districts

img

குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியல்

உடுமலை, நவ.26- மைவாடி ஊராட்சி நிர்வாகத்திடம் பல  முறை கோரிக்கை வைத்தும் குடிநீர் வழங்கா ததை கண்டித்து சனிக்கிழமை பொதுமக் கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட் டனர். மடத்துக்குளம் தாலூகா, மைவாடி ஊராட்சி நரசிங்காபுரம் கிராமத்தில் கடந்த சில வாரங்களாக பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கவில்லை. ஊராட்சி நிர்வாகத்திடம் பல  முறை கோரிக்கை வைத்தும் குடிநீர் விநியோ கத்தை சரி செய்யாததால் சனிக்கிழமை பொள்ளாச்சி - திண்டுக்கல் தேசிய நெடுச்சா லையில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைதொடர்ந்து மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் மறியல் போராட்டம் நடத்திய பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி னார்கள். நரசிங்காபுர பொதுமக்களுக்கு உட னடியாக குடிநீர் விநியோகம் வழங்கப்படும் என்ற உறுதி அளித்ததையடுத்து மறியல்  போராட்டம் முடிவுக்கு வந்தது.