districts

ரூ.50 லட்சம் கொள்ளை: மேலும் 6 பேர் கைது

சேலம், நவ.26- இரும்பாலை அருகே விதை வியாபாரி யிடமிருந்து ரூ.50 லட்சத்தை கொள்ளை யடித்து சென்ற வழக்கில் மேலும் 6 பேரை  காவல் துறையினர் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம், காங்கேயம் பகுதி யைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (37). இவர் கண்ணுவலி கிழங்கு என சொல்லப்படும் செங்காந்தாள் விதை வியாபாரம் செய்து  வருகிறார். செங்காந்தாள் விதை கொள்மு தல் செய்வதற்காக நண்பர்களான அவி நாசியைச் சேர்ந்த குமார், ஒட்டன்சத்தி ரத்தைச் சேர்ந்த வாஞ்சியப்பன் (39) ஆகி யோருடன் 50 லட்சம் ரூபாய் எடுத்துக் கொண்டு, காரில் கடந்த செப்.26 ஆம் தேதி யன்று சேலம் மாவட்டம், இரும்பாலை அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது மற்றொரு காரில் வந்த அடையாளம் தெரி யாத நபர்கள், “நாங்கள் போலீஸ்” எனக்கூறி  வெங்கடேஷ், அவருடன் வந்த குமார், வாஞ்சி யப்பன் ஆகியோரை பணத்துடன் காரில் கடத்திச்சென்றனர். இதன்பின் தாரமங்கலம் அருகே மாரமங்கலத்துப்பட்டி பகுதியில் இறக்கி விட்டு, அடையாளம் தெரியாத நபர் கள் தப்பிச்சென்றனர். இதுகுறித்து வெங்க டேஷ் இரும்பாலை காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதில் தொடர்புடைய 6 பேரை  செப்டம்பர் மாதம் இறுதியில் போலீசார்  கைது செய்தனர். மேலும், சிலரை பிடிக்க  துணை ஆணையர் மதிவாணன் தலைமை யில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் விசாரணை மேற் கொண்டு வந்த நிலையில், வேலூர் மாவட் டம், காட்பாடி அருகே உள்ள முத்தியால் பள்ளியைச் சேர்ந்த நடராஜன் (53), அவரது மனைவி சுஜாதா (45) ஆகி யோரை காவல் துறையினர் கைது செய்த னர். தொடர்ந்து அவர்கள் அளித்த தகவலின் பேரில், எடப்பாடி அருகே உள்ள பூசாரி  வட்டம் சீனிவாசன் (44), கீரப்பாப்பம்பாடி மகாலிங்கம் (39), மாமாங்கம் ஜெகன் மோகன் (44), தருமபுரி மாவட்டம், அரூர்  கோபி (38) ஆகியோரை அவரவர் வீட்டில் வைத்து தனிப்படை போலீசார் கைது  செய்தனர். கைது செய்யப்பட்ட 6 பேரிட மிருந்து 20 லட்சம் ரூபாய்க்கு மேல் கைப்பற் றப்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து 6  பேரையும் சேலம் நீதிமன்றத்தில் நேர்நி றுத்தி, சிறையில் அடைத்தனர். இந்த  வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்ட வர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள் ளது குறிப்பிடத்தக்கது.