திருப்பூர், ஏப்.7- பணி நீக்கு காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி அறிவிக்க வலியுறுத்தி நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கம் திருப்பூர் கோட்டம் சார்பில் வெள் ளியன்று தபால் அனுப்பும் போராட்டம் நடை பெற்றது. தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தின் மாநில செயற்குழு முடிவின் படி, சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்கு காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தின் சார்பில் தபால் அனுப்பும் போராட் டம் நடைபெற்றது. திருப்பூர் கோட்டம் தலைமை தபால் நிலையத்தில் நடைபெற்ற இந்த இயக்க திற்கு திருப்பூர் கோட்டத் தலைவர் எஸ்.அண்ணாதுரை தலைமை ஏற்றார். இதில் கோட்ட செயலாளர் ராமன் முன்னிலை வகித் தார். கோட்ட இணைச் செயலாளர் செல்வ ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.