பென்னாகரம், மே 29- செங்கல் சூளை உரிமையாளரை வெட்டிக்கொலை செய்த குற்றவாளியை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட் டது. தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்துள்ள சின்னம்பள்ளி அருகே உள்ள கோவள்ளி கோம்பை பகுதியைச் சேர்ந்த வர் கந்தசாமி(53). இவர் செங்கல் சூளை வைத்து நடத்தி வருகிறார். அதே பகு தியைச் சேர்ந்த குபேந்திரனுக்கும், அவரு டைய உறவினர்களுக்கும் இடையே பொது வழித்தடம் பிரச்சனை இருந்து வந்துள்ள தாக தெரிகிறது. அந்த வழித்தட பிரச் சனையையொட்டி நடைபெற்ற பேச்சுவார்த் தையில் கந்தசாமி கலந்து கொண்டுள்ளார். இதில், ஈடுபாடு இல்லாத குபேந்திரன், கந்த சாமியை கொலை செய்ய திட்டமிட்டுள் ளார். இதைத்தொடர்ந்து ஞாயிறன்று காலை கந்தசாமி பால் ஊற்றுவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது கோவள்ளிகோம்பை அருகே உள்ள விநாயகர் கோவில் அருகே செல் லும்போது குபேந்திரன் இருசக்கர வாக னத்தில் வந்து வழிமறித்து மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து கந்த சாமி கழுத்து பகுதியில் சரமாரியாக வெட்டி யுள்ளார். இதில், கந்தசாமி சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக உயிரிழந்தார். சத்தம் கேட்டு அருகில் இருந்த பொது மக்கள் ஓடிவந்து பார்த்தபோது குபேந்திரன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த நிலையில் சடலத்தை எடுக்க விடாமல் உறவினர்கள் பென்னாகரம் மேச்சேரி செல்லும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய குபேந்திரன் அதி யமான் கோட்டை அருகே உள்ள மாவட்ட ஆட்சியர் குடியிருப்பு முன்பு நின்று கொண்டு இருந்துள்ளார். இதையறிந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை விசாரித்தபோது கொலை செய்துவிட்டு வந்தது குறித்து கூறியுள்ளார். இதன் அடிப்படையில் தகவலறிந்து வந்த அதிய மான் கோட்டை போலீசார் அவரை கைது செய்து பெரும்பாலை காவல் நிலையத்துக் விசாரணைக்காக அழைத்து சென்றனர். மேலும், சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்களிடம் தர்மபுரி காவல் கண் காணிப்பாளர் கலைச்செல்வன், பென்னா கரம் துணை காவல் கண்காணிப்பாளர் சௌந்தர்ராஜன், ஏரியூர் காவல் ஆய் வாளர் பழனிசாமி ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில், போலீசார் கொலைக்கு உடந்தையாக இருந்தவர் களை கைது செய்வோம் என உறுதி அளித் ததன் பேரில் சாலை மறியல் கை விடப்பட்டது.சாலை மறியலால் சுமார் 6 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட் டது. பின்னர் சடலத்தை மீட்டு பென்னா கரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட் டது. பொதுவழித்தட பிரச்சனையில் பஞ்சாயத்துக்கு சென்ற செங்கல் சூளை உரிமையாளர் வெட்டி கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.