கோவை, டிச.27- அரசு புறம்போக்கு நிலத்தில் பல ஆண்டு களாக வசித்து வரும் பொதுமக்களை காலி செய்யக்கோரி அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டி மிரட்டுவதாக குற்றஞ்சாட்டி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத் தில் ஈடுபட்டனர். இதுகுறித்து பெரியநாயக்கன்பாளை யத்தை அடுத்த அம்சா நகர் பகுதி மக்கள் கூறுகையில், இப்பகுதியில் நாங்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகி றோம். எங்கள் பகுதியில் குடிநீர் விநியோ கம் உள்ளது. ஆனால், இதுவரை மின்சார வசதி மற்றும் அடிப்படைத் தேவைகள் எது வும் செய்து தரப்படவில்லை. இலவச வீட்டு மனை பட்டாவும், இதுவரை வழங்கப்பட வில்லை. இதுகுறித்து பலமுறை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், அரசு அதிகாரிகள் திடீ ரென வீடுகளை காலி செய்ய வலியுறுத்தி, வீடுகளில் நோட்டீஸ் ஒட்டி வருகின்றனர். எனவே, வேறுவழியின்றி ஆட்சியர் அலுவ லகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள் ளோம். மேலும், எங்களுக்கு வேறு இடம் தரு வதாக அரசு அதிகாரிகள் கூறினாலும், அந்த இடம் வனப்பகுதிக்குள் இருப்பதால் தங்க ளால் அங்கு குடியிருக்க முடியாது. நாங்கள் இருக்கும் இடத்திலேயே வசித்து கொள்ள வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனைத்தொ டர்ந்து காவல்துறை அதிகாரிகள் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி மாவட்ட ஆட்சியரி டம் மனு கொடுக்க அழைத்து சென்றனர்.
மாதர் சங்கத்தினர் மனு
கத்தின் கோவை மாவட்ட நிர்வாகிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, கோவை செல்வபுரம் கல்லாமேடு பகுதி யில் 120 குடும்பங்கள் 45 ஆண்டு காலமாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசின் சார்பாக அடுக்குமாடி குடியிருப்பு கள் கட்டித்தர அப்பகுதி குடிசைகள் அப் புறப்படுத்தப்பட்டன. ஒன்றரை ஆண்டு களில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித் தருவதாக அம்மக்களிடம் உறுதியும் அளிக்கப்பட்டது. ஆனால், நான்கு ஆண்டு களான நிலையில், குடியிருப்புகள் கட்டப் பட்டும் சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கும் அந்த வீடுகள் கொடுக்கப்படாத நிலை உள் ளது. சமூகத்தில் மிகவும் பின்தங்கிய நிலை யில் இருக்கும் அப்பகுதி மக்களுக்கு வாடகை கொடுத்து வாழ்க்கை நடத்துவது என்பது பெரும் கேள்விக்குறியாக உள் ளது. ஆகவே கட்டப்பட்ட குடியிருப்புகளை உடனடியாக அம்மக்களுக்கு வழங்கி உத் தரவிட வேண்டும் என அதில் கூறப்பட்டுள் ளது.