districts

img

சாலை பாதுகாப்பு வார விழா:

தாராபுரம், ஜன.14-   தாராபுரத்தில் சாலை பாதுகாப்பு வார விழாவை முன் னிட்டு, போக்குவரத்து காவல் துறை சார்பில் காவல் துணை  கண்கானிப்பாளர் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா சனியன்று நடைபெற்றது. சார்பு நீதிபதி மரக்கன் றுகளை நட்டு வைத்தார். தாராபுரம் காவல் துணை கண்கானிப்பாளர் தனராசு தலை மையில் நடைபெற்ற இவ்விழாவில், தாராபுரம் வட்ட சட்ட  குழு தலைவரும் சார்பு நீதிபதியுமான சார்பு நீதிபதி எம்.தர்ம பிரபு மரக்கன்றுகளை நட்டு வைத்தார். அப்போது அவர் கூறி யதாவது, சாலை பாதுகாப்பு வார விழாவினை முன்னிட்டு  போக்குவரத்து காவலர்கள் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இயற்கை வளத்தை  பாதுகாக்கும் வகையில் அமையும் என கூறினார். விழாவில்  குற்றவியல் நடுவர் நீதிபதி எஸ்.பாபு, வழக்கறிஞர் சங்க தலை வர் கலை செழியன், செயலாளர் ராஜேந்திரன், துணைச்செய லாளர் வாரணவாசை, அரசு வழக்கறிஞர் மணிவண்ணன் ஆகி யோர் கலந்து கொண்டனர்.