிபர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது குறித்த தகவலின் பெயரில் ஊட்டி மத்திய காவல் ஆய்வாளர் மணி குமார், உதவி ஆய்வாளர் கண்ணன் ஆகியோர் தலை மையிலான போலீசார் வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். இதில், அவர்கள் உதகை நகர் பகுதியை சேர்ந்த தினேஷ் பாலன் (25), தீபக்ராஜ் (24),  ரித்தீஷ் (24) என்பதும், தனியார் நிறுவனத்தில்  ஊழியர்களாக பணியாற்றும் இவர்கள் இரவு  நேரங்களில் மோட்டார் சைக்கிள் பந்த யத்தில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மீது ஐ.பி.சி.  279 (மனித உயிர்களுக்கு ஆபத்து ஏற்ப டுத்தும் வகையில் அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுதல்) மோட்டார் வாகன சட்டம்  189 (அதி வேகமாக ஓட்டுதல்)  ஆகிய பிரிவு களில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதை  தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் கைது செய் தனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், இதுபோன்ற சாகசங்களில் ஈடுபாட்டால் இளைஞர்களுக்கு உயிரிழப்பு மற்றும் உடல்  ஊனம் ஏற்படுவதுடன் வழக்கு பதிவு செய்வ தால் அவர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகி விடும், என்றனர்.

கோட்டயத்திற்கு கோவை வழியாக சிறப்பு ரயில்

கோவை, நவ.24- சபரிமலை கூட்ட நெரிசலைக் கட்டுப் படுத்தும் வகையில், கோவை வழித் தடத்தில் செகந்தராபாத் - கேரள மாநிலம் கோட்டயம் இடையே சிறப்பு ரயில் இயக்கப் படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித் துள்ளது.  இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே நிர் வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, செகந்தராபாத்தில் இருந்து நவம்பர் 27 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.50  மணிக்குப் புறப்படும் செகந்தராபாத் - கோட்டயம் சிறப்பு ரயில் (எண்:07125) மறு நாள் இரவு 9 மணிக்கு கோட்டயம் ரயில் நிலை யத்தைச் சென்றடையும். இதேபோன்று நவம்பா் 28ஆம் தேதி  (திங்கள்கிழமை) இரவு 11.15 மணிக்கு கோட்ட யத்தில் இருந்து புறப்படும் கோட்டயம் - செகந்தராபாத் சிறப்பு ரயில் (எண்:07126) 30ஆம் தேதி காலை 4 மணிக்கு செகந்தரா பாத் ரயில் நிலையத்தைச் சென்றடையும். இந்த ரயிலானது எா்ணாகுளம், ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட் பாடி, ரேணிகுண்டா, கூடூர், நெல்லூர், ஓங்கோல், சிராலா, தெனாலி, குண்டூர் உள் ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும்.  இந்த ரயில் செகந்தராபாத்தில் இருந்து கோவைக்கு நண்பகல் 3.07 மணிக்கு வந்து  3.10க்கு புறப்பட்டு செல்லும். கோட்டயத்தில் இருந்து கோவைக்கு காலை 4.37க்கு வந்து  4.40 மணிக்கு புறப்பட்டு செல்லும். பிகார் மாநிலம் தா்பங்காவில் இருந்து நவம்பர் 21ஆம் தேதி முதல் ஜனவரி 12ஆம்  தேதி வரை திங்கள்கிழமைகளில் இரவு 9.15  மணிக்குப் புறப்படும் தா்பங்கா - எர்ணா குளம் வாராந்திர ரயில் (எண்: 05555) வியாழக் கிழமைகளில் காலை 6 மணிக்கு எர்ணா குளத்தைச் சென்றடையும். எர்ணாகுளத்தில் இருந்து நவம்பர் 24 ஆம் தேதி முதல் டிசம்பா் 15ஆம் தேதி வரை  வியாழக்கிழமைகளில் இரவு 9 மணிக்குப் புறப்படும் எா்ணாகுளம் - தா்பாங்கா வாராந் திர ரயில் (எண்: 05556) ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணிக்கு தா்பங்காவைச் சென்ற டையும். இந்த ரயிலானது, திருச்சூர், பாலக்காடு,  கோவை, ஈரோடு, சேலம், ஜோலார் பேட்டை, காட்பாடி, பெரம்பூர், விஜயவாடா,  ராஜமுந்திரி, சம்பல்பூர், ரூா்கேலா, ஹாட்டியா, ராஞ்சி, தன்பாத் உள்ளிட்ட நிலை யங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக் கப்பட்டுள்ளது. இந்த ரயிலானது தர்பங்காவில் இருந்து  கோவைக்கு இரவு 12.40 மணிக்கு வந்து  12.45க்கு புறப்பட்டு செல்லும். எர்ணா குளத்தில் இருந்து கோவைக்கு காலை 12.50க்கு வந்து 12.55 மணிக்கு புறப்பட்டு செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூரில் பள்ளி மாணவிக்கு டெங்கு காய்ச்சல்

திருப்பூர், நவ. 24 - திருப்பூர் நெசவாளர் காலனி மாநகராட்சி பள்ளியில் 4ஆம்  வகுப்பு படிக்கும் மாணவி அழகு மீனாட்சி (9) டெங்கு  காய்ச்சல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். திருப்பூரில் அண்மையில் பெய்த பருவமழை காரணமாக  தட்ப வெப்ப நிலையில் மாற்றம் ஏற்பட்டு பரவலாக காய்ச்சல்  பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. வைரல் காய்ச்சல் மற்றும் புளூ  காய்ச்சல் பாதிப்பு பெருமளவு பதிவாகி உள்ளது. அதேசமயம்  டெங்கு காய்ச்சல் பாதிப்பும் உள்ளதாக மருத்துவர்கள் தரப் பில் தெரிவித்தனர். எனினும் இதுவரை மாநகராட்சி நிர்வா கமோ, சுகாதாரத் துறையோ டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட் டதாக அதிகாரப்பூர்வமாக எந்த விபரத்தையும் தெரிவிக்க வில்லை. திருப்பூர் பிச்சம்பாளையம் புதூரில் வசித்து வருபவர் பாண்டியன். இவர் நெசவாளர் காலனி பகுதியில் செகண்ட்ஸ்  குடோனில் வேலை செய்து வருகிறார். இவரது மகள் அழகு  மீனாட்சி, திருப்பூர் பி.என்.சாலை நெசவாளர் காலனி மாநக ராட்சிப் பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.இவருக்கு கடந்த வாரம் வெள்ளிக்கிழமை காய்ச்சல் ஏற் பட்டது. இதற்காக மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில்  நான்கு  நாட்களுக்கு மேலாக காய்ச்சல் விடவில்லை. இதை யடுத்து தனியார் மருத்துவமனையில் அழகு மீனாட்சிக்கு புதன்கிழமை ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில்  அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்ப ட்டது. இதையடுத்து அவரை திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி  மருத்துவமனையில் சேர்க்கும்படி மருத்துவர்கள் பரிந்து ரைத்தனர். எனினும் அவரது பெற்றோர், தங்கள் சொந்த ஊர்  உள்ள மதுரை மாவட்டத்திற்கு மாணவியை அழைத்துச் சென்று திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.  அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து தற்போது சிகிச்சை அளித்து வருவதாக மாணவி அழகு மீனாட்சியின் தந்தை பாண் டியன் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், நெசவாளர் காலனி பள்ளியில்  500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வரும் நிலை யில் இரண்டு, மூன்று கழிப்பறைகள் மட்டுமே உள்ளன. அவை யும் சுத்தமாக பராமரிக்கப்படாத நிலை உள்ளது. அப்பகு தியைச் சுற்றிலும் சுகாதாரமற்ற நிலை உள்ளது. இதனால் பள் ளியில் படிக்கும் மாணவர்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது.  எனவே மாநகராட்சி மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் கண் காணித்து நோய் பரவலைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

பல்லடம் ஒன்றியத்தில் இன்று பி.ஆர்.நடராஜன் எம்.பி. ஆய்வு

பல்லடம் ஒன்றியத்தில் இன்று பி.ஆர்.நடராஜன் எம்.பி. ஆய்வு திருப்பூர், நவ. 24 - கோவை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடரா ஜன் வெள்ளிக்கிழமை பல்லடம் ஊராட்சி ஒன்றியப் பகுதியில்  ஆய்வுப் பணிகள் மேற்கொள்வதுடன் மக்களை சந்தித்து குறைகளைக் கேட்டறிகிறார். காலை 10 மணிக்குத் தொடங்கி சித்தம்பலம் ஊராட்சி, வடு கபாளையம் புதூர் ஊராட்சி, கணபதிபாளையம் ஊராட்சி,  கரைப்புதூர் மற்றும் ஆறுமுத்தாம்பாளையம், 63 வேலம்பா ளையம், பூமலூர், மாணிக்காபுரம் ஆகிய ஊராட்சி மன்ற அலு வலகங்களில் அவர் ஆய்வு செய்வதுடன், மக்களை சந்திக்கி றார்.  பிற்பகல் 3.30 மணிக்கு பல்லடம் நகராட்சி அலுவ லகத்தில் அவர் ஆய்வு மேற்கொள்வதுடன், மக்கள் சந்தித்து  குறைகளைக் கேட்டறிகிறார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் பல்லடம் ஒன்றியச் செயலாளர் ஆர்.பரமசிவம் தெரி வித்துள்ளார்.

அணைகளின் நிலவரம் 

திருமூர்த்தி அணை நீர்மட்டம்:53.07/60அடி நீர்வரத்து:54கன அடி
வெளியேற்றம்:24கன அடி
அமராவதி அணை நீர்மட்டம்: 89.18/90அடி.நீர்வரத்து:650கனஅடி
வெளியேற்றம்:408கனஅடி

பருத்தி ஏலம்
திருப்பூர், நவ.24- அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் புதன் கிழமை நடைபெற்ற பருத்தி  ஏலத்தில் ரூ. 49 லட்சத்துக்கு வர்த்தகம் நடைபெற்றது. இதில், ஆர்சிஹெச் ரகப் பருத்தி குவிண்டால் ரூ.  7,000 முதல் ரூ.9,006 வரையி லும், மட்டரக (கொட்டு ரக)  பருத்தி குவிண்டால் ரூ.2,000  முதல் ரூ.4,000 வரையிலும் ஏலம் போனது.

சென்னையில் மாதர் சங்க தலைவர்கள் கைது  திருப்பூர் மாவட்டக்குழு கண்டனம்

திருப்பூர், நவ.24- கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரண வழக் கில் நியாயம் கேட்டு அனைத்திந்திய ஜனநா யக மாதர் சங்கம் சார்பில் காவல்துறை தலை மையகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.  அந்த போராட்டத்துக்குப் புறப்பட்டு கொண்டிருந்த மாதர் சங்க தலைவர்களை, அவர்களின் வீடுகளிலேயே வலுக்கட்டாய மாக கைது செய்து தமிழக காவல்துறை அரா ஜகமாக நடந்துள்ளது. இதற்கு அனைத்திந் திய ஜனநாயக மாதர் சங்க திருப்பூர் மாவட்ட  குழு  வன்மையான கண்டனம் தெரிவித்துள் ளது. இப்போராட்டத்தில் கலந்து கொள்ள இருக்கின்ற மாதர் சங்க நிர்வாகிகளை, தமி ழக அரசு, காவல்துறையை ஏவிவிட்டு வீடுக ளிலேயே வைத்து கைது செய்யும் கேவல மான நடவடிக்கையை கையாண்டுள்ளது. குறிப்பாக திருவள்ளூர் மாவட்டம், மாதர்  சங்கத்தின் மாநில நிர்வாகியான இ.மோக னாவை அவரது வீட்டில் வைத்து கைது  செய்து வெள்ளவேடு காவல் நிலையத்தில் தடுப்புக் காவலில் வைத்து உள்ளதை மாதர் சங்கம் வன்மையாக கண்டித்துள்ளது. தமிழக அரசு, காவல் துறை இந்த அராஜக  நடவடிக்கையை கைவிட வேண்டும். ஜனநா யக போராட்டத்தை ஒடுக்கக் கூடாது என்று ஜனநாயக மாதர் சங்க திருப்பூர் மாவட்ட தலைவர் எஸ்.பவித்ராதேவி, மாவட்ட செய லாளர் கு.சரஸ்வதி ஆகியோர் வியாழக்கி ழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளனர்.

ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்

உடுமலை, நவ.24- இந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட  கோவில் நிலங்களை தனிநபர் ஆக்கிரப்மிப்பு  செய்து உள்ளதை அகற்றி, சட்டப்படி பொது  ஏலம் விட வலியுறுத்தி பொதுமக்கள் கோட் டாட்சியரை முற்றுகையிட்டனர். உடுமலை கோட்டாட்சியர் அலுவலகத் தில் விவசாய குறை தீர்ப்பு கூட்டம் புதனன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வாளவாடி மற்றும் குரல்குட்டை பகுதிகளில் அரசுக்கு  சொந்தமான கோவில் நிலங்களை தனிநபர் கள் ஆக்கிரப்பு செய்து உள்ளார்கள். இதை  பலமுறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித் தும் நடவடிக்கை எடுக்காத காரணத்தால்,  வாளவாடி பகுதியிலிருந்து விவசாய குறை  தீர்ப்பு கூட்டத்திற்கு வந்த பொதுமக்கள் கோட் டாட்சியரை முற்றுகையிட்டு கோவில் நிலங் களை பொது ஏலத்தில் விடக்கோரி மனு அளித்தனர். மேலும் அந்த மனுவில் வாளவாடி கிராமத் தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில், விநாயகர் கோவில், உச்சிமகாளியம்மன் கோவில் மற்றும் ஜல்லிபட்டி கரட்டு பெரு மாள் கோவில்களுக்கு வாளவாடி கிராமத் தில் 106 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலங் களை முறையாக நிர்வாகம் செய்யாமல் இருப்பாதல் பல முறைகேடான செயல்கள் நடைபெற காரணமாக உள்ளது. எனவே அர சுக்கு வருமானம் ஏற்படும் வகையில் அர சுக்கு சொந்தமான அனைத்து நிலங்களை யும் பொது ஏலத்தில் விட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கோட்டாச்சியர் ஜஸ் வந்த் கண்ணன் பொதுமக்களிடம் உடனடி யாக நிலத்தை பார்வையிட்டு பொது ஏலம்  விட இந்து அறநிலையத்துறை அதிகாரிக ளுக்கு உத்தரவிடப்படும், என்றார்.

மாணவியின் கணவர் மீது  கல்லூரி நிர்வாகம் கடும் தாக்குதல்

மாணவியின் கணவர் மீது  கல்லூரி நிர்வாகம் கடும் தாக்குதல் சேலம், நவ.24- சேலத்தில் தனது மனைவியின் கல்வி கட்டணத்தை கண வன் செலுத்தச் சென்றபோது, தொப்பி அணிந்திருந்ததால் அவரை கல்லூரி நிர்வாகம் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், சின்ன திருப்பதி பகுதியில் செயல்பட்டு  வரும் ஜெயராம் கல்லூரியில் பொன்னம்மாபேட்டை பகு தியைச் சேர்ந்த சினேகா என்பவர் படித்து வருகிறார். இவ ரது கல்லூரி கட்டணத்தை கட்டுவதற்காக அவருடைய கண வர் ஜீவா கல்லூரிக்கு சென்றுள்ளார். அப்போது ஜீவா தொப்பி  அணிந்திருந்ததால், அதனை கழட்டுமாறு கல்லூரி நிர்வாகி கள் மற்றும் கல்லூரி தாளாளர் ராஜேந்திர பிரசாத் ஆகியோர் கூறியுள்ளனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்ட, மாணவியின் கணவரை கல்லூரி நிர்வாகத்தினர் கடுமையாக தாக்கியுள்ள னர். இதில், ஜீவாவின் வலது கையில் எலும்பு முறிவு ஏற் பட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனு மதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து கண்ணங்குறிச்சி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து அஸ்தம்பட்டி காவல் உதவி ஆணையாளர் லட்சுமி பிரியா தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

அன்னூரில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு நவ.28ல் உண்ணாவிரத போராட்டம்

கோவை, நவ.24- அன்னூரில் சிப்காட் அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரி வித்து வரும் நிலையில், நவ.28 ஆம் தேதியன்று கடைய டைப்பு செய்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவ தாக அப்பகுதி பொதுமக்கள் அறிவித்துள்ளனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் மற்றும் அன்னூர் ஒன்றியங்களில் பள்ளேபாளையம், இலுப்பநத்தம், பொக ளூர், குப்பனூர், அக்கரை செங்கம்பள்ளி, வடக்கலூர் உள் ளிட்ட 6 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 3 ஆயிரத்து 850 ஏக்கரில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் சார்பில் சிப்காட் அமைக்க தமி ழக அரசு முடிவு செய்தது. மேலும், அன்னூரில் சிப்காட்  அமைப்பதற்காக 3 ஆயிரத்து 731 ஏக்கர் நிலங்களை கையகப் படுத்தவும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதற்கு  எதிர்ப்பு தெரிவித்தும், அரசாணையை ரத்து செய்யக்கோரி யும் 6 ஊராட்சி மக்கள், விவசாயிகள் பல்வேறு கட்ட போராட் டங்களை நடத்தி வருகின்றனர். கடந்த நவ.21 ஆம் தேதியன்று  விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் என 2 ஆயிரத்திற்கும்  மேற்பட்டோர் அன்னூர் தாலுகா அலுவலகத்தை முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், சிப்காட் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரி வித்து உண்ணாவிரத போராட்டம் நடத்தப் போவதாக விவ சாயிகள் அறிவித்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறு கையில், அன்னூரில் சிப்காட் அமைப்பதால் விவசாயம் பாதிக்கப்படும். எனவே, அரசு இந்த திட்டத்தை கைவிட வேண்டும். அரசுக்கு எங்கள் கோரிக்கைளை எடுத்துரைக்கும் விதமாக பல போராட்டங்களை நடத்தியுள்ளோம். அதன் தொடர்ச்சியாக நவ.28 ஆம் தேதியன்று ஓதிமலை சாலையில் அமைந்துள்ள அண்ணா திடலில் ஒரு நாள் மட்டும் காலை  9 மணி முதல் மாலை 5 மணி வரை மாபெரும் உண்ணாவிர தம் மற்றும் கடையடைப்பு போராட்டம் நடத்த உள்ளோம். இதில், திரளான விவசாயிகளும், பொதுமக்களும் பங் கேற்க உள்ளனர், என்றனர்.

குன்னூர் ரயில் நிலையத்தில் அலைமோதும் சுற்றுலா பயணிகள்

உதகை, நவ.24- சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் குன்னூர் ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. நீலகிரி மாவட்டத்தின் சிறப்பு அம்சங்களில் ஒன்றாக நீல கிரி மலை ரயில் உள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் தொடங் கப்பட்ட இந்த ரயில் பாரம்பரிய சின்னமான யுனெஸ்கோ அந் தஸ்து பெற்றுள்ளது. இதன் காரணமாக மலை ரயிலில் பய ணம் செய்ய சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்ளுர் மக்க ளும் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையினால் தொடர் மழை பெய்து கொண்டு இருந்தது. இதனால் மாவட்டத்தி லுள்ள சுற்றுலா தளங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்து இருந்தது. இதன்காரணமாக மலை ரயில்களிலும் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. தற்போது நீலகிரி மாவட்டத்தில் மழை நின்று பனிப் பொழிவு தொடங்கி உள்ளது. இதனால் மலை ரயிலில் பய ணிக்க சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து உள்ளது. மேட்டுப்பாளையத்திலிருந்து வரும் மலை ரயிலில் மட்டு மின்றி குன்னூரிலிருந்து உதகை செல்லும் மலை ரயில்களி லும் கூட்டம் அலைமோதியது. சுற்றுலா பயணிகள் குன்னூர் ரயில் நிலையத்தில் காத்திருந்து மலை ரயிலில் உதகை மற் றும் மேட்டுப்பாளையத்திற்கு செல்கின்றனர்.