districts

img

சுற்றுலாப் பயணிகளுக்காக சுற்றுப் பேருந்து சேவை தொடக்கம்

உதகை, மார்ச். 10- கோடை சீசனை முன்னிட்டு உதகைக்கு சுற்றுப் பேருந்து சேவையை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராம சந்திரன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் சர்வதேச சுற்று லாத்தலமான உதகையில், கோடை காலம் தொடங்க உள் ளது. ஒவ்வொரு ஆண்டும் கோடை சீசனுக்கு மட்டும் லட்சக்க ணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் கோடை சீசன் தொடங்கவுள்ள  நிலையில் நிலவுவதால் உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து உதகையில் படகு இல்லம்,   ரோஜா பூங்கா, அரசு தாவரவியல் பூங்கா, தேயிலை அருங் காட்சியகம் மற்றும் தொட்டபெட்டா மலை சிகரம் போன்ற முக்கிய சுற்றுலாத் தலங்களுக்கு சுற்றுலா பயணிகள் சென்று  வர சனி முதல் “சர்க்யூட் பஸ்” எனப்படும் “சுற்றுப் பேருந்து”  சேவை தொடங்கப்பட்டு உள்ளது. இச்சேவையை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் உதகை மத்திய பேருந்து நிலையத்தில் கொடி அசைத்து தொடங்கி வைத் தார். இதைத் தொடர்ந்து மலை கிராமங்களுக்கு புதிய பேருந்து  வழித்தடத்தையும் தொடங்கி வைத்தார். இந்த சுற்றுப் பேருந் துகள் சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் காலை முதல்  மாலை வரை சுழற்சி முறையில் தொடர்ந்து இயக்கப்ப டும். இந்த பேருந்துகள் உதகை மத்திய பேருந்து நிலையத்தி லிருந்து படகு இல்லம், தாவரவியல் பூங்கா உள்ளிட்ட சுற்று லாத் தலங்களுக்கு இயக்கப்பட உள்ளது. இந்த பேருந்தில் பெரியவர்களுக்கு ரூ. 100 ரூபாய், சிறியவர்கள் ரூ. 50 ரூபா யும் கட்டணமாக செலுத்தி ஒரு முறை டிக்கெட் எடுத்து மாலை  வரை பயணிக்கலாம். முன்னதாக சுற்றுப் பேருந்து சேவையை தொடங்கி வைத்து அமைச்சர் ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறிய தாவது, கோடை காலம் தொடங்க உள்ளதையடுத்து சுற்று லாப் பயணிகளின் வசதிக்காக சுற்றுப் பேருந்து சேவை தொடங்கப்பட்டு உள்ளது. தற்போது உள்ள பழைய பேருந் துகள் அனைத்தும் படிப்படியாக மாற்றப்பட்டு புதிய பேருந்து கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என்று கூறி னார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் அருணா, போக்குவ ரத்து கழக மண்டல மேலாளர் நடராஜன், நகராட்சி  தலைவர் வாணீஸ்வரி, துணைத்தலைவர் ரவிக்குமார்,  திட்டக்குழு உறுப்பினர் ஜார்ஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோன்று, கோடை சீசனை முன்னிட்டு சுற்றுலா பய ணிகளுக்காக மார்ச் 29 முதல் ஜூலை 7 ஆம் தேதி வரை  மேட்டுபாளையம், உதகை, குன்னூர் இடையே சிறப்பு  மலை ரயில் இயக்கபடும் என தென்னக ரயில்வே சேலம்  கோட்டம் அறிவித்துள்ளது. குறிப்பாக மேட்டுப்பாளை யம், உதகை இடையே வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழ மைகளிலும், உதகை, மேட்டுபாளையம் இடையே சனி  மற்றும் திங்கள்கிழமைகளிலும் சிறப்பு மலை ரயில் இயக்க படும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.