districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

விபத்துகளை தடுக்க கணபதி - டெக்ஸ்டூல் பாலம் அருகே ரவுண்டானா

கோவை, அக்.11- விபத்துகளை தடுக்கும் விதமாக கணபதி - டெக்ஸ்டூல்  பாலம் அருகே ரவுண்டானா அமைக்க முடிவு செய்யப் பட்டுள்ளது. கோவை மாவட்டம், நஞ்சப்பா சாலை மேம்பாலம் மற்றும்  கணபதி டெக்ஸ்டூல் பாலத்தில் தினசரி ஏராளமான வாக னங்கள் சென்று வருகின்றன. நஞ்சப்பா சாலை பார்க் கேட்  ரவுண்டானாவில் இருந்து உயர்மட்டப் பாலம் வழி யாகவும், கீழ்ப்பகுதி வழியாகவும் கணபதி நோக்கி வரும்  வாகனங்கள் பாலம் முடியும் பகுதியில் வலதுபுறம் திரும்பி  காந்திபுரம் சாலைக்கு சென்று வந்தன. இதற்கு சில அடி  தூரத்தில் கணபதி டெக்ஸ்டூல் மேம்பாலம் தொடங்குகிறது.  நஞ்சப்பா சாலை மேம்பாலத்தின் கீழ்பகுதியில் வரும்  வாகனங்கள் காந்திபுரம் செல்லும் சாலைக்கு திரும்பும் போது, அதே மேம்பாலத்தின் மேலே கணபதி நோக்கி வரும்  வாகனங்கள் மோதி விபத்துகள் ஏற்பட்டு வந்தன. இதே போன்று, லட்சுமிபுரம் சந்திப்பில் டெக்ஸ்டூல் பாலத்தின் இறங்கு பகுதியிலும் விபத்துகள் ஏற்பட்டு வந்தன. இந்த விபத்துகளை தடுக்கவும், இரண்டு மேம்பாலங்களில் வரும்  வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தவும் தேவையான நடவடிக்கை எடுப்பது தொடர்பாக மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையாளர் மதிவாணன், உதவி ஆணை யாளர் சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற் கொண்டனர். இதுகுறித்து மாநகர போக்குவரத்து காவல் அதி காரிகள் கூறுகையில், நஞ்சப்பா சாலை உயர்மட்ட மேம் பாலத்தில் இருந்து இறங்கி, டெக்ஸ்டூல் பாலம் ஏறும் பகுதியில் சிமென்ட் தடுப்பான்களை கொண்டு சிறிய ரவுண் டானா அமைக்கப்பட்டுள்ளது. இனி நஞ்சப்பா சாலை மேம் பாலத்தின் மேல்புற வழித்தடம், கீழ்புற தரை வழித்தடம் வழி யாக வரும் வாகனங்கள் ரவுண்டானாவை சுற்றி காந்தி புரம் சாலையை நோக்கியோ, அங்குள்ள ஜிபி சாலையை நோக்கி செல்லலாம். டெக்ஸ்டூல் பாலத்தின் மேல்புற வழித் தடத்தில் இருந்து காந்திபுரம் நோக்கி வரும் வாகனங்கள் கணபதி சாலைக்கோ, லட்சுமி புரத்துக்கோ செல்ல ரவுண் டானாவை சுற்றி செல்லலாம். இதனால் இப்பகுதியில் வாகன  விபத்துகள் ஏற்படாது. சோதனை அடிப்படையில் இத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது, என்றனர்.

5 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவர் கைது

கோவை, அக்.11- சூலூரில் வடமாநில நபர்களிடம் கஞ்சாவை வாங்கி விற்பனை செய்து வந்த இளைஞரை கைது செய்த போலீ சார், அவரிடமிருந்து 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய் தனர். கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள தென்னம் பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் தென்னம்பாளையம் பகுதியில் தனிப்படை போலீசார் வாகன  சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத் திற்கு இடமான வகையில் சுற்றிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது,  முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதன் பின் அவரை சோதனை செய்தபோது பாக்கெட்டில் கஞ்சாவை பொட்டலமாக வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த இளைஞரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கண்ட போது, மோப்பிரி பாளையத்தை சேர்ந்த சுரேந்திரன் என்பதும், இவர்  திருப்பூர் பகுதியில் இருக்கும் வட மாநில நபர்களிடமிருந்து கஞ்சாவை வாங்கி வந்து சூலூர் பகுதியில் உள்ள வட மாநில நபர்களுக்கு 10 கிராம் கஞ்சா பொட்டலங்கள் 500  ரூபாய்க்கு விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து சுரேந்தர் பதுக்கி வைத்திருந்த 5 கிலோ கஞ்சா  பொட்டலங்களை பறிமுதல் செய்த காவல் துறையினர், நீதி மன்றத்தில் முன்நிறுத்தி சிறையில் அடைத்தனர்.

46 ரவுடிகள் கைது

உதகை, அக்.11 - நீலகிரி மாவட்டத்தில் போலீசாரின் அதிரடி சோத னையில் 46 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். `ஆபரேஷன் மின்னல் ரவுடி வேட்டை’ என்ற பெயரில், ரவுடிகளுக்கு எதி ரான சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ள தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந் திரபாபு உத்தரவிட்டிருந் தார். இதன்படி தமிழகம் முழு வதும் 48 மணி நேரத்தில் 1310 ரவுடிகள் கைது செய் யப்பட்டுள்ளனர். இதன்படி உதகையிலும் ரவுடிகள் மீது  போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் படி குட்கா வழக்கில் தொடர் புடைய 8 பேரும், கஞ்சா வழக்கில் 3 பேரும், சட்ட விரோத மது விற்பனை வழக்கு சம்பந்தமாக 10 பேரும், மேலும் பல்வேறு காரணங்களுக்காக 25 பேர் என 46 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு உள்ளனர். 

பிணையை மீறி குற்றம் செய்தவருக்கு சிறை

கோவை, அக்.11- அன்னூரில் நன்னடத்தை பிணையத்தை மீறி குற்றச்செய லில் ஈடுபட்டவருக்கு வரும் 2023 ஆம் ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம், அன்னூர் கூத்தாண்டவர் கோவில் வீதியை சேர்ந்தவர் ரகு என்ற ஹரிஹரன். இவர் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர் என்பதால் அன்னூர்  வட்ட நிர்வாக நடுவரும், வட்டாட்சியருமான சிவக்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது, பிணைய பத்தி ரத்தில் எந்த குற்றச்செயலிலும் ஈடுபட மாட்டேன் என கடந்த  மார்ச் 19 ஆம் தேதியன்று உறுதியளித்துள்ளார். இதற்கி டையே மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள டாஸ்மாக் பாரில் கடந்த செப்.15 ஆம் தேதியன்று மது அருந்தி விட்டு  பார் உரிமையாளரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக  அன்னூர் காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய  சிறையிலடைத் தனர். இந்த வழக்கு விசாரணையும் நடைபெற்று வரு கிறது. இந்நிலையில், கடந்த செப்.19 ஆம் தேதியன்று மீண்டும்  குற்றச்செயலில் ஈடுபட்டதால் பிணைய பத்திரத்தில் கொடுத்த  உறுதியை மீறிய ரகு என்ற ஹரிஹரன், செவ்வாயன்று வட்ட  நிர்வாக நடுவர் முன் ஆஜர்படுத்திய போது, வரும் 2023 ஆம்  ஆண்டு மார்ச் 18 வரை சிறையிலடைக்க அவர் உத்தர விட்டுள்ளார். இதனையடுத்து அவரை மீண்டும் கோவை மத்திய சிறையிலடைத்தனர்.

போனஸ் கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம்

திருப்பூர், அக். 11 - திருப்பூரில் பனியன், பவர்லூம், போக்குவரத்து, சாலை யோர வியாபாரம் உள்ளிட்ட அனைத்து பிரிவு தொழிலாளர்க ளுக்கும் கடந்த ஆண்டை விட கூடுதல் போனஸ் வழங்க வலியு றுத்தி சிஐடியு சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. திங்களன்று மாலை திருப்பூர் தியாகி குமரன் நினைவகம்  முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சிஐடியு விசைத்தறி தொழிலாளர் சம்மேளனத்தின் மாநில தலைவர்  பி.முத்துசாமி தலைமை ஏற்றார். சாலையோர வியாபாரிகள்  சங்க மாவட்ட செயலாளர் பி.பாலன், மோட்டார் தொழிற்சங் கத்தின் மாவட்ட செயலாளர் ஒய்.அன்பு, அரசுப் போக்குவ ரத்து ஊழியர் சங்க மண்டல செயலாளர் பி.செல்லதுரை, பனி யன் தொழிலாளர் சங்க செயலாளர் ஜி.சம்பத், பாத்திர தொழி லாளர் சங்கத்தின் தலைவர் அ.ஆறுமுகம் உள்ளிட்டோர் போனஸ் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர். இதில் 30  பெண்கள் உட்பட, நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

சிஐடியு பனியன் சங்க பல்லடம் ரோடு பேரவை

திருப்பூர், அக். 11 - பனியன் தொழிலாளர் சங்கத்தின் பல்லடம் ரோடு ஏரியா  பேரவை திருப்பூர் பட்டுக் கோட்டையார் நகரில் நடைபெற் றது. சிஐடியு பனியன் சங்க தலைவர் சி.மூர்த்தி துவக்கி  வைத்தார். இதில் பல்லடம் ரோடு ஏரியா தலைவர் வி.செல்வ ராஜ், செயலாளர் சிதம்பரம், பொருளாளர் சந்திரசேகர், துணைத் தலைவர் வல்சனன், துணைச்செயலாளர் சக்திமுரு கன் உள்பட நிர்வாக குழு உறுப்பினர்கள் 15 பேர் தேர்வு செய் யப்பட்டனர். மார்க்சிஸ்ட் கட்சியின் தெற்கு மாநகரச் செயலா ளர் டி.ஜெயபால் நிறைவு செய்து வைத்துப் பேசினார்.

காத்திருப்பு போராட்டம் நடத்த பாதிக்கப்பட்ட விவசாயி முடிவு

திருப்பூர், அக். 11 – பல்லடம் அருகே கோடங்கிபாளையத்தில் உள்ள எழில்  ப்ளூமெட்டல்ஸ் குவாரி நிறுவனம் இயங்க அனுமதி வழங்கிய  உத்தரவு நகலை தரக் கோரி விவசாயி விஜயகுமார் பல்லடம்  வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக வியாழக்கிழமை முதல்  காத்திருக்கும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளார். கடந்த ஆக.30 முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்த நிலையில் கல்குவாரிக்கு இடைக்காலத் தடை விதிக் கப்பட்டது. எழில் ப்ளூமெட்டல் நிறுவனம் மாநில கனிமவளத் துறை இயக்குநரிடம் மேல்முறையீடு செய்து, தற்போது தடை  நீக்கப்பட்டு இயக்கப்படுகிறது. இயக்குநர் பிறப்பித்த உத்த ரவு நகல் தனக்குத் தரப்படவில்லை எனக் கூறி விவசாயி விஜ யகுமார் இப்போராட்டத்தை அறிவித்துள்ளார்.

ஆளுநருக்கு திருக்குறள் அனுப்பிய உடுமலை இளைஞர்கள்

திருப்பூர், அக். 11 – இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் உடுமலை ஒன்றி யக்குழு சார்பில் தமிழக ஆளுநருக்கு திருக்குறள் புத்தகம்  அனுப்பி வைக்கப்பட்டது. வாலிபர் சங்க உடுமலை ஒன்றியத்  தலைவர் ஆ.ராமசாமி, ஒன்றியச் செயலாளர் சு.தமிழ்த்தென் றல், கமிட்டி உறுப்பினர்கள் உரல்பட்டி கருப்புச்சாமி, வி.கே. புரம் லோகமுருகன், ஜல்லிபட்டி அஜித், குடி மங்கலம் செயலாளர் ஓம்பிரகாஷ் உள்ளிட்டோர் திங்க ளன்று உடுமலை தலைமை தபால் நிலையத்தில் இருந்து இப்புத்தகத்தை அனுப்பினர்.

இன்று மின் தடை 

அவிநாசி, அக்.11-  பெருமாநல்லூர், பழங்கரை ஆகிய துணை மின் நிலை யங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்ப தால் கீழ்கண்ட பகுதிகளில் புதன்கிழமை அக்.12 ஆம் தேதி  காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம்  இருக்காது என மின்வாரியத்தினர் அறிவித்துள்ளனர். மின் தடைபடும் பகுதிகள் : பெருமாநல்லூர், கணக்கம்பாளையம், காளிப்பாளை யம், புதுப்பாளையம், சடையம்பதி, பூலுவப்பட்டி, பாண்டி யன் நகர், எம்.தொட்டிப்பாளையம், மேற்குபதி, வலசுப்பா ளையம், கந்தம்பாளையம், அய்யம்பாளையம், ஆண்டிப்பா ளையம், நெருப்பெரிசல், செட்டிப்பாளையம், வாவிபாளை யம், தொரவலூர். பழங்கரை, அவிநாசிலிங்கம் பாளையம், அணைப்புதூர்,  தங்கம் கார்டன், விஸ்வ பாரதிபார்க், பழங்கரை, தேவம்பா ளையம், டீ பப்ளிக் பள்ளி, ஸ்ரீ ராம் நகர், நல்லி கவுண்டம்பாளை யம், கைகாட்டி புதூர் ஒரு பகுதி, ரங்கா நகர் ஒரு பகுதி, ராஜன்  நகர், ஆர்.டி.ஓ ஆபீஸ், கமிட்டியார் காலனி, குளத்துப்பாளை யம், வெங்கடாசலபதி நகர், துரைசாமி நகர், பெரியாயிபாளை யம் ஒரு பகுதி, பள்ளிபாளையம், வி.ஜி. வி நகர், திருநீலகண் டர் வீதி ,நெசவாளர் காலனி, எம்ஜிஆர் நகர், மகாலட்சுமி நகர்,  முல்லை நகர், தன்வர்ஷினி அவென்யூ.

போட்டி நாடுகளுக்கு மூலப்பொருட்கள் ஏற்றுமதியை   நிறுத்தி வைக்க ரைசிங் சங்கம் வலியுறுத்தல்

திருப்பூர், அக். 11 - திறந்தநிலை வர்த்தக கொள்கை நடைமுறைப்படுத்தப்படும் வரை போட்டி நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து பஞ்சு, நூல் போன்ற ஜவுளி மூலப்பொருட்கள் ஏற்றுமதியை தற் காலிகமாக நிறுத்தி வைக்க வேண் டும் என திருப்பூர் ரைசிங் உரிமையா ளர்கள் சங்கத் தலைவர் கருணாம் பிகா எம்.வி.ராமசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.  திருப்பூர் ரைசிங் உரிமையா ளர்கள் சங்கத் தலைவர் கரு ணாம்பிகா எம்.வி.ராமசாமி திருப்பூர்  ஏற்றுமதியாளர்கள் சங்கத்திற்கு எழு தியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதா வது: புதிய தலைவர் உள்ளிட்ட  நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர் களுக்கு வாழ்த்துகள். திருப்பூரின் அவசர, அவசியத் தேவை கருதி பின் வரும் கோரிக்கைகள் நிறைவேற்றப் பட்டால் திருப்பூரின் வளர்ச்சி தங்கு  தடையின்றி உயரும் என்பதில் சந்தே கமில்லை.  குறிப்பாக, பங்களாதேஷ், வியட் நாம் உள்ளிட்ட பல்வேறு நாடுக ளுக்கு சிறப்பு வர்த்தக சலுகை வழங் கப்படுகிறது. இறக்குமதி, ஏற்றுமதி  வரிச் சலுகைகள் வழங்கப்படுவ தால், இந்திய ஜவுளித்தொழில் துறை யினர் சர்வதேச சந்தையில் அவர்க ளுடன் போட்டியிடுவதில் சிரமப்படு கின்றனர்.  ஐரோப்பிய நாடுகளுக்கு ‘எப். டி.ஏ’ எனப்படும் திறந்தநிலை வர்த் தக கொள்கை உருவாக்கப்படும் போது, பங்களாதேஷ், வியட்நாம், பாகிஸ்தான், சீனா போன்ற நாடுக ளின் வர்த்தகப் போட்டியை சமா ளித்து, ஏற்றுமதியை மேலும் உயர்த்த  முடியும்.  திறந்தநிலை வர்த்தக கொள்கை நடைமுறைப்படுத்தப்படும் வரை போட்டி நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து பஞ்சு, நூல் போன்ற ஜவுளி மூலப்பொருட்கள் ஏற்றுமதியை தற் காலிகமாக நிறுத்த, மத்திய அரசை  வலியுறுத்த வேண்டும்.  சாயக்கழிவு சுத்திகரிப்பில் ‘ஜீரோ டிஸ்சார்ஜ்’ திட்டத்தை அரசுகள் பொறுப்பில் எடுத்துக்கொண்டு, குறைந்த கட்டணம் வசூலித்தால் உற்பத்தி செலவு குறையும். தமிழ கத்தில் ‘பைப்லைன் எரிவாயு’ திட் டத்தை விவசாயிகள் பாதிப்பு அடை யாத வகையில் விரைந்து நடைமு றைப்படுத்தினால், மானிய விலை யில் எரிவாயு கிடைக்கும். தொழிலாளர்களுக்கு அடுக்கு மாடி குடியிருப்பு, பெண்களுக்கு தனி  பாதுகாப்பு குடியிருப்பு வசதி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம்  உள்ளிட்ட தொழில் நகரங்களை இணைக்கும் வகையில் மெட்ரோ ரயில்’ திட்டம், சுற்றுச்சாலை, துணை மின்நிலையம்,  பின்னலாடை சரக்கு பாதுகாப்பு பெட்டக வசதி, இஎஸ்ஐ மருத்துவமனை, மழைநீர் சேகரிப்பு திட்டம் உள்ளிட்டவற்றை அமல்படுத்தினால் திருப்பூர் மேலும்  வளரும், தொழிலாளர்கள் பலனடை வார்கள் என்று கருணாம்பிகா எம்.வி. ராமசாமி கூறியுள்ளார்.

5 மணி நேரம் சிலம்பம் சுற்றிய மாணவர்கள்

திருப்பூர், அக். 11- திருப்பூரில் தனியார் சிலம்பாட்ட கழகம் சார்பில்,  தனியார் பள்ளியில், நோபல்  உலக சாதனை முயற்சிக் காக ஐந்து மணி நேரம் தொடர்ச்சியாக சிலம்பம் சுற்றி சாதனை படைக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் திருப்பூர், சேலம்,  விருதுநகர் என  பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த,  ஆறு வயது முதல் 17  வயதுக்கு உட்பட்ட 235  மாணவ, மாணவிகள் கலந்து  கொண்டனர். இதில் அனை வரும் ஐந்து மணி நேரம் தொடர்ச்சியாக சிலம்பம்  சுற்றி, நோபல் ரெகார்ட் புத்த கத்தில் இடம் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ரூ.55 லட்சத்திற்கு நிலக்கடலை ஏலம்

அவிநாசி, அக்.11- சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில்  நடைபெற்ற நிலக்கடலை ஏலத் தில் ரூ.55 லட்சத்திற்கு வர்த்தகம் நடை பெற்றது. சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இந்த வாரம் நடைபெற்ற ஏலத்  தில் 2200 மூட்டைகள் வந்திருந்தன. குவிண் டால் ஒன்றுக்கு முதல் ரக நிலக்கடலை  ரூ.7,300 முதல் ரூ.7,520 வரையிலும், இரண் டாவது ரக நிலக்கடலை ரூ.6,900 முதல் ரூ. 7,000 வரையிலும், மூன்றாவது ரக நிலக் கடலை ரூ.6,400 முதல் ரூ.6,800 வரையிலும்  ஏலம் போனது. மொத்தம் ரூ.55 லட்சத்திற்கு ஏலம் நடைபெற்றது. இதில் 10 வியாபாரிகள், 240 விவசாயிகள் பங்கேற்றனர்.

தாராபுரத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம்

தாராபுரம்,  அக் 11 - தாராபுரம் மின்வாரிய அலுவலகத்தில்  இன்று மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள்  முகாம் நடைபெற உள்ளது. தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர் மான கழகம் பல்லடம் மின்பகிர்மான வட்டம்,  தாராபுரம் கோட்டத்திற்குட்பட்டமின்நுகர் வோர் குறைதீர்க்கும் கூட்டம் இன்று 12 ஆம்  தேதி  மேற்பார்வை பொறியாளர்  தலை மையில் நடைபெற உள்ளது. தாரா புரம் தளவாய்பட்டிணம் சாலையில் உள்ள  மின்வாரிய கோட்டப்பொறியாளர் அலுவல கத்தில் காலை 11 மணி முதல் 2 மணி வரை  நடைபெற உள்ளது. கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து  கொண்டு பயன்பெறுமாறு செயற்பொறி யாளர் வ.பாலன் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு திட்டப் பணிகள்: இணை அமைச்சர் ஆய்வு

திருப்பூர், அக். 11 - திருப்பூர் மாவட்டத்தில் மத்திய அரசின்  திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு  கூட்டம் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் செவ்வாயன்று நடந்தது. இதில்  மத்திய நிதித்துறை இணை அமைச்சர்  பங்கஜ் சவுத்ரி, திருப்பூர் மாவட்ட ஆட்சியர்  வினீத், மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், மாநகராட்சி ஆணையர் கிராந்திகுமார்  பாடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  திருப்பூர் மாவட்டத்தை பொருத்தவரை மத்திய அரசின் திட்ட பணிகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், அடுத்து  வரும் திட்டங்களையும் அதிகாரிகள் சிறப் பாக செயல்படுத்த வேண்டும் எனவும் அமைச் சர் பங்கஜ் சவுத்ரி கேட்டுக் கொண்டார்.

பிரச்சனை ஏற்படாமல் போனஸ் வழங்க சைமா அறிவுறுத்தல்

திருப்பூர், அக். 11 - தீபாவளி பண்டிகை அக்டோபர் 24ஆம் தேதி வரவுள்ள நிலையில் அந்தந்த நிறுவனங்கள் தொழிலாளர்களுடன் சமூக மாகப் பேசி போனஸ் வழங்க வேண்டும், எவ்வித பிரச்சனை களும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும், நிறுவன  நிதி நிலையைக் கருத்தில் கொண்டு விரைவில் போனஸ் வழங்க வேண்டும் என்று சைமா தலைவர் வைகிங் ஏ.சி.ஈஸ்வ ரன் தனது சங்க உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தி உள் ளார்.

ஒரு மாத ஊதியம் போனஸ் கோரி கைத்தறி நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர், அக். 11- கைத்தறி நெசவாளர்களுக்கு ஒரு மாத ஊதியத்தை போன சாக வழங்க வலியுறுத்தி சிஐடியு கைத்தறி நெசவாளர் சங்கத் தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். காங்கேயம் புலிமாநகரில் திங்களன்று நடைபெற்ற இந்த  ஆர்ப்பாட்டத்திற்கு கைத்தறி சங்க மாவட்ட தலைவர் கே.திரு வேங்கடசாமி தலைமை ஏற்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கைத்தறி நெசவாளர்களுக்கு கூலி உயர்வு வழங்கவும், அடை யாள அட்டை வழங்கவும், கைத்தறி ரகங்களை மற்ற  தறிகளில் உற்பத்தி செய்வதை தடுக்கவும், கைத்தறியாளர் களுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கவும் வலியுறுத்தி  முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி கைத்தறி சங்க மாவட்ட பொதுச் செயலாளர் என்.கனகராஜ், சிஐடியு மாவட் டத் துணைத் தலைவர் கே.உன்னிகிருஷ்ணன், கைத்தறி சங்க  நிர்வாகி ராமநாதன் உள்ளிட்டோர் உரையாற்றினர். இதில்  கைத்தறி நெசவாளர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

அன்னூர்: ஈக்கள் தொல்லையால் பொதுமக்கள் அவதி

கோவை, அக்.11- அன்னூர் அருகே உள்ள பிள்ளை யப்பம்பாளையம் பகுதியில் செயல் பட்டு வரும் கோழிப்பண்ணைகளி லிருந்து வீடுகளுக்குள் படையெடுக் கும் ஈக்களால் அப்பகுதி பொதுமக் கள் அவதியடைந்து வருகின்றனர். கோவை மாவட்டம், அன்னூர் மற் றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட முட்டை மற்றும்  கறிக்கோழி பண்ணைகள் செயல் பட்டு வருகின்றன. இந்நிலையில், பிள் ளையப்பம்பாளையம் பகுதியில்  செயல்பட்டு வரும் கோழிப்பண்ணை களிலிருந்து வெளியேறும் ஈக்கள்  குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து  உணவு பண்டங்கள், தண்ணீர் பானை களில் அமர்ந்து வருகின்றன. இத னால் சாப்பாட்டை தட்டில் போட்டு சாப்பிட முடியாமல் அப்பகுதி பொது மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், தொற்று நோய் பரவும் அபா யமும் ஏற்பட்டுள்ளது. இதற்கி டையே கடந்த சில வாரங்களுக்கு முன்பு வருவாய் கோட்டாட்சியர் பூமா தலைமையில் நடைபெற்ற கூட்டத் தின் போது கோழிப்பண்ணை உரி மையாளர்கள் கோழிக்கழிவுகள் முறை யாக அப்புறப்படுத்தப்படும். கிருமி நாசினி மருந்து தெளித்து பண்ணை களை சுத்தமாக வைத்திருப்போம் என உறுதியளித்தனர். ஆனால், உறுதியளித்தும் கோழிப்பண்ணைகளில் இருக்கும்  கழிவுகள் முறையாக அப்புறப்படுத் தப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும்,கிருமி நாசினி மருந்தும் தெளிப்பதில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால் தான் தங்க ளது பகுதியில் கோழிப்பண்ணை களில் இருந்து ஆயிரக்கணக்கான ஈக்கள் வீடுகளுக்குள் புகுந்து விடு கின்றன. எனவே, மாவட்ட நிர்வா கம் இதுபோன்ற சுகாதாரமற்ற முறை யில் இயங்கி வரும் பண்ணைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குடியிருப்பு பகுதியில் புகுந்த சிறுத்தை

உதகை, அக்‌.11- உதகை பாரஸ்ட் கேட் பகுதியில் சிறுத்தை ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அங்குள்ள வீட்டின் முன் இருந்த நாயை வேட் டையாடி செல்லும் காட்சி சிசி டிவி கேமராவில் பதிவாகி யுள்ளது. இது சமூக வலைத் தளங்களில் வைரலகி வருகி றது. சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என  கோரிக்கை எழுந்துள்ளது.

பொங்கல் பொருட்களுடன் மண் பானை, அடுப்பு வழங்க கோரிக்கை

ஈரோடு, அக்.11- ஆண்டுதோறும் தைப்பொங்கலின்போது, ரேசன் அட்டை தாரர்களுக்கு பச்சரிசி, கரும்பு, சர்க்கரை, முந்திரி, ஏலக்காய்  உள்பட பல்வேறு பொருட்கள் வழங்கப்படுகின்றன. அது போல மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில், களி மண்ணால் ஆன புதிய பானை, புதிய அடுப்புகளை மண்பாண்டத் தொழிலாளர்களிடம் அரசு கொள்முதல் செய்து, பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்பாண்ட தொழிலாளர்கள் மனு அளித்தனர்.

120 கிலோ குட்கா கடத்தல் - கைது

கோவை, அக்.11- கோவைக்கு கடத்தி வரப்பட்ட 120 கிலோ  குட்கா பொருட்களை காவல் துறையினர் பறி முதல், ஒருவரை கைது செய்துள்ளனர். பெங்களூருவிலிருந்து கோவைக்கு தடை செய்யப்பட்ட குட்காவை கடத்தி வருவ தாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இத னையடுத்து கருமத்தம்பட்டி பிருந்தாவன் நகர் பகுதியில் போலீசார் வாகன சோதனை யில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த மினி லாரி போலீசார் தடுத்து நிறுத்திய தால் லாரி ஓட்டுநர் கீழே இறங்கி ஓட முயற்சித் தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் ஓட் டுநரை துரத்தி பிடித்து, லாரியை சோதனை யிட்டபோது அதில், தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது. விசாரணையில் ஓட்டுநர் கிணத்துக் கடவு பகுதியை சேர்ந்த ஈஸ்வரன் என்பதும், பணத்திற்காக கோவைக்கு குட்கா பொருட் களை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து ஈஸ்வரன் மீது வழக்குப்பதிவு  செய்த போலீசார் 120 கிலோ குட்கா பொருட் களை பறிமுதல் செய்தனர்.