மாதர் சங்க கிளை அமைப்பு
திருப்பூர், மார்ச் 26 - திருப்பூர் தெற்கு மாநகரம் மிஷின் வீதியில் அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்க புதிய கிளை அமைக்கப் பட்டது. மாதர் சங்கம் கிளை அமைப்புக்கூட்டம் மிஷின் வீதியில் வெள்ளியன்று நடைபெற்றது. 20க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டார்கள். ஜனநாயக மாதர் சங்க மாவட்ட தலைவர் எஸ்.பவித்ரா தேவி, தெற்கு மாநகர செயலாளர் எஸ். பானுமதி, தெற்கு மாநகர தலைவர் டி.மினி, நகர் குழு உறுப்பினர் சசிகலா ஆகியோர் பங்கேற்றனர். இதில், தலைவராக சுதா, துணைத் தலைவராக ஜான் பேட்டி, செயலாளராக மஞ்சு, துணை செயலாளராக முத்து மாரி, பொருளாளராக கௌதமி மற்றும் கமிட்டி உறுப்பி னர்களாக இந்திராணி, ராதிகா, கனகா, புஷ்பா, ஈஸ்வரி ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர்.
உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு ரூ1.65 கோடி நிதி உதவி
உதகை, மார்ச் 26- உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு அரசு மூலமாக சுமார் ரூ.1.65 கோடி நிதி உதவி வழங்கப்பட்டு உள்ளது. வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் சார்பில், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக் கான மாவட்ட அளவிலான ஆய்வுக் கூட்டம் நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில் நடைபெற்றது. நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் இக்கூட்டத்திற்கு தலைமை ஏற்றார். இதில், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலமாக நீலகிரி மாவட்டத்தில் கூட்டுப்பண்ணையம் மற்றும் ஒன்றிய அரசின் 10 ஆயிரம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான திட்டத்தின் கீழ் மொத்தம் 9 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் கடந்த 5 வருடங்களில் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு அரசு மூலமாக சுமார் ரூ.1.65 கோடி நிதி உதவிகள் வழங்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கும் தொழில் தொடங்குவதற்காக தொடக்க நிதியுதவியாக ரூ. 5 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. மேலும் உழவர் உற்பத்தி யாளர் நிறுவனங்களை மேம்படுத்துவதற்காக திறன் மேம் பாட்டு பயிற்சிகள், தொழில்நுட்ப மேலாண்மை பயிற்சிகள், மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பதற்கான பயிற்சி கள், வர்த்தக மேம்பாடு தொடர்பான பயிற்சிகள் போன்ற பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு உள்ளன. இதில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான ஆதார நிறுவனங் களான நேசனல் அக்ரோ பவுண்டேசன், ஸ்நேகாலாய, ஈசா நிறுவனங்களின் செயல்பாடுகள் மற்றும் உழவர் உற்பத்தி யாளர் நிறுவனங்களின் வணிக செயல்பாடுகள் மாவட்ட ஆட்சியரால் ஆய்வு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் செயல் இயக்குநர்கள் மற்றும் இயக்குநர்கள் கலந்து கொண்டனர். இதில், 6 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு ஒற்றை சாளர உரிமத்தை விவசாயிகளுக்கு ஆட்சியர் வழங் கினார். கூட்டத்தில், தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் கருப்பசாமி வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறி யாளர் ராதகிருஷ்ணன், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை துணை இயக்குநர் கிருஷ்ண மூர்த்தி, துணை இயக்குநர் ஷிபிலாமேரி, தோட்டகலை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் தாமரைச்செல்வி, தோட்ட கலைத்துறை உதவி இயக்குநர்கள் மற்றும் விவசாய சங்கங் களை சேந்த விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
குடிநீர் இணைப்பில் மின் மோட்டார் பயன்படுத்தினால் அபராதம்
உடுமலை, மார்ச் 26- நகராட்சி சார்பில் குடியிருப்புகளுக்கு தரப்பட்டு வரும் குடிநீர் இணைப்பில் மின் மோட்டார்கள் பயன்படுத்தி நீர் எடுத் தால் நகாரட்சி நிர்வாகத்தால் அபராதம் மற்றும் மின் மோட் டார்கள் பறிமுதல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. உடுமலை நகராட்சிக்கு திருமூர்த்தி அணையில் இருந்து கூட்டுகுடிநீர் திட்டத்தின் மூலம் தண்ணீர் பெறபட்டு மொத்த முள்ள 33 வார்டுகளில் வசிக்கும் பொதுமக்கள், வணிக வளாகம், தொழிற்சாலைகள் மற்றும் அரசு அலுலகங்களுக்கு நகராட்சி நிர்வாகத்தால் குடிநீர் விநியோகம் செய்யபட்டு வருகிறது. தற்பொழுது கோடைகாலம் தொடங்கிய நிலையில், தண்ணீரின் தேவை அதிகமாக இருக்கும். மேலும், திரு மூர்த்தி அணையில் நீர் இருப்பு குறைந்து வருவதாலும், பொது மக்களுக்கு நகராட்சி நிர்வாகம் தரும் குடிநீரை சிக்கன மாக பயன்படுத்த வேண்டும். அதே வேலையில், குடிநீர் இணைப்புகளில் சட்டவிரோதமாக மின் மோட்டார்கள் பயன் படுத்தி தண்ணீர் எடுத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்க படும். அவர்கள் மீது நகராட்சி சட்டபடி நடவடிக்கை எடுக் கவும், உடனடியாக ரூபாய் 10 ஆயிரம் அபராதம் விதிக்கப் படும் மின் மோட்டார்களும் பறிமுதல் செய்யபடும் என்று நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
ரூ.90 லட்சம் பறிமுதல்
அவிநாசி, மார்ச் 26 - ஆந்திர மாநிலத்தில் இருந்து உரிய ஆவணங்களின்றி பேருந்தில், கொண்டு வரப்பட்ட ரூ.90லட்சம் பணத்தை மது விலக்கு போலீசார் சனியன்று பறிமுதல் செய்தனர். அவிநாசி மது விலக்கு போலீசார் அவிநாசி - திருப்பூர் சாலை பழங்கரை பிரிவு அருகே கஞ்சா விற்பனை, கடத்தல் தொடர்பான வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆந்திரத்தில் இருந்து கோவை நோக்கி இரு ஆம்னி பேருந்தில் வந்து இறங்கிய இரு நபர்களை போலீசார் சந்தேகத்தின் பேரில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் தனித்தனியாக கொண்டு வந்த கைப்பையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் மொத்தம் ரூ.90 லட்சம் பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, ரூ. 90 லட்சம் பணம் அவிநாசி காவல் துறையினர் மூலம் வருமான வரித் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உடுமலை நகராட்சியை எல்லையை விரிவு படுத்துக
உடுமலை, மார்ச் 26- நூற்றாண்டு பெருமை கொண்ட உடு மலைப்பேட்டை நகராட்சியின் தரம் உயர்த் தும் வகையிலும், மக்களுக்கு நலதிட்டங் களை எளிதில் கொண்டு செல்லும் வகையில் எல்லைகளை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்து வருகிறது. உடுமலை நகராட்சி தற்பொழுது 7.41 சதுர கிலோ மிட்டரில் சுமார் 80 ஆயிரம் மக்கள் வசிக்கும் வகையில் உள்ளது. நக ராட்சியில் 33 வார்டுகள் மட்டுமே உள்ளது. இந்த நகராட்சியின் எல்லைப் பகுதியில் உள்ள கிராம ஊராட்சிகளான கணக்கம் பாளையம், பெரியகோட்டை, போடிபட்டி, சின்னவீரம்பட்டி, கணபதிபாளையம், ராகல் பாவி, கண்ணமநாயக்கனூர் மற்றும் பூலங் கிணறு ஆகிய பெரிய ஊராட்சிகளை நக ராட்சியுடன் இணைத்தால் சுமார் 91.17 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட பெரிய நகராட்சியாக மாற்றம் அடையும். மேலும், இந்த ஊராட்சிகளில் அதிக வருவாய் மற்றும் ஏற்கனவே குடிநீர் வசதி, சாலை போக்குவரத்து திட்டங்களில் தன்னிறைவு என அனைத்து உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளது. இது போன்ற அனைத்து வசதிகள் கொண்ட ஊராட்சிகள் நகர எல்லைகளில் இருப்பதால், நகராட்சியின் இணைத்தால் மக்களின் தரம் சிறந்த முறையில் இருக்கும். கடந்த 2010 ஆம் ஆண்டு இந்த ஊராட்சிகளை உடுமலை நகராட்சியுடன் இணைக்க வேண்டும் என்ற தீர்மானத்தை நடைமுறை படுத்த வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
நீரேற்று நிலையத்தில் அமைச்சர் முத்துசாமி ஆய்வு
ஈரோடு, மார்ச் 26- அத்திக்கடவு - அவிநாசி திட்ட 5ஆம் நீரேற்று நிலையத் தினை மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தலைமை யில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி சனியன்று ஆய்வு செய்தார். இதனைத்தொடர்ந்து அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறுகையில், அத்திக்கடவு-அவிநாசி திட்டப்பணிகள் தற் போது 99 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது. எஞ்சிய பணி கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த 20 ஆம் தேதி முதல் சோதனை ஓட்டம் தொடங்கப்பட்டு தற்போது வரை ஆறு நீரேற்று நிலையங்கள் மற்றும் பிரதானக் குழாய்களில் 106.80 கி.மீ நீளத்திற்கு சோதனை ஓட்டம் முடிக்கப்பட் டுள்ளது. மேலும் நீரேற்று நிலையங்களிற்கு இடையிலுள்ள கிளைக் குழாய் மற்றும் 1045 குளம் குட்டைகளில் பொருத்தப் பட்டுள்ள கருவிகளில் சோதனை ஓட்டம் நடைபெற்று வரு கிறது. அனைத்து பகுதிகளுக்கும் தண்ணீர் சரியான முறை யில் செல்கிறதா என்பது குறித்து ஆய்வுப்பணிகள் அலுவ லர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார். இந்நிகழ்வின்போது நீர்வளத்துறை செயற்பொறியா ளர்கள் எஸ்.மன்மதன் (பெருந்துறை), நரேந்திரன் (அவிநாசி), நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கோவை - சென்னை வந்தே பாரத் ரயில் ஏப்.8 முதல் இயக்கம்
சென்னை, மார்ச் 26- நாட்டின் அதிவேக ரயில் சேவைக்காக வந்தே பாரத் ரயில் திட்டத்தை ரயில்வே அமைச்சகம் அறிமுகம் செய்தது. இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இந்த அதிவேக ரயில்கள் இந்திய ரயில்வே வரலாற்றில் ஒரு மைல்கல். இதன் வழித்தட சேவை எண்ணிக்கையும் கணிசமாக உயர்த்தப் பட்டு வருகின்றன. தமிழ்நாட்டை பொறுத்த வரை சென்னை யில் இருந்து மைசூர் வழித்தடத்தில் ஒரு வந்தே பாரத் ரயில் தற்போது இயக்கப்படுகிறது. இந்நிலையில் கோவை - சென்னை இடையே புதிய வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கவுள்ளது. வரும் ஏப்ரல் 8ஆம் தேதி தமிழ்நாடு வரும் பிரதமர் நரேந்திர மோடி இந்த புதிய ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார். கோவை - சென்னை இடையே உள்ள 495.28 கி.மீ தூரத்தை இந்த வந்தே பாரத் ரயில் 6 மணிநேரம் 10 நிமிடங்களில் சென்றடையும் என தெரி விக்கப்பட்டுள்ளது. காலை 6 மணிக்கு கோவையில் புறப்படும் இந்த வந்தே பாரத் ரயில் மதியம் 12.10 மணிக்கு சென்னை சென்றடையும். பின்னர், மதியம் 2.20 மணிக்கு சென்னையில் புறப்படும் இந்த ரயில் 8.30 மணிக்கு கோவை சென்றடையும் எனத் தெரி விக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ரயில் புதன்கிழமை தவிர்த்து வாரத்தின் மற்ற அனைத்து நாட்களும் இயங்கும் என்றும் கோவை - சென்னை வழித்தடத்தில் உள்ள திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். அதேபோல் ஏப்ரல் 8ஆம் தேதி சென்னை தாம்பரத்தில் இருந்து செங் கோட்டை வரை விரைவு ரயில் சேவையை பிரதமர் தொடங்கி வைக்கிறார். இது திருவாரூர், காரைக்குடி வழியாக தென்காசி சென்று பின்னர் செங்கோட்டையை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு - அபராதம்
உதகை, மார்ச் 27- நீலகிரி மாவட்டத்தில் 19 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை செய்யப்பட்டு உள்ளது. ஆனாலும் சுற் றுலா பயணிகளின் வருகை யால் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் அதிகம் இருந்த தால் நீலகிரி மாவட்டத்தில் ஒரு லிட்டர், 2 லிட்டர் பிளாஸ் டிக் குடிநீர் பாட்டில்களுக்கு தடை விதிக்கப்பட்டது. 5 லிட்டர் பாட்டில் மட்டும் பயன் படுத்த அனுமதிக்கப்படு கிறது. இந்நிலையில் ஊட்டி, கூடலூர், குன்னூர், நெல்லி யாளம் நகராட்சிகளில் கடை கள் மற்றும் நெடுஞ்சாலை களில், தீவிர சோதனை நடத்தினர். இதில், 21 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறி முதல் செய்யப்பட்டது. இதே போன்று கடை வியாபாரிகள் சுற்றுலா பயணிகளிடத்தில் சோதனை மேற்கொண்டு பிளாஸ்டிக்கை பறிமுதல் செய்து ரூ. 2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
எப்ஐஆர் பதியாமல் இருக்க லஞ்சம்: உதவி ஆய்வாளர் கைது
சூலூர், மார்ச் 26- எப்ஐஆர் பதியாமல் இருக்க லஞ்சம் பெற்றதாக கூறி சுல்தான் பேட்டை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். கோவை மாவட்டம், சூலூர் அடுத்த மலைப்பாளையத்தை சேர்ந்த பஞ்சலிங்கம் என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த, ஜெயப் பிரகாஷ் மற்றும் அவரது தாய் தன லட்சுமி என்பவருக்கும் இடையே கடந்த, 22ம் தேதி தகராறு ஏற்பட் டுள்ளது. இது குறித்த போரின் பேரில் சுல்தான்பேட்டை சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் பஞ்சலிங்கத்தை மொபைல் போனில் தொடர்பு கொண்டு, ஜெயபிரகாஷ் புகார் அளித்திருக்கின்றனர். இது தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். விசார ணைக்கு காவல் நிலையம் வந்த பஞ்ச லிங்கத்தை சிறப்பு உதவி ஆய்வாளர் மரியாதை குறைவாக நடத்திய தாக சொல்லப்படுகிறது. இந்த நிலை யில் கோவை லஞ்ச ஒழிப்பு போலீ சாரை தொடர்பு கொண்ட பஞ்ச லிங்கம், தன் மீது எப்ஐஆர் பதிவு செய்யாமல் இருக்க சுல்தான் பேட்டை சிறப்பு காவல் உதவியாளர் ரவிச்சந்திரன் லஞ்சம் கேட்டதாக புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுறுத்தலின் பேரில், ரசாயனம் தடவிய, 4 ஆயிரம் ரூபாயை சிறப்பு உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரனிடம் பஞ்ச லிங்கம் கொடுத்துள்ளார். மறைந் திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரனை பிடித்து சுல்தான் பேட்டை காவல் நிலையத்தில் வைத்து நள்ளிரவு வரை விசா ரணை மேற்கொண்டனர். தொடர்ந்து சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் மீது லஞ்சம் பெற்ற தாக வழக்கு பதிவு செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். லஞ்சம் வாங்கியதாக காவல் அதி காரி ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.