districts

img

மந்தமாக நடைபெறும் மேம்பால பணி சாலையோர வியாபாரிகள் கவலை

நாமக்கல், ஜன.13- பொங்கல் பண்டிகையின் போது சாலையோர வியாபாரி கள் தற்காலிகமாக கடைகளை அமைப்பார்கள். ஆனால், இந்த ஆண்டு மேம்பால அமைக்கும் பணிகள் காரணமாக கடைகளை அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுயுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் சாலை விரிவாக்கம் மற்றும் மேம்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேல் நடைபெற்று வருகிறது. இன்னும் ஆறு மாதத்திற்குள் பணிகள் முழுமையாக முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சாலையோர வியாபாரிகள், மற்றும் காவல் நிலையச் சாலை உள்ளிட்ட பல் வேறு இடங்களில் தற்காலிக கடைகள் அமைத்து, வியாபா ரத்தை கவனிப்பர். அதேபோல பொங்கல் பண்டிகையின் போது பொங்கல் கரும்பு,  பூ வியாபாரம், பொங்கல் பொருட் கள் விற்பனை செய்யும் கடைகள் என பல்வேறு தரப்பட்ட கடைகள் தற்காலிகமாக அமைக்கப்படும். தற்போது மேம் பால அமைக்கும் பணிகள் காரணமாக, கடைகளை அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், இந்த ஆண்டு பொங்கல் வியாபாரத்தை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சாலையோர கடை வியாபாரிகள் கவலை தெரிவித்தனர்.