districts

img

தொழிற்சங்க விரோதப் போக்கை கடைப்பிடிப்பதா? சாலைப் பணியாளர் சங்கத்தினர் தர்ணா

திருப்பூர், மே 26 - திருப்பூரில் நெடுஞ்சாலைத் துறை சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்புக் கண்காணிப்புப் பொறியாளரைக் கண்டித்து நெடுஞ் சாலைத் துறை சாலைப் பணியா ளர் சங்கத்தினர் மண்டல அளவில் கண்டன தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் காலேஜ் ரோடு நெடுஞ்சாலைத் துறை கண்கா ணிப்பு பொறியாளர் அலுவலகம் முன்பாக வியாழக்கிழமை நடை பெற்ற இந்த போராட்டத்தில் எஸ். அண்ணாதுரை, பி.செவ்வந்திலிங் கம், கே.வெங்கிடுசாமி, ஆர்.செங் கோட்டையன் ஆகியோர் தலைமை வகித்தனர். சங்கத்தின் மாநிலத் தலைவர் மா.பாலசுப்பிரமணியன் போராட்டத்தைத் தொடக்கி வைத் துப் பேசினார்.  இதில் நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர்களின் கோரிக்கைகளை எடுத்துரைத்து தீர்வு காண முற்படும் சங்க நிர்வா கிகளை சந்திக்க மறுத்து தொழிற் சங்க விரோத போக்கை கடைபி டித்து வரும் திருப்பூர் மாவட்ட நெடுஞ்சாலைத்துறை கட்டுமா னம் மற்றும் பராமரிப்பு கண்கா ணிப்பு பொறியாளரை கண்டித் தும், அரசுக்கு அவப்பெயரை ஏற்ப டுத்தி வரும் நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பணி வட்ட கண்காணிப்பு பொறி யாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், சாலைப் பணியா ளர்களுக்கு ஈரோடு, கரூர், திருப் பூர் கோட்டங்களில் கருவி தளவா டங்கள், காலணிகள் வழங்க வேண் டும்

என வலியுறுத்தியும், சாலை பணியாளர்கள் சிறப்பு நிலைக்கு தகுதி பெற்றதற்கு உரிய உத்தரவு கள், பணப்பலன்கள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் கோரிக்கைகளை விளக்கி திருப்பூர் ஆர்.ராமன், தாராபுரம் எல்.தில்லையப்பன், ஈரோடு எஸ். ராஜேந்திரன், கரூர் பி.பழனிச்சாமி ஆகிய கோட்டச் செயலாளர்கள்  உரையாற்றினர். அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ஏ.ராணி வாழ்த்திப் பேசினார். சங்கத்தின் மாநிலப் பொருளாளர் இரா.தமிழ், செயலாளர் சு.செந்தில்நாதன்,  துணைத்தலைவர் தி.ராஜமாணிக் கம் ஆகியோர் சிறப்புரை ஆற்றி னர். நிறைவாக சங்கத்தின் மாநி லப் பொதுச் செயலாளர் ஆ.அம்ச ராஜ் தர்ணாவை நிறைவு செய்து  வைத்துப் பேசினார். கோட்டப் பொருளாளர் எஸ்.முருகசாமி நன்றி கூறினார்.