districts

தருமபுரியில் தொடரும் கொள்ளை சம்பவம்

தருமபுரி, ஜன.1- தருமபுரி மாவட்டத்தில் தொடர்ந்து பூட் டிய வீடுகளை நோட்டமிட்டு அடையாளம் தெரியாத நபர்கள் தொடர் கொள்ளையில் ஈடு பட்டு வருவதால், பொதுமக்கள் அச்சமடைந் துள்ளனர். தருமபுரி மாவட்டம், பாரதிபுரம் பகுதி யில் கடந்த டிச.4 ஆம் தேதியன்று இரவு சிவரா மகிருஷ்ணன் என்பவர் தனது வீட்டை பூட்டி விட்டு சொந்த ஊர் சென்றிருந்தார். இந்நிலை யில், அவரது பூட்டியிருந்த வீட்டின் கதவை  உடைத்து சுமார் 58 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இதேபோல் கடந்த டிச.18 ஆம் தேதியன்று அதியமான் கோட்டையை அடுத்த எர்ரப்பட்டி பகுதியில் பொதுப்பணித்துறை காலனியில் உள்ள அன்பழகன் என்பவருக்கு சொந்தமான வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் தங்க  நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இதை யடுத்து போலீசார் தனிப்படை அமைத்து, கொள்ளையர்களை பிடித்து, 80 பவுன் தங்க  நகைகளை மீட்டனர். மேலும், ஒட்டப்பட்டி பொதுப்பணித்துறை காலணியில் ஆசிரியர் வீட்டில் சமையல் அறை அருகே உள்ள சிறிய துவாரத்தின் வழியாக உள்ளே சென்று,  30 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக் கப்பட்டது. இதேபோல் மாவட்டத்தில் பல பகுதிகளில் கொள்ளை கும்பல் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வருவதால் அவர் களை பிடிப்பதில் போலீசாருக்கு சவாலாக இருந்து வருகிறது. இந்நிலையில், பழைய தருமபுரி மாரியம் மன் கோவில் தெருவைச் சேர்ந்த சுரேஷ்  (33) என்பவர், தனியார் அச்சக மேற்பார்வை யாளராக பணி செய்து வருகிறார். இவர் வீட்டை பூட்டி விட்டு அச்சகத்திற்கு பணிக் காக சென்று விட்டார். அதிகாலை பணி முடித்து வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச் சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 3 பவுன்  தங்க செயின், மோதிரம் திருடு போயி ருந்தது தெரியவந்தது. இதுகுறித்து சுரேஷ்  தருமபுரி நகர காவலநிலையத்தில் புகார ளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர். தருமபுரி நகரம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் கொள்ளை சம்ப வம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகி றது. போலீசார் கொள்ளையர்கள் மீது  நடவடிக்கை எடுத்தாலும், காவல் துறைக்கே சவாலாக கொள்ளையர்கள் தொடர்  கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். இத னால் பொதுமக்கள் தங்களது வீடுகளை பூட்டி விட்டு வெளியூர்களுக்கு செல்ல அச்சப்ப டுவதாக தெரிவிக்கின்றனர். இதனிடையே தருமபுரி நகரப் பகுதியில் நடைபெறும் கொள்ளை சம்பவங்களை தடுப் பதற்காக ஆங்காங்கே கண்காணிப்பு கேம ராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக் கப்பட்டது. தற்போது அந்த கேமராக் கள் பழுதடைந்து இருப்பதால் கொள்ளை யர்கள் தங்களுடைய கொள்ளை சம்பவங் களை சுதந்திரமாக அரங்கேற்றி வருகின்ற னர். தருமபுரி நகரம் மற்றும் அதனை சுற்றி யுள்ள முக்கிய இடங்களில் மீண்டும் கண்கா ணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்கா ணித்து வர காவல்துறை நடவடிக்கை எடுக்க  வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள் ளனர்.