districts

img

சாலை பணியாளர்கள் தபால் அனுப்பும் போராட்டம்

சேலம், ஏப் 06 - சாலை பணியாளர்களின் 41 மாத பணி  நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்ப டுத்தி அறிவிக்க வேண்டும் என வலியு றுத்தி தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு சாலை  பணியாளர் சங்கம் சார்பில் தபால் அனுப்பும்  போராட்டம் எடப்பாடி பகுதியில் நடைபெற் றது. நெடுஞ்சாலைத்துறையில் பணியாற்றி வரும் சாலை பணியாளர்களின் 17 ஆண்டு காலமான கோரிக்கையாக வலியுறுத்தப் பட்டு வரும் சாலை பணியாளர்களின் 41 மாத  பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப் படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட வாழ்வா தார கோரிக்கைகளை நிறைவேற்றி தர  வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியா ளர்கள் சங்கத்தின் சார்பில் நீண்ட நாட்களாக  வலியுறுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக முதல்வ ருக்கு தபால் அனுப்பும் போராட்டம் எடப் பாடி பகுதியில் நடைபெற்றது. எடப்பாடி தபால் நிலையத்தில் நடைபெற்ற போராட் டத்திற்கு எடப்பாடி கோட்ட செயலாளர் கலை வாணன் அந்தோணி தலைமை தாங்கினார். இதில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க சேலம் மாவட்ட செயலாளர் சுரேஷ் உள்ளிட்ட பலர்  பங்கேற்றனர்.