districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

சாலைப் பணியாளர்கள் சங்க கோட்ட பொதுக்குழு கூட்டம்

திருப்பூர், பிப். 4 – தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர் சங் கத்தின் சார்பில் கவன ஈர்ப்புக் கோட்டப் பொதுக்குழுக் கூட்டம்  திருப்பூரில் சனியன்று நடைபெற்றது. சாலைப் பணியாளர்களின் 41 மாத கால பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும், சாலைப் பரா மரிப்புப் பணியை தனியார்மயம் ஆக்குவதை கைவிட வேண் டும் உள்ளிட்ட அடிப்படைக் கோரிக்கைகளை வலியுறுத்தி  குமரன் சாலை அரிமா அரங்கில் நடைபெற்ற இந்த பொதுக் குழுவுக்கு கோட்டத் தலைவர் எஸ்.அண்ணாதுரை தலைமை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர் டி.ராஜமாணிக்கம் தொடக்கி வைத்தார். கோரிக்கைகளை விளக்கி கோட்டச் செயலாளர் ஆர்.ராமன் பேசினார். அரசு ஊழியர் சங்க மாவட் டத் தலைவர் ஏ.ராணி உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் ஆ.அம்சராஜ் நிறை வுரை ஆற்றினார். ஒன்றியப் பொருளாளர் ஆர்.கருப்பன் நன்றி  கூறினார்.

ஓய்வு பெற்றோர் சங்க 10ஆம் ஆண்டு அமைப்பு தினம்

அவிநாசி,ஜன.4- அவிநாசி அருகே யுவராஜ் அவென்யூ பகுதியில் சாலை யில் கழிவு நீர் விடுவதை கண்டித்து சனியன்று விடுதலைச்  சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவிநாசி ஒன்றியம், பழங்கரை ஊராட்சிக்குட்பட்ட, யுவ ராஜ் அவென்யூ பகுதியில் சுமார் 300 குடியிருப்புகள் உள்ளன.  இப்பகுதியைச் சார்ந்த குடியிருப்பு வாசிகளுக்கு சாக்கடை  கால்வாய் இல்லாததால் கழிவு நீரை சாலையில் விடும்  நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக பாதசாரிகள், வாகன ஓட்டி களுக்கு நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக விடுதலை  சிறுத்தை கட்சியின் சார்பில், வட்டார வளர்ச்சி அலுவலரி டம்  மனு அளித்துள்ளனர். இருப்பினும் தீர்வு எட்டப் படாத நிலையில் விடுதலை சிறுத்தை கட்சியினர் அப்பகுதி யில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அறிந்த அலுவ லர்கள் இடத்தை பார்வையிட்டு சாக்கடை கழிவு நீரை சாலை யில் செல்வதை தடுத்து நிறுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத் தில் விடுதலை சிறுத்தை கட்சியின் தொகுதிக் கழகச் செய லாளர் பழ.சண்முகம், ஒன்றிய நிர்வாகி ரங்கசாமி  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பெண் தூக்கிட்டு தற்கொலை

அவிநாசி, பிப்.4 – சேவூர் அருகே கருமாபாளையத்தில் பெண் வியாழ னன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சேவூர் அருகே கருமாபாளையம் கோகுலம் கார்டனில்  வசித்து வருபவர் சந்திரசேகரன் (40), இவரது மனைவி ஐஸ் வர்யா (32). இவர்களுக்கு திருமணமாகி ஆறரை ஆண்டு கள் ஆகிறது. 2 வயதில் ரிஸ்வந்த் என்ற ஆண் குழந்தை  உள்ளது. இவர்களுடன் சந்திரசேகரனின் தாய் ராஜாமணி, தந்தை சண்முகம் ஆகியோரும் வசித்து வருகின்றனர். ஐஸ் வர்யாவின் குடும்பத்தில் பிரச்சனைகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் வியாழனன்று ஐஸ்வர்யா வீட்டுக்குள் சென்று உள்புறமாக தாலிட்டுக் மின்விசிறியில் தூக்கிட்டுக் கொண்டார். அருகாமையில் இருந்தோர் கதவை உடைத்து  ஐஸ்வர்யாவை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அவிநாசி அரசு மருத்துவம னையில் மருத்துவர் பரிசோதித்துப் பார்த்து அவர் இறந்துவிட் டதாக தெரிவித்தார். இது குறித்து சேவூர் போலீசார் வழக்கு  பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தாராபுரம்: வெவ்வேறு விபத்துகளில் சிக்கிய 3 பேர் பலி

தாராபுரம், பிப். 4- தாராபுரம் பகுதியில் கடந்த சில நாட் களில் அடுத்தடுத்து நடைபெற்ற வெவ் வேறு சாலை விபத்துகளில் பெண் உள் பட மூன்று பேர் உயிரிழந்தனர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்ன மராவதி ஒய்யான்புதூர் பகுதியைச் சேர்ந்த விஸ்வநாதன் (37) மனைவி திவ்யா (31), மகன் சிவபாலன் (8),  சிவன்யாஸ்ரீ (6) ஆகியோர் குடும்பத்து டன் குண்டடம் அடுத்த மேட்டுக்கடை பகுதியில் வசித்து வருகின்றனர். விஸ்வ நாதன் அப்பகுதியில் சாலையோர தள் ளுவண்டி உணவகம் கடை நடத்தி வருகி றார். இந்நிலையில் கடந்த மாதம் விசுவ நாதன் குடும்பத்துடன் பொங்கல் பண்டி கைக்கு சொந்த ஊருக்கு சென்றுவிட்டு  இருசக்கர வாகனத்தில் குடும்பத்தினரு டன் குண்டடம் நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தார். தாராபுரம் வழியாக வரப்பாளையம் அருகே வந்தபோது சாலையிலுள்ள வேகத்தடையில் பைக்  ஏறி இறங்கியதில், பின்னால் அமர்ந்தி ருந்த மனைவி திவ்யா கீழே விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்தார். அவரை ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அவரை பரிசோதித்த மருத் துவர்கள் ஏற்கனவே திவ்யா இறந்து விட்டதாக தெரிவித்தனர். அதேபோன்று கடந்த ஜன 19ஆம்  தேதி எடப்பாடி வடுகபட்டி அடுத்த  காட்டூர் பகுதியை சேர்ந்த சவுந்தரரா ஜன் (35) பழனிக்கு பாதயாத்திரை சென் றுள்ளார். பின்னர் இரவு மினி டெம்போ வில் எடப்பாடி செல்ல தாராபுரம் வழி யாக சென்று கொண்டிருந்தனர்.அப் போது சவுந்தரராஜன் ஆட்டோவில் பின் புறம் ஓரத்தில் அமர்ந்திருந்தார். காங்கே யத்திலிருந்து தாராபுரம் நோக்கி வந்த  அரசு பேருந்து காங்கேயம் பிரிவு அருகே மினி டெம்போ மீது மோதியது. இதில் சௌந்தரராஜன் நிலைதடுமாறி கீழே விழுந்து தலையில் பலத்த அடி பட்டது. அவரை மீட்டு தாராபுரம் அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த னர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்பு மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சவுந்தர ராஜன் புதனன்று இரவு சிகிச்சை பல னின்றி இறந்தார். அதேபோன்று தாராபுரம் நேருநகர்  மேற்கு தெருவை சேர்ந்த முத்தான் மகன்  மணி (40) இவர் கடந்த 22ஆம் தேதி  இரவு 7 மணிக்கு தாராபுரம் திருப்பூர்  சாலையில் பூளவாடி பிரிவு சாலையை  டிவிஎஸ் மொபெட்டில் கடக்க முயன்ற போது மேற்கு வங்கம் பதிவு எண்  கொண்ட லாரி மொபெட் மீது மோதி யது. அதில் பலத்த காயமடைந்த மணி  அரசு மருத்துவமனையில் சேர்த்து  முதலுதவி சிகிச்சை பெற்றுபின் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் இந்நிலையில் இவரும் வியாழனன்று இரவு சிகிச்சை பலனின்றி இறந்தார். விபத்து சம்பவங் கள் குறித்து தாராபுரம் காவல் ஆய்வா ளர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றார்.

அணைகளின் நிலவரம் 

திருமூர்த்தி அணை 
நீர்மட்டம்:47.89/60அடி நீர்வரத்து:928கன அடி
வெளியேற்றம்:1128கனஅடி
மழையளவு:18மிமீ

அமராவதி அணை 
நீர்மட்டம்:71.34/90அடி.நீர்வரத்து:236கனஅடி
வெளியேற்றம்:376கனஅடிமழையளவு:18மிமீ

தாராபுரம் அரசு மருத்துவமனை விரிவாக்கத்திற்கு  ரூ. 24 கோடி நிதி ஒதுக்கியும் பணிகள் துவங்கவில்லை

தமிழக முதல்வருக்கு சிபிஎம் மனு

தாராபுரம், பிப்.4- தாராபுரம் அரசு மருத்துவமனை விரிவாக்க பணிகளுக்கு ரூ. 24 கோடி  நிதி ஒதுக்கப்பட்டும், இன்று வரை விரி வாக்க பணிகள் துவங்கப்பட வில்லை. எனவே உடனடியாக விரி வாக்க பணிகளை விரைந்து முடிக்க கோரி தமிழக முதல்வருக்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனு  அனுப்பப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாராபுரம் தாலுகா செயலாளர் என். கனகராஜ், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது, தாராபுரம் அரசு மருத்துவமனை பழமை வாய்ந்த மருத்துவமனை ஆகும். இந்த மருத் துவமனையில் நாள்தோறும் நூற்றுக் கணக்கான பொதுமக்கள் வெளி  நோயாளியாகவும், உள்நோயாளி யாகவும் சிகிச்சைக்காக வருகின்ற னர்.  தாராபுரத்தைச் சுற்றியுள்ள கிரா மங்களைச் சேர்ந்த ஏராளமான நோயாளிகள் வந்து செல்லும் நிலை யில் தாராபுரம் அரசு மருத்துவம னையில் சி.டி.ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன் மற்றும் போதிய இடவசதி உள்ளிட்டவை இல்லை. இதன் கார ணமாக விபத்து மற்றும் எலும்பு முறிவு சிகிச்சைக்கு வரும் அவசர பிரிவு நோயாளிகள் கோவைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இத னால் பொதுமக்கள் கடும் சிரமத் திற்கு உள்ளாகின்றனர். இதுகுறித்து  பல முறை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதற்கிடையே திமுக தலைமையி லான அரசு பொறுப்பேற்ற பிறகு தாரா புரம் மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாகத் தரம் உயர்த்தி அறிவிப்பு வந்தது. ஆனால் பின்னர் காங்கேயம் அரசு  மருத்துவமனையை மாவட்ட மருத்து வமனையாகத் தரம் உயர்த்தி அர சாணை வெளிவந்தது. இந்நிலையில்  தாராபுரம் அரசு மருத்துவமனையை விரிவாக்கம் செய்ய தமிழக அரசு ரூ.  24 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக வும் இதற்காக தாராபுரம் அரசு மருத் துவமனை பின்புறம் 1 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.  இதைத்தொடர்ந்து, மருத்துவ மனை கட்டிட பணிகளுக்கு  அடிக்கல்  நடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. ஆனால், தற்போது வரை விரிவாக்க பணிகள் துவங்கப்படவில்லை. எனவே “களப்பணியில் தமிழ்நாடு முதல்வர்” என்ற திட்டப்படி தாராபுரம் அரசு மருத்துவமனையை முதல்வர் ஆய்வு செய்து விரிவாக்க பணிகளை  விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள் ளது.

அண்ணா நினைவு நாள்:  கோவிலில் பொது விருந்து

திருப்பூர், பிப். 4 - தமிழக முன்னாள் முதல் வர் அறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தை முன் னிட்டு திருப்பூரில் உள்ள  ஈஸ்வரன் கோயில், பெரு மாள் கோயிலில் பொது விருந்து நிகழ்ச்சி நடை பெற்றது.வெள்ளியன்று மதி யம் நடைபெற்ற பொது  விருந்து நிகழ்ச்சியில் திருப் பூர் மாவட்ட ஆட்சியர் எஸ். வினீத், மாநகராட்சி ஆணை யர் பவன்குமார் ஜி.கிரியப் பனவர் மற்றும் இந்து சமய  அறநிலையத் துறை இணை  ஆணையர் சி.குமரதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டு உணவு சாப்பிட்ட னர்.

நாளை காவலர் தேர்வு பணிகள் தொடக்கம்


தருமபுரி, பிப்.4- தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய 3 மாவட் டங்களில் தமிழ்நாடு காவல் துறை முதல் நிலை காவ லர்களுக்கான தேர்வு பணிகள் தருமபுரியில் திங்களன்று (நாளை) முதல் தொடங்கப்பட உள்ளது. இதுதொடர்பாக தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் ஸ்டீபன் ஜேசுபாதம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு காவல் துறையில் முதல்  நிலை காவலர்கள் (ஆண்) தேர்வுக்கான அறிவிப்பு அண்மை யில் வெளியாகி இருந்தது. அதன் அடிப்படையில் தருமபுரி மாவட்டத்தில் இதற்கான தேர்வுப் பணிகள் பிப்.6 ஆம் தேதி  (நாளை) முதல் தொடங்குகின்றன. தருமபுரியை அடுத்த வெண்ணாம்பட்டி ஆயுதப்படை வளாகத்தில் நடக்கவுள்ள இந்த தேர்வில் தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய 3 மாவட்டங்களில் இருந்து விண்ணப்பித்த 1,138 விண்ணப்ப தாரர்கள் பங்கேற்க உள்ளனர். இவர்களில் முன்னாள் படை வீரர்கள் 60 பேரும் அடங்குவர். முதற்கட்ட தேர்வாக சான்றி தழ் சரிபார்ப்பு, உயரம், மார்பளவு சரிபார்த்தல் மற்றும் 1500  மீட்டர் ஓட்டம் ஆகிய பணிகள் திங்களன்று (நாளை) முதல் பிப்.8 ஆம் தேதி வரை மேற்கொள்ளப்படும். இந்த முதற் கட்ட தேர்வுக்கு நாளொன்றுக்கு 400 விண்ணப்பதாரர்கள் வீதம் அனுமதிக்கப்படுவர்.  இந்த தேர்வில் தேர்வு பெறுவோர் நாளொன்றுக்கு 350  பேர் வீதம் பிப்.9 ஆம் தேதி முதல் நடக்கவுள்ள கயிறு ஏறுதல், நீளம் அல்லது உயரம் தாண்டுதல், 100 அல்லது 400 மீட்டர் ஓட்டம் ஆகியவற்றில் பங்கேற்க அனுமதிக்கப் படுவர். இந்த காவலர் தேர்வில் பங்கேற்க வருவோர் செல் போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் கருவிகள் எதையும் தேர்வு  வளாகத்துக்கு எடுத்துவரக் கூடாது. நகைகள் அணிந்து வரக் கூடாது. சான்றிதழ்களை தங்களின் சொந்த கண்காணிப்பில் வைத்துக் கொள்ள வேண்டும். இருசக்கர வாகனங்களில் வரு வோர் தலைக்கவசம் அணிந்து வர வேண்டும். முகக்கவசம் உள்ளிட்ட கொரோனா தடுப்பு விதிமுறைகளையும், தேர்வு விதிமுறைகளையும் தவறாமல் பின்பற்ற வேண்டும். தேர்வில் பங்கேற்பவர்கள் உரிய அனுமதி பெறாமல் வளாகத்தில் இருந்து வெளியேறக் கூடாது. அதேபோல, தேர் வில் பங்கேற்க வரும் விண்ணப்பதாரர்கள் கட்சிகள், அமைப் புகள், பயிற்சி மையங்கள் போன்றவை சார்ந்த வண்ணங்கள் மற்றும் வாசகங்கள் இடம்பெற்ற உடைகளை அணிந்து வரக் கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கடமடை கால்நடை மருத்துவமனையை மூட முயற்சி - சிபிஎம்  கண்டனம் 

பென்னாகரம், பிப்.4- பென்னாகரம் அருகே உள்ள கடமடை கால்நடை மருத்து வமனையை மூட நடவடிக்கை எடுக்கும் கால்நடை துறைக்கு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. பென்னாகரம் வட்டம், சின்ன கடமடையில் கால்நடை கிளை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இம்மருத்து வமனையை ஒட்டிய 10 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட கிரா மங்களைச் சேர்ந்த விவசாயிகள் சினை ஊசி போடவும்,  கோமாரி போன்ற நோய்களுக்கு மருத்துவம் செய்யவும் இம்மருத்துவமனைக்கு வருகின்றனர். இந்நிலையில், மருத் துவமனையை தரம் உயர்த்தி,  கட்டிடப் பணியைத் தொடங்க  வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் கடந்த நவ.18 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இக்கோரிக்கைக்கு செவி சாய்த்து கால்நடை மருத்துவ மனையைத் தரம் உயர்த்தி, மருத்துவமனை கட்டிடப்  பணி களைத் தொடங்குவதற்கு பதிலாக,   ஏற்கனவே செயல்பட்டு வருகிற பகுதி நேர கால்நடை மருத்துவமனையையும் மூடு கின்ற செயலில்  கால்நடை துறை ஈடுபட்டுள்ளது. கடந்த பிப்.1 ஆம் தேதி முதல் மருத்துவமனைக்கு வருகின்ற விவசாயிகள் மருத்துவமனை மூடி இருப்பதைக் கண்டு ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இதுகுறித்து சிபிஎம் பென்னாகரம் கிழக்கு ஒன்றிய செய லாளர் ஜி.சக்திவேல் கூறுகையில், சின்ன கடமடையில் கால் நடை கிளை மருத்துவமனையை மூடக்கூடாது. உடனடி யாக மூடப்பட்ட மருத்துவமனையை திறப்பதுடன், தரம் உயர்த்தி முழு நேர மருத்துவமனையாக செயல்பட நடவ டிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

கடன் தொல்லையால் இளைஞர் தற்கொலை

ஈரோடு, பிப்.4- ஈரோட்டில் கடன் தொல்லையால் இளை ஞர் ஒருவர் தற்கொலை செய்துள்ளார். ஈரோடு, பெரியார் நகர், சிதம்பரம் கால னியைச் சேர்ந்தவர் மதன்குமார் (29). இவர்  பல்வேறு இடங்களில் கடன் பெற்றுள்ளார். இதனைத் திருப்பிச் செலுத்த தனது இரு  சக்கர வாகனம், நகையை விற்றும் வாங்கி யிருந்த கடனை செலுத்த முடியவில்லை. இதனால் மனஉளைச்சளில் இருந்து வந்த  நிலையில் கடந்த 31ஆம் தேதி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.  இந்நிலையில் வேலை முடித்து வீட்டிற்கு வந்த மதன்குமாரின் பெற்றோர் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ந் தனர். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு  ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் மருத்துவமனை செல்லும்  வழியி லேயே இறந்து விட்டதாக மருத்துவர் கூறி னார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போக்குவரத்து போலீசாருக்கு மின்விசிறியுடன் கூடிய நிழற்குடை

கோவை, பிப்.4- கோவையில் போக்குவரத்து காவலர்க ளுக்கு மின்விசிறியுடன் கூடிய நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளதால், போலீசார் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோவையில் நீதிமன்றம், ஆட்சியர் அலு வலகம் இருக்கும் சாலையில் மாநகர காவல் ஆணையர் அலுவலகம் உள்ளது. இந்த  சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும், காவல் ஆணை யர் அலுவலகத்துக்கு தினமும் பொதுமக் கள் மற்றும் பல்வேறு காவல் நிலையங்களிலி ருந்து காவல் அதிகாரிகள் வருகின்றனர். அந்த வாகனங்கள் ஆணையர் அலுவலகத் துக்குள் திரும்பும் போது விபத்து ஏதும் ஏற் பட்டு விடாமல் இருக்க போக்குவரத்து காவ லர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த காவலர் கள், ஆணையர் அலுவலகத்துக்கு உள்ளே  இருந்தும், வெளியே இருந்தும் வாகனங்கள் வரும் போது போக்குவரத்தை ஒழுங்கு படுத்துகின்றனர். இதனால் போக்குவரத்து போலீசார் நீண்ட நேரம் வெயிலில் நின்று பணி செய்யும் நிலை உள்ளது. இந்நிலையில் கோவை மாநகர காவல்  ஆணையர் அலுவலகம் முன்பு நின்று பணி யாற்றும் போக்குவரத்து போலீசாருக்காக மின்விசிறியுடன் கூடிய நவீன நிழற்குடை அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் அங்கு  பணியாற்றும் போலீசார் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

பள்ளிக்குள் புகுந்த கரடி

உதகை, பிப்.4- நீலகிரி மாவட்டம், குன் னூர் பகுதியில் அண்மை  காலமாக கரடிகளின் நட மாட்டம் அதிகரித்துள்ளது. தேயிலைத் தோட்டங்களி லும், குடியிருப்புப் பகுதிகளி லும் கரடிகள் சுற்றித்திரிவ தால் பொதுமக்கள் அச்சம டைந்துள்ளனர். இந்நிலை யில், குன்னூர் அருகே உலிக் கல் பகுதியில் உள்ள அரசு  உதவிபெறும் பள்ளி வளா கத்தில் உள்ள சமையல் அறைக்குள் புகுந்த கரடி  அங்கிருந்த எண்ணை, அரிசி, பருப்பு உள்ளிட்ட வற்றை உட்கொண்டு சென் றது. இதன் காரணமாக அப் பகுதி மக்கள் அச்சமடைந் துள்ளனர். இந்த கரடியை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் அல்லது கூண்டுவைத்துப் பிடிக்க வேண்டும் என வனத்துறை க்கு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


 

திருப்பூர், பிப். 4 – தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க 10 ஆம் ஆண்டு அமைப்பு தினத்தை ஒட்டி திருப்பூரில் வெள்ளி யன்று கொடியேற்று விழா நடைபெற்றது. திருப்பூர் சபாபதி புரம் சாலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக நடை பெற்ற இந்த நிகழ்ச்சிக்கு என்.குருராஜன் தலைமை  ஏற்றார். வட்டக்கிளைத் தலைவர் பி.மகுடேஸ்வரன் கொடி யேற்றினார். மாவட்டத் தலைவர் ஜி.சண்முகம், துணைத்  தலைவர் எஸ்.நடராஜன், மாவட்ட ஓய்வு பெற்ற காவலர் நலச்  சங்கத் தலைவர் வி.பி.பாலகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்திப்  பேசினர். நிறைவாக பொருளாளர் சுந்தர்ராஜன் நன்றி கூறினார்.

சாலையில் கழிவு நீர் விடுவதை  கண்டித்து விசிக ஆர்ப்பாட்டம்