திருப்பூர், ஜூன் 4 - திருப்பூர் மாநகராட்சி, 25ஆவது வார்டுக்கு உட் பட்ட சோளிபாளையம் பகுதியில் சிதிலமடைந்த தார்ச்சாலையை செப்பனிட கோரி கவுன்சிலர் தலை மையில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருப்பூர் நகர், 15 வேலம்பாளையத்திலிருந்து கணியாம் பூண்டி செல்லக்கூடிய சாலை பல கிலோ மீட்டர் நீளத்திற்கு குண்டும், குழியுமாக இருப்பதுடன் சேறும், சகதியுமாக படுமோச மாக உள்ளது. தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பயணிக்கும் இந்த சாலை நீண்ட நாட்களாக சீரமைக்கப்படாமல் உள்ளது. இத்துடன் கடந்த சில நாட்களாக மழையும் பெய்துவரும் நிலையில் வாகனங் களில் செல்ல முடியாமல், நடந்து செல் வோரும் போக முடியாமல் மிகவும் அவதிப் படும் நிலை ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில், உடனடியாக இந்த சாலையை சீரமைக்கும் பணியை தொடங்க வேண்டும் என வலியுறுத்தி 25ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் தங்கராஜ் தலைமை யில், இப்பகுதி மக்கள் சனியன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர் களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் நெடுஞ்சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி நடவ டிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து ஒரு மணி நேரம் நீடித்த மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது.