திருப்பூர், பிப்.12 - திருப்பூரில் சாலை யோர வியாபாரிகள் விதி முறைப்படி வியாபாரம் செய்வதற்கு இடையூறு ஏற்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கவும், தங்கள் வாழ்வாதார உரிமையைப் பாது காக்க வலியுறுத்தி சிஐடியு சாலையோர வியாபாரிகள் சங்கத் தினர் ஆர்ப்்பாட்டம் நடத்தினர். அரசின் அரசாணைபடி உழவர் சந்தை அமைந்துள்ள இடத்திற்கு 100 மீட்டர் தொலைவிற்கு அப்பால், சாலையோரங்களில் மாநகராட்சி விதிகளுக்கு உட்பட்டு, சாலையோர கடைகளை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். ஆனால் விவசாயிகள் என்ற பெயரில் சிலர் தொடர்ந்து தங்கள் வியாபாரத்திற்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், சாலையோர வியாபாரிகளுக்கு சட்டப்படி உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட சிஐடியு சாலையோர வியாபாரிகள் சங்கத்தினர் பல்லடம் சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தென்னம்பாளையம் சந்தைக்கு சற்று தொலைவில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.பாலன் கண்டன உரையாற்றினார். இதில், வியாபாரிகள் பழங்களுடன் பங்கேற்று கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.